search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயபாஸ்கர்"

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர்.
    • அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீடு உள்பட கோவையில் 9 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு சோதனை நடைபெறும் தகவல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது.

    தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வாசலில் அமர்ந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். சோதனை நடப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் அறிந்து, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

    இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.க்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

    தொடர்ந்து தொண்டர்கள் வாசலில் நின்றபடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு இருந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கு மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    • ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது.
    • எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் துயர் துடைக்க, வருகிற 16-ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் கழக செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

    ஏற்கனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது இந்த விடியா தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது.

    தி.மு.க. அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள தி.மு.க. அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் தி.மு.க. அமைச்சர் கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது தண்டனை வாங்கித் தருவாரா?

    எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

    ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடு பொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த விடியா தி.மு.க. அரசு, மீண்டும் குறுக்கு வழியில் தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. தி.மு.க. மந்திரிகளைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும்.
    • இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர் ஊரக வளர்ச்சித்துறை பணிகளில் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே 3 தடவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அப்பாவு எம்.எல்.ஏ. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.

    அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.வி.வேலுமணி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் ஒப்பந்த பணிகளை அரசு விதிகளுக்கு மாறாக தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாக தெரிய வந்தது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விதிமுறைகளை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து எந்தெந்த இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி பகுதிகளில் 7 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.

    எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எஸ்.பி.வேலுமணி வீட்டில் திட்டமிட்டு 4-வது முறையாக சோதனை நடத்தப்படுவதாக அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் தனது பணி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மஞ்சக்கரணை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அந்த தனியார் மருத்துவ கல்லூரி உள் நோயாளி படுக்கை வசதியுடன் 2 வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்றும் விஜயபாஸ்கர் அனுமதி வழங்கி உள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டு பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் தலா 1 இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும். ஆனால் இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள் என மொத்தம் 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முற்றுகையிட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த 39 இடங்களிலும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைக்குமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

    • சென்னையில் உள்ள எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
    • சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை நடந்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இவர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆர்.சந்திரசேகர் உள்ளார். இவருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள சபரி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி வேல்முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஞானமூர்த்தி நகர் பவுனம்மாள் தெருவில் சுதன் கனக்‌ஷன் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டில் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கும் இன்று காலையில் சோதனை நடைபெற்றது. இதன் பங்குதாரராக பரசுராமன் என்பவர் உள்ளார்.

    வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓரியன்ட் போல்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் பங்குதாரராக விஜயகுமார் என்பவர் உள்ளார். இந்த இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    கோடம்பாக்கம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஆர்.கே.எம். எலக்ட்ரிக்கல்ஸ் கடையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் உரிமையாளராக மணிவண்ணன் உள்ளார்.

    சென்னையில் உள்ள இதுபோன்ற எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அடையாறு எஸ்.பி. ரோட்டில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கம் மற்றும் நந்தனத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 15 இடங்களில் சோதனை நடைபெற்ற நேரத்தில் தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    தாம்பரத்தில் 2 இடங்களிலும், ஆவடி பகுதியில் 3 இடத்திலும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.

    தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும், தாம்பரம் கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள எல்.டி. பல்புகள் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு கோகுலாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான கணேஷ்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவரது வீட்டில் முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடந்து வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த படூர் கிராமத்தில் ஜே.சி.பி. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிமுக ஆட்சியின்போது கிராமப் புறங்களில் உள்ள தெருவோர விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும்.
    • குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கிறது. என்றாலும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குட்கா ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களது குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் ஏராளமான ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் சென்னையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து அந்த டைரி தகவலை டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. குட்கா பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அ.தி.மு.க. அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து குட்கா விற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் எனவே இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் அப்போதைய எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

    அதன் பேரில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர்.

    அடுத்தடுத்து நடந்த அதிரடி நடவடிக்கைகளால் குட்கா விற்பனையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. குறிப்பாக அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர்கள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

    குறிப்பாக சென்னை புறநகரில் குட்கா, பான் மசாலா போதை பொருட்களை இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் லஞ்சம் கொடுக்கப்பட்ட வகையில் சுமார் ரூ.40 கோடி பணம் கைமாறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளில் இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் டைரி தகவல் மூலம் தெரியவந்தது.

    சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள். பணப் பரிமாற்றம் நடந்தது பற்றி அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அதன் பிறகு அவர்கள் குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து ஆவணங்களை கைப்பற்றி , சுமார் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினார்கள். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

    2-வது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் தற்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.

    டெல்லி சி.பி.ஐ.யின் 3-வது லஞ்ச ஒழிப்பு பிரிவின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குட்கா ஊழல் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, மற்றும் ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ.யிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழக அரசின் பரிந்துரைகள் உள்ளடங்கிய பதிலாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகளை அளித்து தமிழக அரசு கடிதம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கொடுக்கும் ஒப்புதலைத் தொடர்ந்து சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.

    சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும். ஆனால் குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    அதிமுகவின் அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட ஆலோசகராக பி.ஹெச்.பாண்டியன் ஆகியோரை நியமித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #Vijayabaskar #OPS #EPS #ADMK
    சென்னை :

    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுகவின் அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயபாஸ்கருடன் சேர்த்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்திரம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம்  ஆகியோரும் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பி.ஹெச்.பாண்டியன் சட்ட ஆலோசகராகராகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக காஞ்சி பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியில் தலைமையகத்தில் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனைகளுக்கு பிறகு விஜயபாஸ்கர் தார்மீக அடிப்படையில் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. #Vijayabaskar #OPS #EPS #ADMK
    குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டன் கணக்கில் குட்கா பொருட்களும் 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். 

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைக்காவல் முடிந்த நிலையில், அவர்கள் மீண்டும் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் விசாரணை காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

    மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு அவருக்கு சொந்தமான சென்னை அண்ணாமலை இன்டஸ்ட்ரீஸில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    இந்த சோதனையின் போது டன் கணக்கில் குட்கா மூலப்பொருட்களும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    குட்கா ஊழல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். #GutkhaScam #CBIRaid #VijayaBaskhar
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு இன்று வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் விஜய பாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

    இதற்கிடையே, குட்கா ரெய்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ், குட்கா விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது எனவும், தன்னை சிக்கவைக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
    குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவும் கைது செய்யப்பட்டார். 

    கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
    குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ள நிலையில், டிஜிபி டி.கே ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். #GutkhaScam #DGPRajendran #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மட்டும்தான் வரலாற்றின் முதல்முறையாக வருமானவரிச் சோதனையில் ராம மோகனராவ் சிக்கியபிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், சோதனை முடிந்த சில மணி நேரங்களில் டி.கே ராஜேந்திரன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்போது சந்தித்து பேசி வருகிறார். 
    ×