search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street walkers"

    • முருகனுக்கு பல்வேறு திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் சிக்கலில் சிங்கார வேலவர் கோவில் அமை ந்துள்ளது. முருகப்பெருமான் அன்னை வேல் நெடுங்க ண்ணிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு புகழ்மிக்க இந்த கோவிலில் கார்த்திகை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி தேரில் முருகப்பெ ருமாள் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெ ருமானுக்கு பால், பன்னீர், தேன், விபூதி,பஞ்சா மிர்தம் உள்ளி ட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளி ஆலய உட்பிரகா ரம் வலம் வந்தார். அதனை தொடர்ந்து மகா தீபாரா தனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

    • காவடி எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • கோவிலை சுற்றி அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபக்தா் குளம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து முதல் நாள் பயத்தவரன்காடு கிராமவாசிகளால் வேதாரண்யேஸ்வரர் கோவிலிருந்து வண்ண மலர்களும், மின் விளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சென்றடைந்தது.

    அதன் பின்னர் காவடி எடுத்து வரப்பெற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பயத்தவரன்காடு கிராம தலைவர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். இதில் கோவில் ஆதின வித்வான் கேசவன் குழுவினர் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளம், வான வேடிக்கையும் நடந்தது.

    • இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அடுத்த ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    இதனை அடுத்து மாலையில் மாவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அப்பகுதி நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், இளைய தலைமுறை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு வீதிஉலா காட்சி நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே திருவையாறு அடுத்த வீரசிங்கப்பட்டியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டுதல் பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லாக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது. மாரியம்மன் பூ அலங்காரத்துடன் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதேபோல் கருப்புசாமி, மதுர வீரன் , நொண்டி கருப்பு ஆகிய பரிவார தெய்வங்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய வீதிகளில் வழியாக பல்லாக்கு வீதி உலா சென்று மீண்டும் சன்னதியை வந்தடைந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    ×