search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள்"

    • அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம்.
    • வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படக்கூடிய துறைமுகத்தில் பொதுமக்கள் மிக மிக குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த தொய்வுடன் காணப்பட்டனர். மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் கிலோ 250 ரூபாய்க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150-க்கும், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள்
    • தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில்

    குளித்தலை,  

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் குளித்தலை மற்றும் தோகைமலை பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குளித்தலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் லலிதா தலைமை வகித்தார், குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காய்கறி கனி 19 தள்ளு வண்டிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார், நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சச்சின்ராம், தகவல் தொழில்நுட்பம் அமுல்ராஜ், ஒன்றிய கழக நிர்வாகி பரளி குமார், ஜோதிவேல், கிளை செயலாளர் அருணாச்சலம், ராஜேந்திரம் கோபால், மேல தண்ணீர்பள்ளி கிளை செயலாளர் ஸ்டாலின் விக்னேஸ்வரன், மாணவரணி லோகேஸ்வரன், ஒன்றிய கழக நிர்வாகி ஜெகநாதன், பொறியாளர் அணி ஹரிஹரன், மேட்டுமருதூர் ஆறுபாஸ்கர், கழக நிர்வாகிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
    • வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 09 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 0.88 கோடி ரூபாய் ஆகும்.

    இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7059, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409,

    சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,279/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
    • கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.

    தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
    • போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது.

    அவினாசி:

    அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லாலா கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வியாபாரிகள் சங்க மாவட்ட துணை தலைவர் முத்தாரம்மன் தனசேகர், பகுதி செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:- அவினாசியில் பிரதான சாலையின் இருபுறமும் உள்ள திடீர் கடைகளால் போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. ஆகவே ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதை தடுக்கும் பொருட்டும், அவர்கள் வியாபாரம் செய்ய தனி இடம் ஒதுக்க வேண்டும். இப்பிரச்சனைகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் மூலம் ரூ.2¼ கோடி வியாபாரிகள் வருமானம் ஈட்டினர்.
    • ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ெரயில்வே துறைக்கு செலுத்தினால் போதுமானது.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் 27 ெரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியா–ளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலை–கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். அதன் மூலம் வருமான அள–வாக ரூ.81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ஈட்டியுள்ளனர்.

    இதேபோல திருநெல் வேலி ரெயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனை–யில் ரூ.28 லட்சத்து 23 ஆயி–ரத்து 71-ம், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 270, திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 405, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனை–யில் ரூ.15 லட்சத்து 43 ஆயி–ரத்து 975,

    திண்டுக்கல்லில் சின்னா–ளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 297, ஸ்ரீவில் லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 655, தென்கா–சியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 210, ராமநாத–புரத்தில் கருவாடு விற்பனை–யில் ரூ.5 லட்சத்து 34 ஆயி–ரத்து 650,

    ராமேசுவரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனை–யில் ரூ.3 லட்சத்து 67 ஆயி–ரத்து 201, மணப்பாறை–யில் முறுக்கு விற்பனையில் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 10, மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 575, காரைக்கு–டியில் செட்டிநாடு நொறுக் குத் தீனிகள் விற்ப–னையில் ரூ.3 லட்சத்து 429, சாத்தூரில் சேவு விற்பனையில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 640 என உள்ளூர் சிறு குறு உற் பத்தியாளர்கள் வருமா–னம் ஈட்டியுள்ளனர்.

    இதன் மூலம் மொத்தத் தில் ரூ.2 கோடியே 18 லட் சத்து 7 ஆயிரத்து 235 வரு–மானம் பெற்றுள்ள உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

    மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மரப் பாச்சி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கை–யில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள்,

    கொடைக்கானல் ரோட் டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட் கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்கு–டியில் விவசாய விளை–பொருட்கள், வாஞ்சி மணி–யாச்சியில் மக்ரூன், மானாம–துரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்பு–கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட் களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல் லது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத் தி–ருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண் டும்.

    உள்ளூர் உற்பத்தியாளர்க–ளுக்கு வாய்ப்பு வழங்க வெளிப்படை தன்மையுள்ள நடைமுறைகள் பின்பற்றப் பட்டு வருகின்றன. இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவா–ளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண்ணப் பம் பெறப்படுகிறது.

    இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவானது, குலுக் கள் முறையில் விண்ணப்பங் களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரெயில் நிலையத் தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ள–லாம்.

    இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரெயில் நிலையங்க–ளில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாக அமைகி–றது. உற்பத்தியாளர்கள் விண்ணப்பத்துடன் ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ெரயில்வே துறைக்கு செலுத் தினால் போதுமானது.

    சிறிய ெரயில் நிலையங்க–ளில் பயணிகள் பயன்பாட் டிற்கேற்ப பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்படு–கிறது. உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பயணிகள் ஆர்வமுடன் வாங்குவதாக–வும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள் ளதாகவும் உள்ளூர் பொருட் கள் உற்பத்தியா–ளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ரெயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரை கோட்டத்தில் 27 ரெயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலைகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். அதன் மூலம் வருமான அளவாக ரூ.81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ஈட்டியுள்ளனர்.

    இதேபோல திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனையில் ரூ.28 லட்சத்து 23 ஆயிரத்து 71-ம், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 270, திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 405, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனையில் ரூ.15 லட்சத்து 43 ஆயிரத்து 975,

    திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 297, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 655, தென்காசியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 210, ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனையில் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 650,

    ராமேசுவரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 201, மணப்பாறையில் முறுக்கு விற்பனையில் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 10, மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 575, காரைக்குடியில் செட்டிநாடு நொறுக்குத் தீனிகள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 429, சாத்தூரில் சேவு விற்பனையில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 640 என உள்ளூர் சிறு குறு உற்பத்தியாளர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    இதன் மூலம் மொத்தத்தில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 7 ஆயிரத்து 235 வருமானம் பெற்றுள்ள உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மரப் பாச்சி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கையில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள்,

    கொடைக்கானல் ரோட்டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட்கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்குடியில் விவசாய விளைபொருட்கள், வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.

    உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வெளிப்படை தன்மையுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெறப்படுகிறது.

    இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவானது, குலுக்கள் முறையில் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரெயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.

    இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரெயில் நிலையங்களில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாக அமைகிறது. உற்பத்தியாளர்கள் விண்ணப்பத்துடன் ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ரெயில்வே துறைக்கு செலுத்தினால் போதுமானது.

    சிறிய ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்பாட்டிற்கேற்ப பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பயணிகள் ஆர்வமுடன் வாங்குவதாகவும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாகவும் உள்ளூர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தாமரை பூ ரூ.15-க்கு விற்பனை
    • மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.

    கன்னியாகுமரி :

    கேரளாவில் கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை களில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டா டப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகையை 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    வீடுகள் முன்பு அத்த பூ கோலமிட்டு பெண்கள் ஓணம் பண்டிகையை வரவேற்பார்கள். ஓணம் பண்டிகை இன்று தொடங்கி யதையடுத்து குமரி மாவட் டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் ஏராளமா னோர் குவிந்திருந்தனர். மேலும் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் ஏரா ளமானோர் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு இன்று வந்திருந்தனர். இதனால் காலையிலேயே தோவாளை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

    பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்க ளும் போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் வியாபாரம் களை கட்டி இருந்தது.

    கேரள வியாபாரிகள் கலர் பூக்களை விரும்பி வாங்கி சென்றனர். கேந்தி, அரளி, வாடாமல்லி, கொழுந்து, மரிக்கொழுந்து, பட்டன் ரோஸ், தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களை வாங்கி சென்றனர். இதனால் வழக்கத்தை விட பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி பூ கிலோ ரூ.500-க்கும் மல்லிகை ரூ. 700-க்கும் விற்கப்பட்டது. தோ வாளை அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.150, கோழிப்பூ ரூ.60,

    மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.70, செவ்வந்தி ரூ.300, சம்பங்கி ரூ.700, கொழுந்து ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.

    தாமரை பூவின் விலை கணிசமான அளவு உயர்ந் துள்ளது. ஒரு தாமரைப்பூ 15-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை குறைந்து காணப் பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓணம் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினத்தை யொட்டி இந்த மாதம் முழுவதும் பூக்கள் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்திருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். ஓணம் பண்டிகை தொடங்கியதையடுத்து இன்னும் கேரளாவில் இருந்து ஏராளமான வியா பாரிகள் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு வரு வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மேலும் குமரி மாவட் டத்தில் உள்ள பல்வேறு வீடுகளிலும் ஓணம் பண்டி கையையொட்டி தினமும் அத்தப்பூ கோலம் போடப் படும். பள்ளி, கல்லூரிகளி லும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டா டப்படுவதை யடுத்து பூக்கள் வியாபாரம் இன்னும் ஒரு வாரத்திற்கு சூடு பிடித்திருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
    • நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவள்ளூர்:

    தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2023 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 1207 பேருக்கு முதல் தவணையில் ரூ.10 ஆயிரம் வீதமும், இரண்டாவது தவணையில் 297 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம்,3-வது தவணையாக 13 பயனாளிகளுக்கு ரூ.50ஆயிரம் வீதம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 742 விண்ணப்பங்கள் வங்கிகளிடமிருந்து திரும்ப பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்களை மீண்டும் கடன்பெறும் வகையில் தயார் செய்ய திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமுதாய அமைப்பாளர் சாந்தி-7010270560, சமுதாய வளபயிற்றுனர்கள் நாகேஷ்வரி-8608242774, சகிலா-7397133219 ஆகியோரின் எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று மீண்டும் பதிவேற்றம் செய்ய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது.இதில் மகளிர் உதவி திட்ட அலுவலர், பெரியநாயகம். நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
    • அனைத்து மின் சாதனங்களையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் நாம்கோ தொண்டு நிறுவனம், இந்திய அரசு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புதுடெல்லி ஜி.ஐ.இசர்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து திருத்துறை ப்பூண்டியில் சாலை ஓரங்களில் மின் இணைப்பு இன்றி தொழில் செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு சோலார் மின் சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம்கோ இயக்குனர் ஜீவானந்தம் சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து எடுத்து ரைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு சாலையோர ஏழை வியாபாரி களுக்கு சோலார் மின் சாதனம் வழங்கி பேசுகையில்:-

    நாம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்க ளையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும். நாம்கோ தொண்டு நிறுவனம் சோலார் விழிப்புணர்வு பணியை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

    இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் பயனாளிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாம்கோ பணியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
    • நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புதிதாக 250-க்கு மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது.

    தற்போது சந்தையில் உள்ள 125-க்கும் மேற்பட்ட கடைகளில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். 120-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே இருந்து வருகிறது. டெபாசிட் உயர்வு மற்றும் வாடகை அதிகமாக உள்ளதால் கடைகள் முழுமையாக செல்ல வில்லை என்று வியாபாரி கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. காலியாக கிடக்கும் கடைகளை மாநகராட்சி சார்பில் ஏலம் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பலமுறை நடவடிக்கை மேற்கொண்டும் ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரியில் ரூ.55 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மூன்று மாடியில் வணிக வளாகமும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மாநகராட்சி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மாநகராட்சி மேயர் மகேசை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததால் தற்போது எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வியா பாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வடசேரி அண்ணா சிலையையொட்டியுள்ள சந்தையின் ஓரத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    பந்தல் போடப்பட்ட நிலையில் போலீசார் உண்ணா விரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து போடப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திரன், குமரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்கத் தின் தலைவர் கண்ணன், குமரி மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கி னர்.

    ஆர்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் ஏராள மானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தை மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் சந்தையில் உள்புறத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வடசேரி கனகமூலம் சந்தை தற்காலிகமாக மாற்றம்
    • வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்தப்பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையை ஆய்வு செய்த அவர், நீராளி குளத்தையும் பார்வை யிட்டார். அதை புணரமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ், நீராளி குளத்தை சுற்றியுள்ள மைதா னத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வடிவீஸ்வரம் பகுதியில் காய்கறி சந்தை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி செயல்பட்டு வருகிறது. நீராளி குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

    ஏற்கனவே வடசேரி சந்தையில் 120 கடைகள் காலியாக தான் இருந்து வருகிறது. சந்தையில் வியா பாரம் செய்து வரும் வியா பாரிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வியாபாரம் பாதிக்காத வகையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போர்வேல்கள் மூலமாகவும், குடிநீர் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. புத்தன் அணையிலிருந்து வெள் ளோட்டமாக கொண்டு வரப்படும் தண்ணீரை, கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்தி லிருந்து பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகி றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், நகர் அதிகாரி ராம்குமார், தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் கோபால் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் ஜான், இளை ஞரணி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    ×