search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பஞ்சமூர்த்திகள்.

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா

    • கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.
    • பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னிஸ்வர சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை கோவில் உள் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷம் மற்றும் நாதஸ்வர, கிராமிய இசை முழக்கத்தோடு பஞ்சமூர்த்திகளும் கோவிலில் கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அக்னி தீர்த்தத்தில் பஞ்ச மூர்த்திகளும் நிறுத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி நகர வீதிகளில் வழியாக வீதியுலா நடைபெற்ற பின்பு இன்று மாலை திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் அமைக்க ப்பட்டுள்ள அலங்கார பந்தலில் பஞ்சமூர்த்திகள் எழுந்து அருளப்பட்டு, அங்கே மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து இரவு நாட்டுப்புற மக்கள் இசை பாடகர் செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி, வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×