search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியீடு"

    • தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரை இருக்கும் என ஆய்வு முடிவின்படி அறியப்பட்டு உள்ளது.
    • கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை,

    கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22ல் தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாக உள்ளது.

    தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி ராயகோட்டை, கிருஷ்ணகிரி, கோவை சுற்றுவட்டார கிராமங்களான பெரியநாயக்கன்பாளையம், சாவடி, உடுமலை, தாராபுரம் மற்றும் கர்நாட மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து வருகிறது.

    மேலும் வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி (2021-22) கத்திரி 0.24 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்ததி செய்யப்பட்டுகிறது. வர்த்தக மூலங்களின்படி கோவை சந்தைக்கு தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இதேபோல வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22) வெண்டைக்காய் 0.25 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்ப்டு 24 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வர்த்தக மூலங்களின்படி தற்போது கோவை சந்தைக்கு வெண்டைக்காய மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    பொருளாதார ஆய்வு முடிவின்படி அறுவடையின் போது (மே 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையும், நல்ல தரமான கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.27 ஆகவும், வெண்டைக்காயின் விலை ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் என அறியப்பட்டு உள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவுகளை எடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
    • மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.

    ேசலம்:

    தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.

    சேலம், நாமக்கல்

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு கால்நடை இள நிலை, முதுநிலை பட்டப்ப டிப்புகள், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும், உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு இது தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் விண்ணப்பித்த னர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இந்த நிலையில் தேர்வர்க ளுக்கான ஹால்டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக ளுக்கான தேர்வு 15-ந்தேதி யும், மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வுகள் 2 தாள்கள் கொண்டதாகும். தாள்-1 தேர்வு காலையிலும், தாள் -2 தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் நடத்தப்படு கின்றன. தேர்வர்கள் தங்க ளின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக நுழைந்து ஹால்டிக் கெட் பதிவிறக்கலாம்.

    • போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.
    • திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலை:

    பழனி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06077) வருகிற 4, 5, 6 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் வரை இயக்கப்படுகிறது.

    இந்த ெரயில் கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படுகிறது. போத்தனூருக்கு 9:31க்கு வந்து 9:32 மணிக்கு புறப்படுகிறது. கிணத்துக்கடவுக்கு 9:52க்கு வந்து, 9:53 மணிக்கு புறப்படுகிறது.பொள்ளாச்சிக்கு 10:13 மணிக்கு வந்து 10:15 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10:46க்கு வந்து 10:47 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலைக்கு 11 மணிக்கு வந்து 11:01 மணிக்கும்,மைவாடி ரோடுக்கு 11:09 மணிக்கு வந்து 11:10 மணிக்கும் புறப்படுகிறது. மடத்துக்குளத்துக்கு 11:14 மணிக்கு வந்து, 11:15 மணிக்கு புறப்படுகிறது. அதன்பின் திண்டுக்கல்லுக்கு, 1 மணிக்கு சென்றடைகிறது.திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது. அங்கு இருந்து மடத்துக்குளத்துக்கு 3:18 மணிக்கு வந்து 3:19க்கும், மைவாடி ரோடு சந்திப்புக்கு 3:24 மணிக்கு வந்து 3:25 மணிக்கும்,உடுமலைக்கு 3:33 மணிக்கு வந்து 3:34 மணிக்கும் புறப்படுகிறது.

    கோமங்கலத்துக்கு 3:47 மணிக்கு வந்து 3:48 மணிக்கும்,பொள்ளாச்சி ஜங்ஷனுக்கு 4:18க்கு வந்து 4:20 மணிக்கு புறப்படுகிறது.கிணத்துக்கடவுக்கு 4:43க்கு வந்து 4:44 மணிக்கும், போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.இதற்கான நேர அட்டவணையை தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ளது.

    • அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 9,93,844 பேரும், பெண் வாக்காளா்கள் 10,49,103 பேரும், இதர பாலினத்தவா்கள் 169 பேரும் என மொத்தம் 20,43,116 வாக்காளா்கள் உள்ளனா்.

    இதில், 2022 நவம்பா் 9ஆம் தேதி முதல் டிசம்பா் 8ஆம் தேதி வரை புதிதாக சோ்ப்பதற்கு 33,351 படிவங்களும், இறந்த, இடம் பெயா்ந்தவா்களை நீக்குவதற்கு 23,389 படிவங்களும், அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.

    இந்த வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வை க்காக வைக்கப்படவுள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

    நிகழாண்டு முழுவதும் நடைபெறவுள்ள தொடா் திருத்தப் பணியில் 18 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மையத் தகுதிநாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய காலாண்டின் தகுதி நாளில் முன்கூட்டியே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6ஐ வட்டாட்சியா் அலுவலகத்தில் பெற்று பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வயது, இருப்பிடத்துக்கான ஆவண ஆதாரங்களை இணைத்து நிறைவு செய்யப்பட்ட படிவத்தை தொடா்புடைய வட்ட அலுவலகத் தோ்தல் பிரிவில் வழங்கலாம். (அல்லது) NVSP Portal என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

    திருவிடைமருதூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,28,359 -, பெண் வாக்காளர்கள் 1,30,839 , மூன்றாம் பாலினத்தவர் 16. மொத்தம் 2,59,214.

    கும்பகோணம்

    ஆண் வாக்காளர்கள் 1,32,152, பெண் வாக்காளர்கள்-1,39,285, மூன்றாம் பாலினத்தவர் - 17, மொத்தம் - 2,71,454.

    பாபநாசம்

    ஆண் வாக்காளர்கள்- 1,27,552, பெண் வாக்காளர்கள் - 1,33,607 , மூன்றாம் பாலினத்தவர்- 19, மொத்தம் - 2,61,178.

    திருவையாறு

    ஆண் வாக்காளர்கள் - 1,29,872, பெண் வாக்காளர்கள் - 1,36,620 , மூன்றாம் பாலினத்தவர்- 20, மொத்தம் - 2,66,512.

    தஞ்சாவூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,33,991 , பெண் வாக்காளர்கள்- 1,46,184, மூன்றாம் பாலினத்தவர் - 59, மொத்தம் - 2,80,234.

    ஒரத்தநாடு

    ஆண் வாக்காளர்கள் - 1,19,004, பெண் வாக்காளர்கள் - 1,26,065, மூன்றாம் பாலினத்தவர் - 5, மொத்தம் - 2,45,074.

    பட்டுக்கோட்டை

    ஆண் வாக்காளர்கள் - 1,16,604, பெண் வாக்காளர்கள் - 1,26,521 , மூன்றாம் பாலினத்தவர்- 24, மொத்தம் - 2,43,149.

    பேராவூரணி

    ஆண் வாக்காளர்கள் - 1,06,310, பெண் வாக்காளர்கள் - 1,09,103 , மூன்றாம் பாலினத்தவர்- 9, மொத்தம் - 2,16,301.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, எல்.ஜி.அண்ணா, புண்ணியமூர்த்தி (தி.மு.க) , சரவணன் ( அ.தி.மு.க ), ஜெய்சதீஷ், விநாயகம் , முரளிதரன் ( பா.ஜ.க ), மோகன்ராஜ், பழனியப்பன் ( காங்கிரஸ் ), அடைக்கலம் , லக்கி செந்தில் ( தே.மு.தி.க) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆண்களை விட பெண்களே அதிகம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் தி.மு.க.சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த்,அதிமுக சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் மணிகண்டன் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 74 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்களும், 142 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 46ஆயிரத்து581 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 389 பேரும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,215 பேரும் இதர வாக்காளர்கள் 67 பேரும் இடம் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக பத்மநாப புரம் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 05வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,766 ஆண்வாக்காளர்களும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 214 பெண் வாக்காளர்களும் 25 இதர வாக்காளர்கள் என இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 05 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 540 பெண் வாக்காளர்கள் 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 443பேர் உள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 33ஆயிரத்து 728ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 921பேர் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து697 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 24,994 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்களின் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 694 பேர் உள்ளனர்.

    கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 354 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 21,473 பெண் வாக்காளர்களும் 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,45,847 பேர்உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகரி சிவப்பி ரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோரிடம் இருந்தனர்.

    • பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.
    • திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அரசு செயலாளர் ஆபிரகாம் பேசும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.

    நாளை முதல் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள தொடர் திருத்த முறையில் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அடுத்து வரும் 4 காலாண்டுகளின் மைய தகுதி நாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 தொடர்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அந்தந்த வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் தேர்தல் துணை வட்டாட்சியரிடம் படிவங்கள் வழங்கலாம்.

    அல்லது NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வல்லம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சை), பிரபாகரன் (பட்டுக்கோட்டை), பூர்ணிமா (கும்பகோணம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    சேலம்:

    இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் கணினி வழியாக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கான பதில்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளன.

    பதிவு எண், பாஸ்வேர்டு கொடுத்து தாங்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் என்.டி.ஏ. வழங்கியுள்ள கேள்விக்குரிய விடைகள் ஆகியவற்றை பார்வை யிடலாம். மேலும் அவற்றை பிரிண்ட் எடுத்து க்கொள்ளலாம். அவை நாளை வரை கிடைக்கும்.

    விடைக்கு றிப்பில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் அதையே சவால் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து, கட்டணமாக ஒரு கேள்விக்குரிய விடைக்கு ரூ.200- செலுத்த வேண்டும். தேர்வர்களால் செய்யப்படும் சவால்கள், பாட நிபுணர்கள் குழுவால் சரிபார்க்கப்படும். சரியானவை என கண்டறியப்பட்டதால் விடைகள் அதற்கேற்ப திருத்தப்படும்.

    திருத்தப்பட்ட இறுதி விடை குறிப்பின் அடிப்படையில், முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    • சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
    • நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது.

    சேலம்:

    சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும்

    விரிவுரையாளர் (LS), துணைப் பேராசிரியர் உள்ளிட்ட தகுதி பெற கணினி அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    இதையடுத்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது. 16-ந்தேதி பூமி, வளிமண்டலம், பெருங்கடல்

    மற்றும் கிரக அறிவியல்

    இயற்பியல் அறிவியல் கணித அறிவியல்

    17-ந்தேதி உயிர் அறிவியல், வாழ்க்கை அறிவியல்

    18-ந்தேதி ரசாயன அறிவியல் நடக்கிறது.

    பரீட்சை சம்பந்தமான அட்மிட் கார்டுகள்

    10 -ம் தேதியில் இருந்து என்.டி.ஏ. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வரலாற்று நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • திருவிளக்கு பூஜை குழுவினர், கோவில் மண்டகப்படி உபயோகிப்போர் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா கோவில் அன்னதான மண்டபத்தில் நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    கவுன்சிலர் சத்திய பிரகாஷ், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் இளமதி குத்துவிளக்கு ஏற்றினார். விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் நூலை வெளியிட்டார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் சத்தியமூர்த்தி, தொல்லியல்துறை காப்பாட்சியர் சக்திவேல், முன்னாள் சேர்மன் முருகேசன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.

    முன்னாள் கல்லூரி முதல்வர் சின்னன், வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை நிர்வாகி ராஜ்குமார், வட்டார விஸ்வகர்ம ஐந்தொழிலாளர் உறவின்முறை சங்க நிர்வாகி கண்ணன், ஆதி பெருமாள் ஆகியோர் பேசினர். நூல் ஆசிரியர் ஜனகராஜ் நன்றி கூறினார்.மணிகண்டன், இருளப்பன் என்ற ராஜா, முருகன், நடன ஆசிரியை பாக்கியலட்சுமி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள், கவுன்சிலர்கள் குருசாமி, முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்வேல் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர், கோவில் மண்டகப்படி உபயோகிப்போர் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • மறுகூட்டலுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர்.
    • இன்று பிற்பகலில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மறுகூட்டல் முடிவு வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழக பாட திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் தாங்கள் எழுதிய விடைத்தாள் மதிப்பெண்கள் கூட்டலில் பிழை இருப்பதாக கருதுவோருக்கு மறு கூட்டல் செய்ய அரசு தேர்வு துைற வாய்ப்பு வழங்கியது.

    அதன்படி மறுகூட்டலுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு இன்று பிற்பகலில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மறுகூட்டல் முடிவு வெளியிடப்பட்டது. மறுகூட்டல் முடிவு பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம் இல்லை என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

    • சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய ஜே.இ.இ. தேர்வுக்கான பி.இ., பி.டெக் தாள்-1 விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.
    • இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம்:

    இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு (முதன்மை)-2022 அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம் மாவட்டத்தில் காகாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் எழுதினர். தாள் -1 தேர்வு காலை, மதியம் என 2 ஷிப்டுகளாக நடைபெற்றது.

    தாள்- 1 விடைகள் வெளியீடு

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை முதற்கட்ட ேஜ.இ.இ. முதன்ைம நுழைவு தேர்வுக்கான பி.இ., பி.டெக் பாடப்பிரிவு தாள்-1 க்கான இறுதி விடை குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

    அதில், ஷிப்ட் -1, ஷிப்ட்-2 கேள்வித்தாளுக்கான விடைகள் கேள்வி ஐ.டி. மற்றும் சரியான தேர்வு ஐ.டி. யுடன் வழங்கி உள்ளது.

    பி.இ., பி.டெக் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் இறுதி விடைக்குறிப்புகளை பார்த்து மதிப்பெண்கள் ஒப்பீடு செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் பி.ஆர்க். பி.பிளானிங் தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் தேர்வு

    இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.

    மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.

    • சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய மத்திய அரசின் ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிட்டது.
    • இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4.2.2022 தொடங்கி, 3.5.2022 அன்று முடிவடைந்தது.

    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி. (உபசரிப்பு மற்றும் ஓட்டல் மேலாண்மை) படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவுத் தேர்வு -2022 அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4.2.2022 தொடங்கி, 3.5.2022 அன்று முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் பலர் விண்ணப்பித்தனர்.

    கடந்த 18-ந்தேதி தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு கணினி வழியாக நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, ேகாவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சேலம், நாமக்கல் மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கோவையில் உள்ள மையத்தில் தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது.

    தற்காலிக விடைகள் வெளியீடு

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் கேள்வித்தாளில் பதிவு செய்த பதில்களுடன் தற்காலிக விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பதிவு எண், கடவு சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தாங்கள் எழுதியுள்ள விடைகள், கேள்விகளுக்கு என்.டி.ஏ . வழங்கியுள்ள விடைகள் ஆகியவற்றை பார்க்கலாம். அதில் விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதி உள்ள விடைகள் சரியாக உள்ளதா? எனவும் சரிபார்த்து கொள்ளலாம்.

    என்.டி.ஏ. வழங்கிய உள்ள விடைகள் தவறாக இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரங்களுடன் ஒரு கேள்விக்கு ரூ.200 செலுத்தி இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். அதை பாட வல்லுநர் குழுவால் சரிபார்க்கப்படும்.

    சரியானது என கண்டறியப்பட்டால், விடை குறிப்பு அதற்கேற்ப திருத்தப்படும்.

    திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்பின் அடிப்படையில், முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். நிபுணர்களின் முடிவே இறுதியானது. இந்த தகவலை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×