search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ்ணு விஷால்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் கோகுல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறார்.

    ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.


    இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரொடக்ஷன் நம்பர் எண் 10' என்று அழைக்கப்படுகிறது. இந்த திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்ஷன் படமாக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விஷ்ணு விஷால் நடித்துவரும் திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் துவங்கும்.


    தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • விஷ்ணு விஷால் தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.
    • 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "மிச்சாங் புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்." என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் மதுரை மோகன் பல படங்களில் நடித்துள்ளார்.
    • முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது.

    நடிகர் மதுரை மோகன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

    நடிகர் மதுரை மோகன் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் இவருக்கு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது.


    இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் மதுரை மோகன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் பலர் இவருக்கு சமூக வலைதளத்தில் மூலம் இரக்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
    • அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.


    இந்நிலையில், நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கானை அஜித் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், "பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார். மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித்" என பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.
    • நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்களுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கலாம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தான் வசிக்கும் இடத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதைதொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.

    பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர் கானை பாராட்டி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால். சிறந்த மனிதனாக திகழ்வதற்கு உங்கள் அருகே இருக்கும் நபருக்கும் நன்றி. மீட்பு உதவி பெறுவதற்கு அவர் எந்த வகையிலும் தன்னுடைய புகழை அவர் பயன்படுத்தாதது என்னை பிரமிக்க வைத்தது.

    தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தேவையான விஷயத்தை சாதிக்க நினைப்பவர்களுக்கு பாடமாக உள்ளார். புயலின் தீவிரத்தை உணர்ந்து பொறுமையாக மீட்பு உதவிகள் வரும் வரை காத்திருக்கும் நடிகர் அமீர்கான் போன்றவர்களுக்கு நன்றி. மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி தொடரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.
    • தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.

    இந்நிலையில், தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

    ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஷ்ணு விஷால் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நடிகர் விஷ்ணு விஷால் நவம்பர் 14-ஆம் தேதி தனது சமூக வலைதளத்தில் கமல் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'Superstars are superstars for a reason' என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த புகைப்படத்தில் ஏற்கெனவே இருந்த பதிவை மாற்றி 'stars are stars for a reason' என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அதுமட்டுமல்லாமல் பலரும் முதலில் சூப்பர் ஸ்டார்ஸ் என்று குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஏன் மாற்றவேண்டும்? என்று விஷ்ணு விஷாலை விமர்சித்து வந்தனர்.

    இந்த நிலையில், விஷ்ணு விஷால் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், "சூப்பர் ஸ்டார்கள் சூப்பர் ஸ்டார்கள் தான். அந்தப் பதிவை நான் எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் அல்ல. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன். எனவே என்னுடைய டைம்லைனில் நெகட்டிவிட்டியை பரப்புவோர் இங்கிருந்து கிளம்புங்கள். நமக்கென்று ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு அப்பாற்பட்டு, சாதித்த அனைவருமே சூப்பர் ஸ்டார்கள்தான். அனைவரையும் நேசியுங்கள். அன்பைப் பரப்புங்கள். வெறுப்பை அல்ல" என்று கூறியுள்ளார்.


    • நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
    • சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.

    சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.

    • நடிகர் விஷ்ணு விஷால் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் 'பாரத்' பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்தியா எப்போதும் 'பாரத்' ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.


    இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தனக்கான காட்சியை நடிகர் விஷ்ணு விஷால் நிறைவு செய்துள்ளார். இதனை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தனது பிறந்தநாளில் நற்பணி மன்றத்தை தொடங்கியுள்ளார்.

    வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

    விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருடைய பிறந்தநாளில் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணக்கம்! என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.!



    இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம்.

    இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி வருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், "மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை" என்று 'லால் சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.




    ×