என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ZIMvSL"

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது.

    ஹராரே:

    இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடி 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா-குசால் மெண்டிஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    பதும் நிசங்கா அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 38 ரன்னில் வெளியேறினார். இதற்கு பின் விரைவில் விக்கெட்கள் விழுந்ததால் இலங்கை அணி தடுமாறியது.

    கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அதிரடி காட்டினார். அவர் 16 பந்தில் 41 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    பிரியன் பென்னெட் 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • இந்த தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.
    • இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதன் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே அணி விவரம்:-

    சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளசிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கரவா, பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ்.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 277 ரன்களை எடுத்தது.
    • பென் கர்ரன், சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தனர்.

    ஹராரே:

    இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 79 ரன்னில் அவுட்டானார். சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்து 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி 49.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 298 ரன்களைக் குவித்தது.
    • பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்து வெளியேறினர்.

    ஹராரே:

    இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 6 விக்கெட்டுக்கு 298 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 76 ரன்னில் அவுட்டானார். கமிந்து மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்தார்.

    பொறுப்புடன் ஆடிய சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தார். அணியை வெற்றி பெறவைக்கப் போராடிய அவர் 92 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    சிக்கந்தர் ராசா அவுட்டாகும்வரை இலங்கை அணிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லை.

    இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    ×