search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறிப்புகள்"

    • பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.
    • சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது.

    * தோசைக்கு அரைக்கும்போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

    * கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு சேர்த்து சப்பாத்தி தயார் செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.

    * பருப்பை வேக வைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்து விடும்.

    * சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

    * உப்பை ஜாடியில் கொட்டும் போது ஒரு ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.

    * குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா, குழம்பு பதமாக வரும்.

    * சாம்பார், பருப்பு, கிழங்கு வகைகளில் செய்த உணவுகள் மற்றும் முட்டை உணவுகளை சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அந்த குழம்பின் சுவை, தரம் மாறிவிடும்.

    * ஒரு முறை பிரீசரில் வைத்து எடுத்த உணவை சமைத்த பின்னர் மீண்டும் பிரீசரில் வைத்தால் கெட்டு விடும்.

    * சமைத்த உணவு அதிகமாக இருந்தால் அதை தனித்தனியாக பிரித்து பிரீசரில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சூடுபடுத்தி சாப்பிடலாம்.

    * பிரிட்ஜில் உணவுப் பொருட்களை வைக்கும்போது, சின்ன டப்பாக்களை பயன்படுத்தினால் இடம் அடைக்காமல் இருக்கும்.

    * பப்பாளித் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்து விட்டு பின்பு அதை எடுத்து கேக், பன் போன்றவைகளில் சேர்த்து புருட்டி தயாரிக்கலாம்.

    * பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.

    * ஜாம் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த பழங்களை உபயோகிக்க வேண்டும். நன்றாக பழுத்த பழங்களை பயன்படுத்தாமலோ, பழக்கூழை நன்றாக கொதிக்க விடாமலோ ஜாம் தயாரித்தால் அது புளிப்புத் தன்மையாகிவிடும்.

    * ஜாம் தயாரிக்கும்போது சரியான அளவில் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் நிறமும், ருசியும் குறைந்து விடும். சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் ஜாம் கெட்டியாகிவிடும்.

    * அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.

    * கீரை பசுமை மாறாமல் இருக்க காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

    * பச்சைப் பட்டாணியை வேகவைக்கும்போது அதில் 1 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்தால் பட்டாணியின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

    • சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய ஜே.இ.இ. தேர்வுக்கான பி.இ., பி.டெக் தாள்-1 விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.
    • இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம்:

    இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு (முதன்மை)-2022 அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம் மாவட்டத்தில் காகாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் எழுதினர். தாள் -1 தேர்வு காலை, மதியம் என 2 ஷிப்டுகளாக நடைபெற்றது.

    தாள்- 1 விடைகள் வெளியீடு

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை முதற்கட்ட ேஜ.இ.இ. முதன்ைம நுழைவு தேர்வுக்கான பி.இ., பி.டெக் பாடப்பிரிவு தாள்-1 க்கான இறுதி விடை குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

    அதில், ஷிப்ட் -1, ஷிப்ட்-2 கேள்வித்தாளுக்கான விடைகள் கேள்வி ஐ.டி. மற்றும் சரியான தேர்வு ஐ.டி. யுடன் வழங்கி உள்ளது.

    பி.இ., பி.டெக் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் இறுதி விடைக்குறிப்புகளை பார்த்து மதிப்பெண்கள் ஒப்பீடு செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் பி.ஆர்க். பி.பிளானிங் தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் தேர்வு

    இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.

    மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.

    ×