search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பநிலை"

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். மேலும் இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெயிலின் அளவு அதிக ரிக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரிக்கு மேல் இருக்கும். சேலம், ஈரோடு, தர்மபுரி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்கும் பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி, கிர்னி பழம், வெள்ளரி, நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வந்து குவிந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையும், சில்ல ரையில் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரி பிஞ்சு ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படு கிறது. 2 நுங்கு ரூ.10-க்கு விற்கப்படுகிறது. மேலும் கடைகளில் பழச்சாறுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    • உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
    • பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.

    இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.

    காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

    மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
    • வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் நீர்பனியின் தாக்கம் தொடங்கி, பின்பு உறைபனியின் தாக்கம் தலைதூக்க ஆரம்பிக்கும்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் உறைபனி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூரில் பனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று காலை 2.5 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீர்ப்பனி மற்றும் உறைபனியின் தாக்குதல் ஒருபக்கம் நீடித்து வரும் நிலையில் இன்னொருபுறம் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    எனவே ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல்தரைகளிலும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியே தற்போது வெள்ளை கம்பளி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்தது. மேலும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    எனவே வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா, லவ்டேல் பட்பயர், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் பச்சைபசேல் என காணப்படும் புற்கள் மீதும் உறை பனி படர்ந்து காணப்பட்டது.

    குன்னூரில் வழக்கத்தை விட தற்போது கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ள தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குன்னூரில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து உள்ளனர். இதனால் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    அதிகாலை நேரத்தில் தேயிலை பறிப்பதற்காக தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் நடு நடுங்க வைக்கும் உறைபனி காரணமாக ஹோட்டல் மற்றும் காட்டேஜ்களில் முடங்கிப் போய் உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நீர்ப்பனி, உறைபனி என சீதோசன நிலை மாறி மாறி காணப்படுவதால் உள்ளூர் வாசிகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    • உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
    • சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த மாதங்களில் நீர்ப்பனிப்பொழிவு அதிகரித்து, பின்னர் உறைபனியின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டும்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதன்படி தற்போது ஊட்டியில் உறைபனி மற்றும் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி தீர்த்தது. இதனால் தாவரவியல் பூங்காவில் பிரதானமாக அமைந்து உள்ள புல்தரைகள் மற்றும் ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் இருக்கும் புல்தரைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தற்போது வெள்ளை கம்பளி போர்த்தியது போல வெண்மையாக காட்சி அளிக்கிறது.

    மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டியில் தற்போது வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு இன்று காலை குறைந்தபட்ச அளவாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியுடன் தற்போது கடுங்குளிரும் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    பொங்கல் தொடர்விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள், அதிகாலையில் நிலவும் கடுங்குளிரால், வெளியில் சென்று பார்க்க முடியாமல் விடுதிகளுக்குள் முடங்கி உள்ளனர். நீலகிரியில் உறைபனி கொட்டி தீர்த்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து உள்ளது.

    • கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
    • உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒருமாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து உறைபனி கொட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இதுபோன்ற நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இம்முறை உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. மேலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்தொடங்கி உள்ளது.

    இன்று ஊட்டியின் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 7.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக உள்ளது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, சூட்டிங்மட்டம், காமராஜ்சாகர் அணைக்கட்டு மற்றும் எச்.பி.எப் ஆகிய பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக காணப்பட்டது.

    மேலும் பனிப்பொழிவு, குளிரால் அதிகாலை நேரங்களில் தேயிலை-காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.

    அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.

    கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களிலேயே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    • அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 4-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • ஜூன் 9-ல் அதிகபட்சமாக 1.69 செல்சியஸ் வெப்பநிலை
    • உலகம் ஒரு பருவநிலை மாற்ற பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதற்கு உலக நாடுகள் ஆற்ற வேண்டிய எதிர்வினை போதுமானதாக இல்லை

    காப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் தெரிவித்திருப்பதாவது:-

    உலகளவில் வெப்பம் ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. எல் நினோ காலக் கட்டம் தொடர்வதால் 2023-ம் வருடத்தை விட 2024-ம் வருடம் மிக வெப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    உலகளாவிய காலநிலை எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ, சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களும் நிகழ்வுகளும், தீவிரத்திலிருந்து மேலும் தீவிரமாக மாறலாம். புவி வெப்பமடைதலின் அளவிற்கும், தொடர் மற்றும் தீவிர நிகழ்வுகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஐரோப்பாவின் காப்பர்நிகஸ் அமைப்பு தெரிவித்திருப்பதாவது:-

    இந்த வருடத்தின் ஜூன் மாத முதல் சில நாட்களிலேயே, உலகளாவிய சராசரி வெப்பநிலையானது, இதுவரை பதிவான ERA5 தரவுப் பதிவுகளின்படி, கணிசமான அளவு வித்தியாசத்தில் அதிகமாக இருந்தது. தரவுகளின்படி, தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை, ஜூன் 7-லிருந்து ஜூன் 11-க்கு இடைபட்ட காலத்தில் 1.5 செல்சியஸ் வரம்பின் அருகாமையிலோ அதற்கு மேலோ இருந்துள்ளது.

    மேலும், ஜூன் 9 அன்று அதிகபட்சமாக 1.69 செல்சியஸை தொட்டது. இந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில், உலகளாவிய சராசரி தினசரி வெப்பநிலை, அதே நாட்களில் முந்தைய பதிவுகளை விட 0.4 செல்சியஸ் வெப்பமாக இருந்தது.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் பிரிவின் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையில், ஜூன் மாத தொடக்கத்தில் உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை முதல் முறையாக தொழில்துறை காலகட்டங்களுக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 ஃபாரன்ஹீட்) உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

    உலக-சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அடிக்கடி 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை மீறுவதாலும், அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவுகள் தீவிரமடையும் என்றும் இதனை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்பது அவசியம்.

    1.5 செல்சியஸ் வரம்பின் அருகாமையில் கடந்து சென்ற சில நாட்கள், மூன்று வருட, "லா நினா" பருவநிலை கட்டமாக வருகிறது. இது, எதிர்மாறாக, "எல் நினோ" பருவநிலை காலகட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இதன் மூலம் மற்றொரு அரை டிகிரி அல்லது அதற்கு மேலும் சராசரி வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இதே பிரச்னைக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வியாழனன்று பேசும்பொழுது:-

    உலகம் ஒரு பருவநிலை மாற்ற பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதற்கு உலக நாடுகள் ஆற்ற வேண்டிய எதிர்வினை போதுமானதாக இல்லை. இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை, தற்போதிருக்கும் காலநிலைக் கொள்கைகளால், ஐ.நா.வின் இலக்கான 1.5 டிகிரி செல்சியஸை விட இரண்டு மடங்கு அதிகமாகலாம். தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட சராசரியாக 2.8 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலைக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

    நாம் கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டே ஒரு பேரழிவை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் இதற்கு தீர்வு காண வேண்டியவர்கள், தங்களுக்கு விருப்பமான சிந்தனை, நிரூபிக்கப்படாத தொழில்நுட்பங்கள் மற்றும் "சில்வர் புல்லட்" தீர்வுகள் ஆகியவற்றையே நம்ப தயாராக உள்ளனர்.

    விழித்தெழுந்து முன்னேற வேண்டிய நேரம் இது. தூய்மையான ஆற்றலை நோக்கி நகரும் முயற்சியில் ஒரு சிறு மாற்றத்தை மட்டும் மேற்கொள்ளாமல், மனித உயிர்களின் வாழ்வோடு பொருந்தாத தயாரிப்பிகளிலிருந்து விலகி ஒரு பெரிய அளவிலான உருமாற்றத்தை புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையானது மேற்கொள்ள வேண்டும்.

    காலநிலை பிரச்னைகளை தீர்ப்பதற்கான வாக்குறுதிகளிலும், கடமைகளை நிறைவேற்றுவதிலும் நாடுகள் வெகுதொலைவில் உள்ளன. லட்சியம், நம்பிக்கை, ஆதரவு, ஒத்துழைப்பு எதுவுமில்லாத ஒரு நிலையை நான் காண்கிறேன். இப்பிரச்னையில், தெளிவு மற்றும் நம்பகத்தன்மையைச் சுற்றி ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    பூமி, எல் நினோ கட்டத்தில் நுழையும்போது ஜூன் தொடக்கத்தில் ஏற்பட்ட வெப்பநிலை பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.
    • பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    அதிகரிக்கும் வெப்பத்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள, உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம். நீர் சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க அதிக தண்ணீரை அடிக்கடி அருந்த வேண்டும்.பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், உப்பு, சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும். இது உடலில் நீர் சத்தை தக்க வைக்க உதவும். பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்தல் நல்லது. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்லாமல் இருக்கலாம். காலில் செருப்பு அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    தாராபுரம் :

    வெப்பநிலை அதிகரிப்பால் 21,22,23 ஆகிய தேதிகளில் முறையே 2,3,4 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை வேளாண் பல்கலைக்காக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இது குறித்து அந்த மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:- பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நீனோ நிகழ்வு காரணமாக நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.அக்னி நட்சத்திரம் சமயங்களில் வழக்கமாக, 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். தற்போது, 40 டிகிரி செல்சியஸ் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 23ந் தேதி இதுகுறித்த பதிவுகள் உறுதிசெய்யப்படும்.வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அதிகமாக நீர் பருக வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையுடன், சராசரியை காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.மதியம் 12 மணி முதல்4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பகல், இரவு வெப்பநிலை உயர்ந்தும், காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2மணி முதல் 3 மணி வரை உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஐந்து மாத வயதுடைய வாழை மரங்களுக்கு முட்டு கொடுப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
    • ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் அதிகமாக இருக்கும்.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.

    தற்போது மழை குறைந்ததால் பனிப்பொழிவு குறைந்து உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக உறைபனியில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் மறுநாள் காலை வரை குளிரும் நிலவுகிறது.

    ஊட்டியில் இன்று காலை தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.

    இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி கொட்டி கிடந்தது.

    அதிகாலையில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள் வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

    ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 23.7 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இது புறநகர் பகுதிகளில் குறைந்து 2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது.

    அதே சமயம், ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டியில் கடும் உறைபனி காணப்பட்ட நிலையிலும், குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அதிகாலை நேரங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தின் தென்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்தமழை நேற்றுமுன்தினம் குறைந்து உள்ளது.

    சென்னையில் அக்னி நட்சத்திர காலத்தில் கூட வெயில் அளவு 100 டிகிரியை எட்டவில்லை. ஆனால் அக்னி வெயில் முடிந்த மறுநாளே சென்னையில் வெயில் கடுமையாக இருந்தது. அதன் தாக்கம் இரவு 1 மணி வரை மின்விசிறி கூட வெப்பக் காற்றைத் தான் உமிழ்ந்தன.

    இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மரை நோக்கி சென்று விட்டது. இதன் காரணமாக காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். இந்த நிலை அடுத்து 3 நாட்களுக்கு இருக்கும்.

    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலு இழந்து அப்படியே மறைந்து விட்டது.

    கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் தென் மேற்கு பருவகாற்று வீசுகிறது.

    அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கள்ளாறுவில் 5 செ.மீ.மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அங்கு உள்ள வால்பாறையில் 3 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியாறில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று(வியாழக்கிழமை) தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×