என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தரப்பு டி20 தொடர்"

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. பென்னட் 49 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 47 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டும், ரிச்சர்ட் நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சிக்கந்தர் ராசாவுக்கு அளிக்கப்பட்டது.

    முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே தான் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது.

    • ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகள் இடையேயான 20 ஓவர் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பரபரப்பான கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 4 ரன்னில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

    கேப்டன் இப்ராகிம் ஜர்தான் 35 பந்தில் 48 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), ரகுமானுல்லா குர்பாஸ் 38 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கரீம் ஜனத் 14 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 ஓவ ரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 44 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப் கான் 28 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சீபர்ட் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் கான்வே 19 ரன்னிலும் ரச்சின் ரவீந்திரா 3, மார்க் சேப்மன் 10 என்ற அவுட் ஆகினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சீபர்ட் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் நியூசிலாந்து அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இத்தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோல்வி கண்டது.
    • இதனால் ஜிம்பாப்வே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

    ஆனால் கேப்டன் ரஸ்ஸி வான்டர் டுசென்-ரூபின் ஹெர்மன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    ஹெர்மன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வான் டர் டுசென் 52 ரன்னும், பிரெவிஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஜிம்பாப்வே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    • முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 120 ரன்கள் எடுத்தது.
    • 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.

    இந்த தொடரின் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி டிம் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சீஃபர்ட்- டெவோன் கான்வே களமிறங்கினர். இதில் சீஃபர்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து கான்வே - ரச்சின் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் 13.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
    • லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    வெல்லிங்டன்:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் விலகி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆடிய போது அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

    • வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவரே- பிரையன் பென்னட் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பிரையன் பென்னட் 20 பந்தில் 21 எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 32 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரை சதம் அடித்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    முத்தரப்பு டி20 போட்டிகளில் இன்று நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 12 பந்துகள் சந்தித்த ரிஷ்வான் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மசூத் 0 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் பாபர் அசாம் - ஷதாப் கான் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் 34 ரன்னில் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரை சதம் அடித்தார். அடுத்ததாக களமிறங்கிய முகமது நவாஷ் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்னில் களத்தில் இருந்தார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    முத்தரப்பு டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலன் - கான்வே களமிறங்கினர். பின் ஆலன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். கான்வே 35 பந்துகளில் 36 ரன்களுடனும் வில்லியம்சன் 30 பந்துகளில் 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர். பிலிப்ஸ் 18, நீசம் 5, பிரேஸ்வெல் 0, சோதி 2, மார்க் சேப்மேன் 32 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும் நவாஸ், முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

    ×