search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழா"

    • அரியலூரில் சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
    • மாவட்ட மைய நூலகத்தில் முதல் நிலை நூலகர் தலைமையில் நடந்தது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், சித்த மருத்துவர் வேலுச்சாமி எழுதிய சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வோம் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் ஷான்பாஷா தலைமை தாங்கி, இந்நூலுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக் கழகத்தின் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற நூல்களை மருத்துவர் வேலுச்சாமி தொடர்ந்து எழுத வேண்டும் என்றார். நூலின் ஆசிரியர் வேலுச்சாமி, நூலின் முதல் பிரதியை சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரையிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நூலகர் செசிராபூ நூலக பணியாளர்கள் வெங்கடேசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் ஆசிரியர் செவ்வேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் வாசகர்கள், நூலக புரவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.
    • செயல் அலுவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரிபவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஆன்மீக பயிற்சி வகுப்பு மற்றும் தமிழக அரசின் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.

    கோவில் செயல் அலுவலர் முருகையன் முன்னிலை வகித்தார். முன்னதாக தொழில்நுட்ப கல்வித்துறையில் பணிபுரியும் அன்பு பாரதம் போட்டி தேர்வு பயிற்சி மைய நிறுவனர் குட்டியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பயிற்சியாளர் வீர பைரவன் (ஆய்மூர் வி.ஏ. ஓ), பயிற்சியாளர் ஸ்ரீனிவாசன், வக்கீல் நாகராஜன், சர்வாலய அருட்பணி மற்றும் அறப்பணி குழுவை சேர்ந்த ஜெய்பிரகாஷ், முருகன், அரசு வக்கீல் பாஸ்கர் மற்றும் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மற்றும் அன்பு பாரதம் போட்டி தேர்விற்கான பயிற்சி மையத்தின் ஒத்துழைப்போடு கோவில் நிர்வாகத்துடன் இணைந்து கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் பயிற்சி நடத்த உள்ளது. இதன் மூலம் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவர்.

    இந்த பயிற்சியை போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களும், பொதுமக்களும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோவில் செயல் அலுவலர் முருகையன் கேட்டுக்கொண்டார். முடிவில் அரசு வக்கீல் பாஸ்கர் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் செய்திருந்தது. தமிழக அரசு அறிவித்துள்ள கோவில் செயல் அலு வலர் தேர்வி ற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரி பவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

    • சு. ஆடுதுறை கிராமத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு. ஆடுதுறை கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயர், வீரபத்திரர் இருளப்பர், மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை வருண பூஜை அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.கும்பாபிஷேகமத்தை முன்னிட்டு மேலும் மங்கள வாத்தியங்கள் , செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி கொலு விழா

    கரூர்,  

    கருர் ஸ்ரீ சாராதா நிகேதன் மகளிர் கல்லூரி யில் கொலு விழா நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புராண இதிகாச கருத்தை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் வைக்கப்படும் அதே போல் இந்த வருடம் மகாபாரதத்தை உட்கருவாக கொண்டு அமைக்கப்பட்டது. கொலுவில் மஹாபாரதம் நிகழ்வுகள், மஹாபாரத்தில் உள்ள அறிவியல், போர் வியூகம், போரில் பயன்படுத்தப்பட்ட அக்ரோணிகளின் எண்ணிக்கை மேலும் பகவத்கீதையின் கருத்து க்கள் போன்றவை கொலு வில் இடம் பெற்றன.

    சைவ, வைணவ, தெய்வீ கக் கதைகளை மையமாக கொண்ட கொலு பொம்மை கள் ஒன்பது படிகளில் வைக்கப்பட்டது.

    வியாசர் சொல்ல விநாயகர் உருவம் மகாபாரதத்தை எழுதுவ தைப் போல ரங்கோலியில் வரையப்பட்டது.

    மேலும் 17 சக்தி பூஜை நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிர மணியம் இப்பூஜையில் கலந்து கொண்டு மஹா பாரத்தில் திரௌபதியின் தைரியத்தையும் எடுத்து கூறினார்.

    கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

    • கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

    பொன்னமராவதி, 

    கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 51-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாள் அம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் நாள் மீனாட்சி அலங்காரத்திலும், 3ம் நாள் சிவலிங்க பூஜை அலங்காரத்திலும் என அம்மனுக்கு தினம்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விழாவையொட்டி நாள்தோறும் பக்தி இன்னிசை கச்சேரி நடை பெற்றது. விஜயதசமி நாளை யொட்டி அம்பு போடுதல் நிகழ்வு நடை பெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று புதன்கிழமை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்திற்குப்பின் அம்மன் மலர்களா லும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி காட்சியளித்தார். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா வையொட்டி நாதஸ்வர கச்சேரி நடை பெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

    • விராலிமலையில் நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
    • 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்

    விராலிமலை,

    விராலிமலை இசை வேளாளர் சமூக அறப்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் விஜய தசமியை முன்னிட்டு நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா கமலா பாலா திருமண மண்டபத்தில் நடந்தது.அறக்கட்டளை தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். பொருளாளர் மாணிக்கம், கருப்பையா, மாரியப்பன், ஜெயராமன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நாதஸ்வர வித்வான்கள் பின்னை மாநகர் உத்திராபதி, விருத்தாசலம் சங்கர், மன்னார்குடி வெங்கடேசன், தவில் வித்வான் கார்த்திக் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இசை பயிற்சி குறித்து ஆலோசனைகள் கூறினர்.தஞ்சை அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வ கணபதி நாதஸ்வரம் தவில் இசை கருவிகள் பற்றியும், பிரபல பித்வான்கள் பற்றியும் பேசினார்.தொடர்ந்து சரஸ்வதி தேவி பூஜை செய்து வகுப்புகள் துவங்கப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் இசை வேளாளர் சங்க நிர்வாகிகள், அறக்கட்டளை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக நாகராஜன் வரவேற்றார். முடிவில் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

    • 28-ந்தேதி நடக்கிறது
    • ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா, தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மற்றும் கார்த்திகை சிறப்பு திருவிழா ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.

    28-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நியமித்து பணிவிடை யும், காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அய்யாவைகுண்ட சாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழாவும் நடக்கிறது. 29-ந்தேதி தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு மிருத்தியஞ்சய ஹோமமும், 9.30 மணிக்கு பிம்பம் சுத்தம் செய்யும் பூஜையும் நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு பகவதி பூஜையும், 6.30 மணிக்கு சுதர்சன ஹோமமும், சுமங்கலி பூஜையும் நடக்கிறது. 30-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு அய்யா நிழல் தாங்கலில் இருந்து அபிஷேக தீர்த்தம் ஊர்வல மாக ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு தீபாராத னையும் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 31-ந் தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 41 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. டிசம்பர் மாதம் 10-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நிய மித்தல் பணிவிடை நடக்கிறது. 11 மணிக்கு அய்யா வுக்கு பணிவிடையும் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் 1 மணிக்கு பால் தர்மமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் 6.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு உகப்ப டிப்பும் 8 மணிக்கு அன்னதர்ம மும் நடக்கிறது.

    மறுநாள் 12-ந்தேதி ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு கொடை விழா நடக்கிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதலும் 6 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாரதனையும் 6.30 மணிக்கு அம்மன் கடல் நீராடி வருதலும் நடக்கிறது. காலை 8 மணிக்கு நையாண்டி மேளமும் 9 மணிக்கு நாரா யண சுவாமிக்கு சிறப்பு பூஜையும் 10 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. 11-45 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜையும் பகல் 12 மணிக்கு மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் முத்தாரம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 1 மணிக்கு சமபந்தி விருந்தும் பிற்பகல் 2-30 மணிக்கு செங்கிடாகாரசாமி, வெள் ளைக்கார சாமி, கருங்கிடகார சாமிகளுக்கு சிறப்பு அலங்காரபூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் 6 மணிக்கு மாசானசாமி மற்றும் சுடலை மாடசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இனிப்பு வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.

    • நவராத்திரி நிறைவு விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
    • விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்

    விராலிமலை,

    விராலிமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடந்தது.விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் சுப்ரமணி யசுவாமி வள்ளி தெய்வா னையுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இங்கு வருடம் தோறும் தைபூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உட்பட பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி 10 நாள் விழாவானது கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றுமுதல் மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலுக்கல் அமைத்து விநாயகர் பூஜையுடன் நவராத்திரி முதல் நாள் விழாவானது தொடங்கியது. அன்று முதல் தினமும் சுப்ரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.

    இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று இரவு சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

    • பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது.
    • இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது.

    இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் எல்லையம்மன் கோவில் நவராத்திரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி லில் நவராத்திரி 10-ம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • வீடுகள்,தொழிற்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது

    அரியலூர்,

    விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நவராத்திரி பண்டிகை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன் 9 வது நாளான திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள்,தொழில்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.

    10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வியை தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் சேர்த்தனர். மேலும் கோயில்களில் நெல்மணி, அரிசியை பரப்பி அதில் குழந்தைகளை எழுதச்செய்து கல்வியை தொடங்கினர்.

    கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோயில், அரியலூர் அலந்துறையார், கோதண்டராமசாமி, சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், செந்துறை, ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள், சிவன், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    • கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.

    தாராபுரம்

    கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொன்னாபுரம் வட்டார மருத்துவர் தேன்மொழி வரவேற்றார்.

    அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகம், மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10-பேருக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    மேலும் முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். தளவாய் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 300 பெண்கள் உள்பட 750 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் நவீன் நன்றி கூறினார்.

    • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • எனது மண் - எனது தேசம் என்னும் தலைப்பில் மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எனது மண் எனது தேசம் என்னும் தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏனோக் ஜெபசிங் பெட்போர்டு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக நேரு யுவேந்திரா அமைப்பின் வட்ட பொறுப்பாளர் சிறப்புரையாற்றினார், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தீதன், சரவணகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கீதா நன்றி கூறினார் . நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

    ×