என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் கல்லூரியில் கலை நிகழ்ச்சி
    X

    மகளிர் கல்லூரியில் கலை நிகழ்ச்சி

    • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • எனது மண் - எனது தேசம் என்னும் தலைப்பில் மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எனது மண் எனது தேசம் என்னும் தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏனோக் ஜெபசிங் பெட்போர்டு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக நேரு யுவேந்திரா அமைப்பின் வட்ட பொறுப்பாளர் சிறப்புரையாற்றினார், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தீதன், சரவணகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கீதா நன்றி கூறினார் . நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×