search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ்"

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து.
    • நான் அதுபோன்ற டிரெசிங் ரூமில் இருந்தால் அப்படித் தான் நினைப்பேன்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடிய எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நவம்பர் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

    "இந்த ஆண்டு போட்டியை பார்க்கும் போது, இந்தியா இதுவரை விளையாடியதை போன்ற மனநிலையில் எதிர்கொள்ளும் நினைப்பில் இருக்கும். இதுவே அவர்களின் மனநிலையாக இருக்கும், நான் அதுபோன்ற டிரெசிங் ரூமில் இருந்தால் அப்படித் தான் நினைப்பேன். இதுவரை இந்த வழிமுறை நல்ல பலன் கொடுத்துள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நிலைமை கைமீறி சென்றுவிடும்."

    "அவர்கள் தோல்வியை சந்திக்காமல் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன். இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அரையிறுதி சமயத்தில் ஏதேனும் போட்டியில் எதிர்பார்க்காத முடிவு கிடைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படலாம். அவர்கள் இதுபோன்ற அச்சம் கொள்ளாமல், எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிட வேண்டும்," என்று விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்து உள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    • ஷிம்ரன் ஹெட்மயர் அரைசதம் கடந்து அசத்தினார்.

    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய கைல் மேயர்ஸ் மற்றும் பிரான்டன் கிங் முறையே 7 பந்துகளில் 17 ரன்களையும், 16 பந்துகளில் 18 ரன்களையும் அடித்தனர். அடுத்து வந்த ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 29 பந்துகளில் இரண்டு சிக்சர், மூன்று பவுன்டரிகளுடன் 45 ரன்களை குவித்து சாஹல் பந்தில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

     

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோவ்மேன் பொவெல் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினர். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். இவர் 39 பந்துகளில் 61 ரன்களை குவித்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை குவித்துள்ளது.

    இந்திய சார்பில் அர்தீப் சிங் மூன்று விக்கெட்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.
    • இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    ஐந்து 20 ஓவர் போட்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
    • கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கான டான் போடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக பிரான்டன் கிங் மற்றும் கெயில் மேயர்ஸ் களமிறங்கினர். இதில், கெயில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அலிக் அத்தனாஸ் விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 24 ஓவரில் 181 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி 121 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜடேஜா 61 ரன்னும், யஷஸ்வி ஜெய்ஷ்வால் 57 ரன்னும், அஷ்வின் 56 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பிராத்வெய்ட் 75 ரன்கள் எடுத்தனர். அலிக் 37 ரன்னும், சந்தர்பால் 33 ரன்னும், மெக்கென்சி 32 ரன்னும் எடுத்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது தடைப்பட்டது. 3ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிராஜின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா சார்பில் சிராஜ் 5 விக்கெட்டும், முகேஷ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில், ரோகித் சர்மாவும், யாஷ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையில் இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதைதொடர்ந்து, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிரீத்வொயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் விளையாடினர். இதில், பரீத்வொயிட் 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மெக்கன்சி ரன் எடுக்காமல் வெளியேறினார்.

    பின்னர், 4ம் நாள் ஆட்ட முடிவில், சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    4ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவை இருந்தது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. களத்தில், சந்தர்பவுல் மற்றும் பிளாக்வுட் இறங்கினர்.

    ஆனால், அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    மழை இடைவிடாமல் பெய்து வருவதால், 5ம்நாள் ஆட்டமான இன்றைய போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2வது டெஸ்ட போட்டி டிராவில் முடிந்த நிலையில், தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

    • இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி 121 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜடேஜா 61 ரன்னும், யஷஸ்வி ஜெய்ஷ்வால் 57 ரன்னும், அஷ்வின் 56 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

    பிராத்வெய்ட் 75 ரன்கள் எடுத்தனர். அலிக் 37 ரன்னும், சந்தர்பால் 33 ரன்னும், மெக்கென்சி 32 ரன்னும் எடுத்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது தடைப்பட்டது.

    3ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிராஜின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ் 5 விக்கெட்டும், முகேஷ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில், ரோகித் சர்மாவும், யாஷ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி 2வது இன்னிங்சில் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையில் இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதைதொடர்ந்து, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிரீத்வொயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் விளையாடினர். இதில், பரீத்வொயிட் 28 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து களமிறங்கிய மெக்கன்சி ரன் எடுக்காமல் வெளியேறினார்.

    பின்னர், 4ம் நாள் ஆட்ட முடிவில், சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    4ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.
    • 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.

    இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.

    விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜடேஜாவும் அரை சதமடித்தார். 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், யாஷவி ஜெய்ஷ்வால் 57 ரன்களும், அஷ்வின் 56 ரன்களும், இஷான் கிஷான் 25 ரன்களும், ஷூப்மன் கில் 10 ரன்களும், ராகானே 8 ரன்களும், ஜெய்தேவ் 7 ரன்களும் எடுத்தனர். சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.

    இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர். இதில், சந்தர்பால் 33 ரன்களில் அவுட்டானார். பின்னர், கிர்க் மெக்சென்சி களமிறங்கினார். பிராத்வெய்ட் 37 ரன்களுடனும், மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. களத்தில் இருந்த பிராத்வெய்ட் மற்றும் மெக்கென்சி ஆட்டத்தை தொடங்கினர். இதில், பிராத்வெய்ட் அரை சதம் அடித்து 75 ரன்கள் எடுத்தார். மெக்கென்சி 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து, விளையாடிய பிளாக்வுட் 20 ரன்களும், ஜோஷ்வா டா சில்வா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தற்போது, அலிக் 37 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 108 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

    • 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.

    இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

    ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜடேஜாவும் அரை சதமடித்தார். 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், யாஷவி ஜெய்ஷ்வால் 57 ரன்களும், அஷ்வின் 56 ரன்களும், இஷான் கிஷான் 25 ரன்களும், ஷூப்மன் கில் 10 ரன்களும், ராகானே 8 ரன்களும், ஜெய்தேவ் 7 ரன்களும் எடுத்தனர். சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.

    இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது.

    இந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர்.

    இதில், சந்தர்பால் 33 ரன்களில் அவுட்டானார். பின்னர், கிர்க் மெக்சென்சி களமிறங்கினார்.

    பிராத்வெய்ட் 37 ரன்களுடனும், மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

    • விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
    • ஜடேஜாவும் அரை சதமடித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    ஜடேஜாவும் அரை சதமடித்தார். 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், யாஷவி ஜெய்ஷ்வால் 57 ரன்களும், அஷ்வின் 56 ரன்களும், இஷான் கிஷான் 25 ரன்களும், ஷூப்மன் கில் 10 ரன்களும், ராகானே 8 ரன்களும், ஜெய்தேவ் 7 ரன்களும் எடுத்தனர்.

    சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்துள்ளது.

    இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

    • முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்திருந்தது.
    • இறுதியாக, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

    அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.

    கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 (161), ரோகித் சர்மா 80 (143) ரன்கள் சேர்த்தனர்.

    தொடர்ந்து, யாஷவி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும், கில் 10 ரன்களும், ராஹானே 8 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியாக, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்டியின், முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும்.

    இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.

    தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது.

    இந்த ஆட்டத்தின்போது பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றது.

    முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது.
    • நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார்.

    உலகக்கோப்பை தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்- நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

    இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 30 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் 5 சாதனைகள் அரங்கேறியுள்ளது.

    போட்டியை சமன் செய்த அதிகபட்ச ஸ்கோர்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை டை ஆனதன் மூலம் நெதர்லாந்து ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்தது. அவர்கள் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 374 ரன்களை சமன் செய்தனர். இதற்கு முன் நேப்பியரில் 2008-ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 340 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    சேசிங் செய்யும் போது மூன்றாவது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்

    நெதர்லாந்தின் 374 ரன், ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்தியதில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். தென்னாப்பிரிக்கா 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன்களை சேஸ் செய்து அதிகபட்ச சேசிங் ஆகும்.

    சூப்பர் ஓவரில் அதிக ரன்

    இந்தப் போட்டியில், லோகன் வான் பீக் கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். 30 ரன்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

    முந்தைய சாதனையாக 2008-ல் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டியில் 25 ரன்களும், கடந்த ஆண்டு பெண்கள் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் 25 ரன்கள் எடுத்ததே ஆகும்.

    நெதர்லாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்த தேஜா நிடமனுரு

    நெதர்லாந்து அணிக்காக தேஜா நிடமனுரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் மார்ச் தொடக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தனது முதல் சதத்தை அடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிக்கோலஸ் பூரன் மூன்றாவது அதிவேக சதம் அடித்தார்

    63 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த மூன்றாவது வீரராக நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 1999 -ல் வங்காளதேசத்திற்கு எதிராக பிரையன் லாரா 45 பந்துகளிலும், 2019-ல் இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 55 பந்துகளில் அதிவேக சதம் விளாசினர்.

    அதற்கு அடுத்தப்படியாக ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது மூன்றாவது அதிவேக சதமாகும்.

    ×