search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.
    • சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது.

    * தோசைக்கு அரைக்கும்போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

    * கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு சேர்த்து சப்பாத்தி தயார் செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.

    * பருப்பை வேக வைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்து விடும்.

    * சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

    * உப்பை ஜாடியில் கொட்டும் போது ஒரு ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.

    * குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா, குழம்பு பதமாக வரும்.

    * சாம்பார், பருப்பு, கிழங்கு வகைகளில் செய்த உணவுகள் மற்றும் முட்டை உணவுகளை சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அந்த குழம்பின் சுவை, தரம் மாறிவிடும்.

    * ஒரு முறை பிரீசரில் வைத்து எடுத்த உணவை சமைத்த பின்னர் மீண்டும் பிரீசரில் வைத்தால் கெட்டு விடும்.

    * சமைத்த உணவு அதிகமாக இருந்தால் அதை தனித்தனியாக பிரித்து பிரீசரில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சூடுபடுத்தி சாப்பிடலாம்.

    * பிரிட்ஜில் உணவுப் பொருட்களை வைக்கும்போது, சின்ன டப்பாக்களை பயன்படுத்தினால் இடம் அடைக்காமல் இருக்கும்.

    * பப்பாளித் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்து விட்டு பின்பு அதை எடுத்து கேக், பன் போன்றவைகளில் சேர்த்து புருட்டி தயாரிக்கலாம்.

    * பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.

    * ஜாம் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த பழங்களை உபயோகிக்க வேண்டும். நன்றாக பழுத்த பழங்களை பயன்படுத்தாமலோ, பழக்கூழை நன்றாக கொதிக்க விடாமலோ ஜாம் தயாரித்தால் அது புளிப்புத் தன்மையாகிவிடும்.

    * ஜாம் தயாரிக்கும்போது சரியான அளவில் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் நிறமும், ருசியும் குறைந்து விடும். சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் ஜாம் கெட்டியாகிவிடும்.

    * அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.

    * கீரை பசுமை மாறாமல் இருக்க காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

    * பச்சைப் பட்டாணியை வேகவைக்கும்போது அதில் 1 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்தால் பட்டாணியின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

    Next Story
    ×