என் மலர்
உள்ளூர் செய்திகள்

இசை பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
- விராலிமலையில் நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
- 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்
விராலிமலை,
விராலிமலை இசை வேளாளர் சமூக அறப்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் விஜய தசமியை முன்னிட்டு நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா கமலா பாலா திருமண மண்டபத்தில் நடந்தது.அறக்கட்டளை தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். பொருளாளர் மாணிக்கம், கருப்பையா, மாரியப்பன், ஜெயராமன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நாதஸ்வர வித்வான்கள் பின்னை மாநகர் உத்திராபதி, விருத்தாசலம் சங்கர், மன்னார்குடி வெங்கடேசன், தவில் வித்வான் கார்த்திக் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இசை பயிற்சி குறித்து ஆலோசனைகள் கூறினர்.தஞ்சை அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வ கணபதி நாதஸ்வரம் தவில் இசை கருவிகள் பற்றியும், பிரபல பித்வான்கள் பற்றியும் பேசினார்.தொடர்ந்து சரஸ்வதி தேவி பூஜை செய்து வகுப்புகள் துவங்கப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் இசை வேளாளர் சங்க நிர்வாகிகள், அறக்கட்டளை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக நாகராஜன் வரவேற்றார். முடிவில் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.






