என் மலர்
நீங்கள் தேடியது "அமீர் கான்"
- 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.
- மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்.
அமீர் கான் நடிப்பில் கடந்த 2016 இல் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் தங்கல். பஞ்சாபில் சமூக கண்ணோட்டங்களை எதிர்த்து தனது 2 மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய தந்தையின் உண்மை கதையை தழுவி இப்படம் அமைந்தது.
இதில் அமீர் கானின் இளைய மகளாக ஜைரா வாசிம் நடித்தார். நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜைரா வாசிம். மல்யுத்த வீராங்கனை கீதா போகத் வேடத்தில் 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.

இதன் பின் 2017 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்திலும் ஜைரா நடித்தார்.
மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதன் பிறகு, ஜைரா தனது மத நம்பிக்கை பற்றிய செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 24 வயதாகும் ஜைரா தனது நிகாஹ் (திருமணம்) பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துகொண்டு திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிவித்துள்ளார்.
- ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் 3 கான்களும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
- நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை என்று சல்மான் கான் தெரிவித்தார்.
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "எங்கள் மூவரையும் (ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான்" நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய ஷாருக் கான், "அமீர்கான் மிகசிறந்த நடிகர். ஒரு கதையைச் சொல்ல அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். சல்மான் கான் அவரது இதயத்திலிருந்து மிக சுதந்திரமாக வேலையை செய்கிறார். நான் இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய அமீர் கான், "நாங்கள் மூவரும் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்க தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற சரியான கதை அமைந்தால் நாங்கள் மூவரும் ஒரே படத்தில் நடிப்போம்" என்று தெரிவித்தார்.
- 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக தகவல்.
- அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக வெளியாகும் நேர்காணல் முற்றிலும் தவறானது என அமீர் கான் தரப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமீர் கான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமீர் கான் கூலி திரைப்படம் குறித்து எந்த நேர்காணலும் வழங்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூற விரும்புகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு போலி நேர்காணல் வலம் வருகிறது. அதில் அமீர் கான் கூலி திரைப்படத்தை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அது ஒரு போலி நேர்காணல்.

அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர். மேலும், அவர் தனது படைப்புகளைப் பற்றி எளிதாகப் பேசுவதில்லை.
உண்மை என்னவென்றால், அமீர் கான் இன்னும் கூலி படத்தைப் பார்க்கவில்லை. அமீர் கான் படத்தைப் பார்க்கும் போது தான் உடன் இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆசைப்படுகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால், அது இன்னும் நடக்கவில்லை.
கூலியின் வெற்றி, சம்பந்தப்பட்ட அனைவரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.
அந்த நேர்காணலும் அத்தகைய செய்திகளும் தவறானவை என்பதை நினைவில் கொள்ளவும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
- இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், கூலி படத்தில் தான் நடித்த கதாப்பாத்திரம் குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரஜினி சாருக்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
நான் படத்தில் ஏதோ உள்ளே வந்து ஒரு சில வசனங்களை பேசிவிட்டு மறைந்ததைப்போன்று தான் உணர்ந்தேன். உண்மையான நோக்கம் படத்தில் எதுவும் இல்லை. அதன் பின்னால் எந்த யோசனையும் இல்லை. எனது கதாப்பாத்திரம் மோசமாக எழுதப்பட்டது.
நான் இப்படத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவில்லை, எனவே இறுதி தயாரிப்பு எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியவில்லை.
எனது கதாப்பாத்திரம் ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் திரும்பிப் பார்க்கும்போது, மக்கள் ஏன் ஏமாற்றமடைந்தார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கூலி படத்தில் நான் நடித்தது ஒரு பெரிய தவறு. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என ஆமிர் கான் கூறியதாக நேற்று தகவல்கள் பரவியது. மேலும் அவர் கூறி அது ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியானது போல ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வெளியானது. தற்போது அது ஏ.ஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனவும். ஆமிர் கான் அப்படி எந்தவித கருத்தும் முன் வைக்கவில்லை என கூறப்படுகிறது.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
- சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், கூலி படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.
மேலும், கூலி திரைப்படத்தில் நடித்துள்ள அமீர் கானின் கதாப்பாத்திரம் குறித்து வெளியிடப்படவுள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, கூலி திரைப்படத்தில் நடித்துள்ள அமீர் கானின் கதாப்பத்திரத்தின் பெயரையும், போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு அறிவித்துள்ளது. அமீர் கான் கூலி படத்தில் "தாஹா" என்கிற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
- லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன்.
- சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
இந்நிலையில், சித்தாரே ஜமீன் பர் படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய அமீர் கான், "லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன். அதனால் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக்கொள்ள விரும்பினேன். இது குறித்து இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் தெரிவித்தேன். ஒரு நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக திரைத்துறையில் தொடருங்கள் என்று அவர் என்னிடம் சொன்னார். நான் அதற்கு ஒப்புக் கொண்டேன்.
பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடம் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்க பேசினோம். அவர்களுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது.இந்தி மற்றும் தமிழில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு, இருவரின் கால்சீட் தேதிகளை வாங்கினோம்.
இப்படத்தின் கதை விவாதத்தின் போதுதான் நாம் ஏன் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என எனக்கு தோன்றியது. அந்த அளவுக்கு இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. நான் இப்படத்தில் நடிக்க இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா ஒப்புக் கொண்டார். பின்னர் பர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரிடமும் பேசி இதுகுறித்து மன்னிப்பு கோரினேன். அவர்களுக்கு இது முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் பின்னர் எனது சூழ்நிலைமையை புரிந்துக் கொண்டார்கள்" என்று அமீர் கான் தெரிவித்தார்.
- சிதாரே ஜமீன் பர் படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
- இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசி வீடியோ வெளியியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சித்தாரே ஜமீன் பர் மிகவும் நல்ல படம். இப்படம் உங்களை சிரிக்கவும் வைக்கும் அழவும் வைக்கும். விளையாட்டு நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும் சக்தி கொண்டது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்" என்று பேசினார்
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அமீர் கான் கூலி திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர் " கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. என்னுடைய கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர்மேல் எனக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. லோகேஷ் என்னிடம் இது ரஜினி சாருடைய திரைப்படம் என கூற, நான் கதையை கேட்காமல் அவருக்கு ஓகே சொன்னேன்.எதுவாக இருந்தாலும் நான் நடிக்கிறேன்' என கூறினேன்." என கூறியுள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அமீர் கான் கூலி திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர் " கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. என்னுடைய கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்" என கூறியுள்ளார்.
திரைப்படம் கண்டிப்பாக வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஜூன் 20ம் தேதி “சீதாரே ஜமீன் பர்” வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான்.
- லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர். கமல்ஹாசன் நடித்த "விக்ரம்", மற்றும் விஜய்யுடன் "மாஸ்டர்", "லியோ" மற்றும் கார்த்தியுடன் "கைதி" போன்ற அதிரடி மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை எடுத்தவர்.
இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 20ம் தேதி "சீதாரே ஜமீன் பர்" வெளியீட்டிற்காக காத்திருக்கும் அமீர் கான், செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்த தகவல் உறுதிப்படுத்தினார்.
அப்போது அவர்,"லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம். இது ஒரு சூப்பர் ஹீரோ படம். இது ஒரு பெரிய அளவிலான அதிரடி படம். அது அடுத்த ஆண்டு, இரண்டாம் பாதியில் தொடங்கும்," என்றார்.
2014-ம் ஆண்டு வெளியான தனது நகைச்சுவை படமான"பிகே" படத்தின் தொடர்ச்சி குறித்த செய்திகளை ஆமிர் கான் நிராகரித்தார். அதற்கு பதிலாக, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க "பிகே" இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் இணைவதாக அவர் கூறினார்.
- அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.
அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அமீர் கான் இந்த படத்தை எந்த ஓடிடி தளங்களிலும் விற்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து யூடியூபில் பே பெர் வியூ என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி செய்தல் டிஜிடெல் விற்பனையில் இது ஒரு புது முயற்சியாக கருதப்படும்.
- கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
- கூலி படம் வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூலி படத்தில் நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று என்பதை நடித்துள்ள உபேந்திரா உறுதி செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபேந்திரா, "நான் ஏகலவைன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு துரோணாச்சாரியார் போன்றவர்" என்று தெரிவித்தார். அப்போது அமீர் கான் கூலி படத்தில் நடித்துள்ளாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆம் நடித்துள்ளார் என்று அவர் பதில் அளித்தார்.






