search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ள"

    • திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பங்கேற்பு
    • பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் சாங்கையில் அமைந்துள்ள பால்மா மக்கள் அமைப்புகளின் 19-வது ஆண்டு தொடக்க விழா பால்மா அரங்கத்தில் நடைபெற்றது. அன்பையன் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். பால்மா இசைக் குழுவினர் இறைவணக்கம் பாடினார். சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள். இயக்குனர் செல்லன் வரவேற்று பேசினார். பால்மா இயக்குனர் ஜோதி விமலாபாய் அறிக்கை வாசித்தார். அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான நடனம் நடைபெற்றது.

    பின்னர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் விஜிலா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், காட்டத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், பால்மா சட்ட ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பால்மா கூட்டமைப்பின் தலைவர் ஐடா குளோரி பாய் சிறப்பு பாடல் பாடினார். பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பேசியதாவது:-

    பால்மா அமைப்பு என்பது பெண்களை ஒன்றிணைத்த ஒரு பெரிய அமைப்பாகும். மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் இருக்கும் மனித வளத்தை மிக சிறப்பாக வெளிக்கொண்டு வந்த பெருமை இந்த அமைப்பின் நெறிமுறையாளர் அன்பையன் அவர்களையே சாரும். இன்றைக்கு இந்த அரங்கம் நிறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் 41 ஆண்டு காலம் நீங்கள் விதைத்த விதைதான்.

    இந்த பால்மா அமைப்பானது 451 சுய உதவி குழுக்கள் மற்றும் பனை தொழிலாளர் பேரவை என்ற பெயரில் 102 மன்றங்களை உருவாக்கி மாவட்டத்தின் அடையாளமாய் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட இளம் சிறார்களுக்கு தொடர் உதவி தொகைகள், முதியோர் ஓய்வு உதவி திட்டம், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மகளிர் திருமண வைப்பு நிதி உதவி திட்டம், ஒருங்கிணைந்த பிற மேம்பாட்டு பணிகள் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஒடியல் கூழ் இலங்கையில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் பனை மரப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சுவையான உணவு பொருளாகும். இந்த உணவு பொருள் தமிழ்நாட்டில் அதுவும் முதலில் குமரி மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பால்மா கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோரி பாய் நன்றி கூறினார்.

    • 28-ந்தேதி நடக்கிறது
    • ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா, தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மற்றும் கார்த்திகை சிறப்பு திருவிழா ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.

    28-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நியமித்து பணிவிடை யும், காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அய்யாவைகுண்ட சாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழாவும் நடக்கிறது. 29-ந்தேதி தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு மிருத்தியஞ்சய ஹோமமும், 9.30 மணிக்கு பிம்பம் சுத்தம் செய்யும் பூஜையும் நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு பகவதி பூஜையும், 6.30 மணிக்கு சுதர்சன ஹோமமும், சுமங்கலி பூஜையும் நடக்கிறது. 30-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு அய்யா நிழல் தாங்கலில் இருந்து அபிஷேக தீர்த்தம் ஊர்வல மாக ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு தீபாராத னையும் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 31-ந் தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 41 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. டிசம்பர் மாதம் 10-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நிய மித்தல் பணிவிடை நடக்கிறது. 11 மணிக்கு அய்யா வுக்கு பணிவிடையும் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் 1 மணிக்கு பால் தர்மமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் 6.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு உகப்ப டிப்பும் 8 மணிக்கு அன்னதர்ம மும் நடக்கிறது.

    மறுநாள் 12-ந்தேதி ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு கொடை விழா நடக்கிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதலும் 6 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாரதனையும் 6.30 மணிக்கு அம்மன் கடல் நீராடி வருதலும் நடக்கிறது. காலை 8 மணிக்கு நையாண்டி மேளமும் 9 மணிக்கு நாரா யண சுவாமிக்கு சிறப்பு பூஜையும் 10 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. 11-45 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜையும் பகல் 12 மணிக்கு மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் முத்தாரம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 1 மணிக்கு சமபந்தி விருந்தும் பிற்பகல் 2-30 மணிக்கு செங்கிடாகாரசாமி, வெள் ளைக்கார சாமி, கருங்கிடகார சாமிகளுக்கு சிறப்பு அலங்காரபூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் 6 மணிக்கு மாசானசாமி மற்றும் சுடலை மாடசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இனிப்பு வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.

    • கரைகள் பலப்படுத்தப்பட்டது
    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 12 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 12 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில் அழகிய பாண்டியபுரம் பேரூராட்சியில் கீரன் குளத்தை புதுப்பிக்க ரூ.1 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். 6 மாத காலத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிலையில் 1 மாத காலத்திற்கு முன்னதாக 5 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக சேறும், சகதிகள் நிரம்பியும், புதர்கள் மண்டி இந்த குளம் காணப்பட்டது. தற்பொழுது சீரமைப்பு பணிகள் முடிவடைந்து புது பொதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த குளத்தின் கரைப்பகுதிகள் ஏற்கனவே சேதம் அடைந்து காணப்பட்டன.

    தற்போது கரைப்பகு தியில் அனைத்தும் சீரமைக்கப்பட்டு புத்தம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளத்தை நம்பி 500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.

    தற்பொழுது குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு 10 அடி அகலம் 12 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதால் குளத்தின் நிலை மாறாது இருப்பதுடன் மழைக்காலத்தில் கரை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் வராத வகையில் தடுப்பு சுவர்கள் ஆர்.சி.சி. முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் குளத்திற்கு எவ்வளவு தண்ணீர் வந்தாலும் நீர்க்கசிவு ஏற்படாது. சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்ட மும் பாதுகாக்கப்படும். கோடை காலங்களில் தண்ணீர் வற்றாத வகையில் குளத்தின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு கழிவுநீர் வந்து மாசுபட்ட நிலையில் தற்போது அதுவும் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கான கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, திடல் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும்.

    குளத்தின் கரையை பல ப்படுத்த சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பனை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. மேலும் கொன்றை, வேம்பு போன்ற நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. குளத்தின் கரையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 20 அடி அகலம் வரை உள்ளதால் காலை, மாலையில் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த பகுதி பொதுமக்களிடம் இது மிக உயர்ந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதேபோல் இந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×