search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fish shops"

    • கார்த்திகை மாதப்பிறப்பு தொடங்கிய நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
    • இறைச்சி, மீன்கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மாவட்டத்தில் நடந்த பல்வேறு ஆட்டுச்சந்தைகளில் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது.

    ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், சேவல்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர், ஒட்டன்சத்திரம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஆட்டுச்சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    ஆனால் இந்த வாரம் கடைகளில் விற்பனை தலைகீழாக மாற்றம் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் கார்த்திகை மாதப்பிறப்பு தொடங்கிய நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் இறைச்சி, மீன்கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஒருசில கடைகளில் ரூ.1000 அளவுக்கு கூட விற்பனை நடைபெறாததால் வியாபாரிகள் மிகுந்த சோகம்அடைந்தனர். இன்னும் ஒரு மாதத்திற்கு இதேநிலை நீடிக்கும் என்பதால் இறைச்சி வியாபாரிகள் அடுத்த வரும் நாட்களில் மாற்று தொழிலுக்கு செல்ல முடிவு செய்து விட்டனர்.

    • ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அனைத்து பகுதிகளிலும் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் பலநாட்கள் வைத்து அதை மக்களுக்கு விற்பனை செய்வதாகவும்,

    கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    இதனையடுத்து தேனி மாவட்ட உணவுபாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் தலைமையிலான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் கவுதமன் மீன்வள ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மீன்கள்களில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்டு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர்.

    இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுமார் 7 கிலோ கெட்டுப்போன மீன்கள் ரசாயன திரவம் ஊற்றி அழிக்கப்பட்டது.

    மேலும் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியா பாரிகளை எச்சரித்தனர்.

    • சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் அனைத்து மீன் கடைகளிலும் சோதனைகள் நடத்தப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளை மற்றும் மேலப்பா ளையம் மண்டலங்களில் மீன் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாது காப்பு துறையும், மீன்வளத் துறையும் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, மீன்வளத் துறை உதவி இயக்குனர் புஷ்ரா சப்னம் ஆகியோர் ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் சங்கரலிங்கம், ராம சுப்பிரமணியன், மீன்வளத் துறை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் பாலு குமார் ஆகியோர் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் பதன பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள, 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்து அழிக்கப் பட்டது.

    இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாநகரின் ஒவ்வொரு பகுதி யிலும் இத்தகைய சோதனை கள் நடத்தப்படும் என்றும், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் கடை களிலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.

    • சாலை ஓரத்தில் மீன் கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர்.
    • மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதா கோவில் வீதியில் அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சாலை ஓரத்தில் மீன் கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

    அரியாங்குப்பம் மார்க்கெட்டில் மீன் அங்காடி என தனியாக இருந்து வரும் நிலையில் மாதா கோவில் தெருவில் ஆக்கிரமித்து மீன்கடை வைத்துள்ளதால், அங்காடியில் மீன் வியாபாரம் பாதிக்கப்படுகிறது எனவும் தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், புனிதவதி, பில் கலெக்டர் செழியன் மற்றும் கள ஊழியர்கள் மாதா கோவில் வீதிக்கு சென்று போலீசார் உதவியுடன் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை அதிரடியாக அகற்றினர்.

    மேலும் மார்க்கெட்டில் நடைபாதையில் இருந்த கடைகளையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம்.
    • வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படக்கூடிய துறைமுகத்தில் பொதுமக்கள் மிக மிக குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த தொய்வுடன் காணப்பட்டனர். மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் கிலோ 250 ரூபாய்க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150-க்கும், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் மணி(வயது 29). இவர் பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை - நாரணாபுரம் ரோட்டில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அவரது கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், மணியை அடித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரொக்கம் ரூ.4,500ஐ பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இதையடுத்து மணி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியில் சுற்றித்திரிந்த மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகே வசிக்கும் சந்திரசேகர் என்பவரது மகன் நாகேந்திரன் என்கிற முத்துப்பாண்டி(36) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மீன் கடைகள் திறக்காமல் இழுத்தடிப்பட்டு வருகிறது.
    • அரசு நிதி ரூ.12 லட்சம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள பெருமாள் கோவில் எதிரில் மெயின் ரோட்டோரம் தினமும் மீன் விற்பனை நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஊராட்சி சார்பில் 2019-ந் ஆண்டில் ரூ.12 லட்சத்தில் மீன்கள் விற்பனை செய்வதற்காக 10 கடைகள் கட்டப்பட்டது. இங்கு குடிநீர், மின்சார வசதி இல்லாததால் வியாபாரிகள் இந்த கடைகளை பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து ரோட்டோரத்தில் விற்பனை செய்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வழியாக செல்லும் போது முகம் சுளித்து செல்கின்றனர். 2 ஆண்டுகளாக கடை கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.இரவு நேரத்தில் மது அருந்தும் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் கடைகள் மாறி உள்ளன.

    எதிரில் உள்ள இடத்தில் மது பாட்டில்கள், பாலிதீன் குப்பைகள் குவிந்துள்ளது. இதனால் அரசு நிதி ரூ.12 லட்சம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தி கடைகளை புதுப்பித்து, குப்பையை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×