என் மலர்
நீங்கள் தேடியது "T20 leagues"
- ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.
ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகள் இடையேயான 20 ஓவர் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பரபரப்பான கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 4 ரன்னில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.
கேப்டன் இப்ராகிம் ஜர்தான் 35 பந்தில் 48 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), ரகுமானுல்லா குர்பாஸ் 38 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கரீம் ஜனத் 14 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 ஓவ ரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 44 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப் கான் 28 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- 6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் தொடர் 25 நாட்கள் நடைபெறும்.
- இதில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த தொடர் உள்ளூரில் உள்ள இளம் வீரர்ங்களை உருவாக்க உதவியாக இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 வயதே ஆன வீரர் சதம் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இப்படி இளம் வீரர்களின் திறமைகளை கண்டறியவும் அவர்களின் திறமைகளை வளர்க்கவும் டி20 லீக் உதவிகரமாக உள்ளது.
அந்த வகையில் கென்யாவில் முதன்முறையாக பிராஞ்சைஸ் அடிப்படையிலான டி20 லீக், சிகேடி20 (CKT20) என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க உள்ளது. இந்த டி20 லீக்குகள் மூலம் கிரிக்கெட்டை மீண்டும் பிரபலப்படுத்துவதற்கும், உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் வழங்குவதற்கும் கென்யா இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக் தொடர் 25 நாட்கள் நடைபெறும். இதில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும்.
இந்த லீக்கிற்கு துபாய்/இந்தியாவைச் சேர்ந்த AOS Sport Tournament நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளது. முதல் சீசனுக்கு 300,000 அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கென்யா 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. அதன்பிறகு 2011 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் 2014-ல் ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை கென்யா இழந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது.
- ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது.
இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் டி20 லீக்குகளை நடத்துகின்றன. இந்த ஆண்டு முதல் டெல்லி கிரிக்கெட் சங்கம் டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக்கை ஆரம்பித்திருக்கிறது. இந்த டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேவையில்லாமல் ஐபிஎல் முதலாளிகள் பணத்தை வீணடிக்கிறார்கள் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும் இப்படியான மாநில டி20 லீக்குகளில் தரம் மற்றும் வரவேற்பில் டிஎன்பிஎல் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உத்திர பிரதேஷ் டி20 லீக்கில் ஒரே தொடரில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய் கொடுத்து கடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. ஆனால் அவரால் பெரிய அளவில் ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-
அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து வரக்கூடியவர்கள் இந்திய முதல் தரப் போட்டிகளில் விளையாடும் பொழுது தடுமாறுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அண்டர் 19 அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களால் முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாட முடிவதில்லை.
இதேபோல மாநில டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் சையத் முஸ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பதற்கு ஐபிஎல் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது. இது நல்ல ஒரு யோசனை கிடையாது.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் சீசன் துலீப் டிராபி உடன் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்காக விளையாடும் பல வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்பது மிகவும் நல்ல விஷயம் .வீரர்களைக் கண்டறிவதற்கு இதுதான் மிகச்சிறந்த வழி. இங்கு பேட் மற்றும் பந்துவீச்சின் சிறப்பாக செயல்படக்கூடியவர்களை அடுத்து இந்திய அணிக்கு கொண்டு செல்லலாம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.






