என் மலர்
நீங்கள் தேடியது "T20I tri series"
- ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
- லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
வெல்லிங்டன்:
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் விலகி உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆடிய போது அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.
- விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று நியூசிலாந்தில் தொடங்கியது. இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் ஜெயித்து வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷா மசூத் 31 ரன்னும், பாபர் ஆசாம் 22 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் விளையாடியது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக யாசிர் ஷா 42 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி ஓவரில் 20 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி நாளை நியூசிலாந்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது.

பிராண்டன் டெய்லர்
கடந்த 2016-ம் ஆண்டிற்குப் பிறகு அணியில் விளையாடாமல் இருந்த சிகும்புரா, ஹாமில்டன் மசகட்சா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதற்கிடையே, சம்பளம் பாக்கி தொடர்பாக ஜிம்பாப்வே வீரர்கள், பயிற்சி முகாமை நிராகித்து வந்தனர். இதனால் தொடர் நடக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.













