search icon
என் மலர்tooltip icon

    ஜிம்பாப்வே

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 156 ரன்கள் எடுத்து வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது.

    ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த நிலையில் டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்திலும், 3வது ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.

    • முதலில் ஆடிய இந்தியா 182 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. அடுத்து ஆடிய டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடியது. டியான் மியர்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி பெற்றது.

    பாகிஸ்தான் 142 வெற்றியுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 111 வெற்றியுடன் 3வது இடத்திலும் உள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களை எடுத்து தோற்றது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 234 ரன்களைக் குவித்தது. முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

    ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் வெஸ்லி மதேவரே ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென்னெட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    • முதலில் ஆடிய இந்தியா 234 ரன்களை குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

     அடுத்து கெய்க்வாட்டுடன் ரிங்கு சிங் இணைந்தார். ருத்ராஜ் அரை சதம் கடந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களைக் குவித்துள்ளது. ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார்.

    முதலில் நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியில் இறங்கினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார்.

    • இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடுகிறது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார். பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். வாஷிங்டன் ஓரளவு ஆடி 27 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

    டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, சதாரா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    அபிஷேக் சர்மா, துருவ் ஜூரல் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இன்று அறிமுகமாகின்றனர்.

    • வன ஆர்வலரான சிமியோன் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
    • கரீபா ஏரி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும் சில வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து வைரலாகி விடும். அந்த வகையில் தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ள சிங்க வேட்டையின் வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், ஜிம்பாப்வேயில் மட்டுசடோனா பகுதியில் தேசிய பூங்காவில் சிங்கக்கூட்டம், கொம்புகள் கொண்ட ஆப்பிரிக்க மான் வகைகளை வேட்டையாடுவதற்காக துரத்தும் காட்சிகள் உள்ளது. வன ஆர்வலரான சிமியோன் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் கரீபா ஏரி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் படகு சவாரியின் போது எருமைகள் மற்றும் யானைக்கூட்டங்களை கண்டு பிரமித்தோம். சிறிது தொலைவில் சிங்கங்கள் கூட்டமாக இம்பாலாக்களை வேட்டையாடும் காட்சிகளை பார்த்ததும் அவற்றை வீடியோ எடுத்தோம் என்றார்.

    ×