search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழா"

    • மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள்
    • விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    நீலகிரி மரங்கள் பவுண்டேசன் சார்பில் குழந்தைகள் தின விழா மாவனல்லா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளி கொண்டாடப்பட்டது.

    இதில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது. 1990-ம் ஆண்டுகளில் பயன் படுத்தப்பட்ட இணைப்பு வகைகள் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக, சிங்கப்பெண்ணே அமைப்பு ஹேமலதா மற்றும் அனன்யா , நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மரங்கள் பவுண்டேசன் நிறுவனர் தலைவர் சாதிக் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் குழந்தைகள் தினவிழாவை சிறப்பாக நடத்தினார்கள். விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    • பெரம்பலூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது

    பெரம்பலூர்,

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இணைப்பதிவாளரும் அலுவலக துணைபதிவாளருமான அப்துல் சலீம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் இந்திரா, சங்க செயலாட்சியர் தாரணி மற்றும் அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பங்கேற்பு
    • பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் சாங்கையில் அமைந்துள்ள பால்மா மக்கள் அமைப்புகளின் 19-வது ஆண்டு தொடக்க விழா பால்மா அரங்கத்தில் நடைபெற்றது. அன்பையன் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். பால்மா இசைக் குழுவினர் இறைவணக்கம் பாடினார். சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள். இயக்குனர் செல்லன் வரவேற்று பேசினார். பால்மா இயக்குனர் ஜோதி விமலாபாய் அறிக்கை வாசித்தார். அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான நடனம் நடைபெற்றது.

    பின்னர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் விஜிலா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், காட்டத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், பால்மா சட்ட ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பால்மா கூட்டமைப்பின் தலைவர் ஐடா குளோரி பாய் சிறப்பு பாடல் பாடினார். பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பேசியதாவது:-

    பால்மா அமைப்பு என்பது பெண்களை ஒன்றிணைத்த ஒரு பெரிய அமைப்பாகும். மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் இருக்கும் மனித வளத்தை மிக சிறப்பாக வெளிக்கொண்டு வந்த பெருமை இந்த அமைப்பின் நெறிமுறையாளர் அன்பையன் அவர்களையே சாரும். இன்றைக்கு இந்த அரங்கம் நிறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் 41 ஆண்டு காலம் நீங்கள் விதைத்த விதைதான்.

    இந்த பால்மா அமைப்பானது 451 சுய உதவி குழுக்கள் மற்றும் பனை தொழிலாளர் பேரவை என்ற பெயரில் 102 மன்றங்களை உருவாக்கி மாவட்டத்தின் அடையாளமாய் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட இளம் சிறார்களுக்கு தொடர் உதவி தொகைகள், முதியோர் ஓய்வு உதவி திட்டம், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மகளிர் திருமண வைப்பு நிதி உதவி திட்டம், ஒருங்கிணைந்த பிற மேம்பாட்டு பணிகள் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஒடியல் கூழ் இலங்கையில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் பனை மரப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சுவையான உணவு பொருளாகும். இந்த உணவு பொருள் தமிழ்நாட்டில் அதுவும் முதலில் குமரி மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பால்மா கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோரி பாய் நன்றி கூறினார்.

    • கந்தர்வகோட்டை அருகே கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
    • உதவித் திட்ட அலுவலர் கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வளமைய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், புதுக்கோட்டை மாவட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன் ஆகியோர் தன்னார்வலர்களை வாழ்த்தி பேசினார்கள்.

    முடிவில் கந்தர்வகோட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா நன்றி கூறினார்.

    • கந்தர்வகோட்டையில்விடுபட்ட பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கும் விழா
    • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டையில் 2ம்- கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் சண்முகா திரையரங்க வளாகத்தில் மகளிர் உரிமைத் தொ கைக்கு மேல் முறையீடு செய்தவர்க ளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மேல் முறையீடு செய்த குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, கோட்டாட்சியர் முருகேசன் ,தாசில்தார் ராமசாமி ,தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்தி ரன், ஒன்றிய குழு உறுப்பி னர் திருப்பதி, வைர க்கண்ணு, ஊராட்சி மன்ற தலை வர்கள் தமிழ்ச்செல்வி, ராணி முருகேசன், சிவரஞ்சனி சசிகுமார் ,இளைஞரணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
    • உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் புத்தாடை, இனிப்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், வாலாஜ நகர ஊராட்சி அலுவலக வளாகத்தில், உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவி அபிநயா இளையராஜா தலைமை வகித்தார். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட செயலர் நாகமுத்து, மாவட்ட தலைவர் பாண்டியன், துணைச் செயலர் செவ்வேள், உலக திருக்குறள் கூட்டமைப்பு பெரம்பலூர் மாவட்ட தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தரராஜன், உலக திருக்குறள் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு, கார வகைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. முடிவில் நிர்வாகி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    • கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
    • பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    நாகர்கோவில்:

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.

    கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் தீபாவளியை முன்னிட்டு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது
    • கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, நலிவுற்ற மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 60 மேற்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றதுஅரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில், நடைபெற்ற இந்த விழாவில் கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா சிவப்பிரகாசம், டாக்டர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கத் தலைவர் வி.கே.ராஜதுரை, செயலாளர் மதிவாணன், வட்டார தலைவர் அன்பரசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், பொருளாளர் ஹரிஹரன், சங்க நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ், அபிநயா, செல் பாலாஜி, மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • அறந்தாங்கி அருகே ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா
    • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

    அறந்தாங்கி,  

    தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடை பெற்றது.

    விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் மலர் தூவி, படையலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
    • அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது

    திருச்சி,

    இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர்.

    கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை மேலப்புதூர் ஆரோக்கிய அன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா தேவாலயம், எடத்தெரு பழைய கோவில், மெயின்கார்டுகேட் லூர்து அன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா மாதா சர்ச், பொன்மலை ஜோசப் ஆலயம், கிராப்பட்டி புனித தெரசா ஆலயம், காட்டூர் அந்தோணியார் கோவில், குழந்தை யேசு கோவில், ஸ்ரீரங்கம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் முன்னோர்களின் ஆன்ம நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் அதற்கு பின்னர், மேலப்புதூர் உத்திரிக்க மாதா, மார்சிங்பேட்டை ஆங்கிலோ இந்தியன், கோர்ட் ரவுண்டானா அருகில் மற்றும் அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள சி.எஸ்.ஐ., காட்டூர், மணல்வாரித்துறை, ஆண்டாள் வீதி, ஜி கார்னர், ெபான்மலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்றனர்.

    அங்கு கல்லறைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, பூக்களை தூவி, இறந்தவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை படையல் வைத்தனர். பின்னர் மெழுகுதிரி ஏந்தி, உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைவு கூர்ந்து, முன்னோர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் முன்னோர்கள் நினைவாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு, ஆடைகள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை செய்தனர்.

    கல்லறை திருநாள் நடைபெறுவதை முன்னிட்டு மேலப்புதூர், மார்சிங்பேட்டை, கோர்ட் ரவுண்டானா, அரிஸ்டோ ரவுண்டானா, ஜி கார்னர் உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி உமா நந்தினி(29) கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.

    இதேபோல் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மாதேஸ்வரன் (57) என்பவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து 2 பேரும் கொடுத்த புகாரின் பேரின் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் சேமிப்பு தின விழா நடைபெற்றது
    • மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது

    கந்தர்வக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிக்கன மற்றும் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியை சிந்தியா அனை வரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி அஞ்சலகத்தின் கிளை அஞ்சல் அலுவலர் மோகன்தாஸ் மாணவர்கள் சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரமேதுல்லா, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், செல்விஜாய் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×