search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீதிஉலா"

    • திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடக்கிறது.
    • தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம்

    அறுபடை வீடுகளுன் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் வரும் கார்த்திகையின் போது சுப்பிரமணிய சுவாமி தங்க–மயில் வாகனத்தில் எழுத்த–ருளி வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை கோலாக–லமாக கொண்டாடப்படும்.

    இன்று ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதி–காலையில் உற்சவர் சன்ன–தியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷே–கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடகி கார்த் திகை மண்டபத்தில் எழுந்த–ருளினார்.

    அங்கு காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிர–மணிய சுவாமி, தெய்வானை இரவு 7 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தங்க–மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • காவடி எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • கோவிலை சுற்றி அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபக்தா் குளம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து முதல் நாள் பயத்தவரன்காடு கிராமவாசிகளால் வேதாரண்யேஸ்வரர் கோவிலிருந்து வண்ண மலர்களும், மின் விளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சென்றடைந்தது.

    அதன் பின்னர் காவடி எடுத்து வரப்பெற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பயத்தவரன்காடு கிராம தலைவர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். இதில் கோவில் ஆதின வித்வான் கேசவன் குழுவினர் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளம், வான வேடிக்கையும் நடந்தது.

    • அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    • இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அடுத்த ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    இதனை அடுத்து மாலையில் மாவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அப்பகுதி நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், இளைய தலைமுறை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • ஆதி ரத்தினேசுவரர் கோவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது.
    • 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் உள்ள ராமநாதபுர சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேக வல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரத்தினேசுவரர் கோவில் பாண்டி 14-சிவதலங்களில் 8-வது தலமாக கருதப்படுகிறது.

    வருண பகவானின் மகன் வாருணி என்பவர் துர்வாச முனிவரால் சாபத்துக்கு ள்ளாகி யானையின் உடலும் ஆட்டின் தலையும் பெற்று, இங்கு இறைவனை பூஜித்த பின் அந்த சாபம் விலகிய தால் ஆடானை என திரு சேர்ந்து திருவாடானை என பெயர் பெற்றது.

    பாடல் பெற்ற தலமான இந்த ஊருக்கு பாரிஜாத வனம், வன்னி வனம், குருக்கத்தி வனம், வில்வ வனம், முக்திபுரம், ஆதிரத்தினேசுவரம், ஆடானை, மார்க்கண்டேய புரம், அகத்தீஸ்வரம், பதுமபுரம், கோமத்தீஸ்வரம், விஜயேச்சுரம் என 12 பெயர்கள் உள்ளது.

    இங்கு வைகாசி விசாகத் திருவிழா கடந்த வைகாசி 10-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ந் திருவிழாவான இன்று ராமநாதபுர மன்னரின் மண்டப் படியாக வெள்ளி ரிஷப வாகனமும், திருஞான சம்பந்தரின் திருமுலைப் பால் உற்சவமும் தபசு மண்டபத்தில் நடைபெறு கிறது.

    இதையொட்டி இன்று விநாயகர் எலி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதிஉலா வந்தனர். வைகாசி 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    • வருகிற 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவ னநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி- அம்பாள் காலை, இரவு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

    முதல் நாளில் கொடியேற்றம் நடைபெற்று, இரவு வக்கீல் அரிய அரசபூபதியின் ஆன்மீக சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

    2-வது நாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    இன்று (26-ந்தேதி) காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு பூத வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலாவும், தொடர்ந்து சிவசக்தி கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நாளை (27-ந்தேதி) சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    வருகிற ஜூன் (1-ந்தேதி) தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வை யில் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    • இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    அது சமயம் குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் தீ குண்டத்திற்கு எழுந்தருள கங்கணம் கட்டிய ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி வீதிஉலா.
    • கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா விக்னே ஸ்வர பூஜையுடன் தொடங்க ப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி வீதிஉலா நடை பெற்றது.

    வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    பின், கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் வளர்ச்சி குழு தலைவர் மாதவன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடந்தது.
    • சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

    அய்யம்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த சக்கராப்பள்ளியில் உள்ள தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் கோவிலில் சப்தஸ்தான விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அய்யம்பேட்டை சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில்இருந்து புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டைஎல்லை வரை சென்று மாகாளி புரம், வழுத்தூர், சரபோஜிரா ஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய கிராமங்களில் வீதிஉலா சென்றது.

    இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.

    தொடர்ந்து, இன்று இலுப்பக்கோரை கிராமத்திற்கு சென்று மீண்டும் பசுபதிகோவில், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் வீதிஉலா வந்தது.

    பின்னர், மாலை அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராமமக்கள் செய்துள்ளனர்.

    • தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.
    • மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

    இதையொட்டி, அமர்ந்தாளம்மன் மற்றும் துர்கா பரமேஸ்வரி இருவரும் 2 தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும், மண்ணினால் மேடை அமைத்து அதில் மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    விழாவில் டாக்டர் குரு குடும்பத்தார்கள், முத்துகுமாரசாமி, ரமேஷ், விழா குழுவினர்கள், குலதெய்வ குடும்பத்தார்கள், தெருமக்கள், இளைஞர் மன்றத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

    • கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.
    • பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னிஸ்வர சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை கோவில் உள் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷம் மற்றும் நாதஸ்வர, கிராமிய இசை முழக்கத்தோடு பஞ்சமூர்த்திகளும் கோவிலில் கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அக்னி தீர்த்தத்தில் பஞ்ச மூர்த்திகளும் நிறுத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி நகர வீதிகளில் வழியாக வீதியுலா நடைபெற்ற பின்பு இன்று மாலை திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் அமைக்க ப்பட்டுள்ள அலங்கார பந்தலில் பஞ்சமூர்த்திகள் எழுந்து அருளப்பட்டு, அங்கே மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து இரவு நாட்டுப்புற மக்கள் இசை பாடகர் செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி, வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×