என் மலர்
நீங்கள் தேடியது "Vigilance police raid"
- தமிழகம் முழுவதும் அரசு துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 5-வது மாடியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சுந்தர் (57).
இவர் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அமைத்தல், கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதாக புகார் இருந்து வந்தது.
இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் உதவி செயற்பொறியாளர் சுந்தர் ஊராட்சிகளில் ஆய்வு பணிகளுக்காக சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கி வந்துள்ளதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.எஸ்.பி. ராஜேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு 1 மணி அளவில் அதிரடியாக ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சுந்தர் மற்றும் சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர். சுந்தரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் இருந்தது. பின்னர் அறை முழுவதும் சோதனை நடத்தினர்.
இதில் வேறு பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஈரோடு பழையபாளையத்தில் உள்ள சுந்தரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் பணிகளுக்காக கமிஷன் வாங்கி இருப்பது தெரியவந்தது. அலுவலகம், வீடு என 2 இடங்களிலும் நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய சோதனை அதிகாலை 5 மணி வரை நடந்தது. போலீசாரின் சோதனையில் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
இதுதொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி செயற்பொறியாளர் சுந்தரத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் அரசு போக்குவரத்து துறை என 3 சோதனை சாவடிகள் உள்ளன. தமிழக-கர்நாடகா இணைப்பு சாலையில் இந்த சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் இங்கு சோதனை செய்த பிறகு செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் ஈரோட்டில் இருந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் பண்ணாரி சோதனை சாவடிக்கு வந்தனர். அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடிக்குள் நுழைந்து கோப்புகளையும், வாகன பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது மேஜையில் இருந்த கணக்கில் வராத ரூ. 40 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போக்குவரத்து ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் அதிகாரிகள் சிலர் பணியில் இருந்தனர். ரூ.40 ஆயிரம் பற்றி ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி சான்று வழங்கிய ஆய்வு குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள் வீட்டிலும் அது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றும் வகையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
- ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
சேலம்:
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி சான்று வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையொட்டி இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்பட இதில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி சான்று வழங்கிய ஆய்வு குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள் வீட்டிலும் அது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றும் வகையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
இதை தொடர்ந்து சேலம் சுப்ரமணிய நகர் பகுதியில் வசித்து வரும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் வசந்தகுமார் வீடு, சேலம் ஸ்ரீரங்கபாளையத்தில் வசித்து வரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் மனோகர், சேலம் அஸ்தம்பட்டி பழனியப்பா நகரில் வசித்து வரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் சுஜாதா ஆகியோர் வீட்டிற்குள் இன்று காலை சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.
தொடர்ந்து வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை, கதவுகளை உள்புறமாக பூட்டிய லஞ்ச போலீசார் அங்கிருந்தவர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பல மணி நேரமாக நீடித்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூ றப்படுகிறது. அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும்.
- இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர் ஊரக வளர்ச்சித்துறை பணிகளில் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே 3 தடவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அப்பாவு எம்.எல்.ஏ. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.
அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.வி.வேலுமணி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் ஒப்பந்த பணிகளை அரசு விதிகளுக்கு மாறாக தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாக தெரிய வந்தது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விதிமுறைகளை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து எந்தெந்த இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி பகுதிகளில் 7 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.
எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் திட்டமிட்டு 4-வது முறையாக சோதனை நடத்தப்படுவதாக அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் தனது பணி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மஞ்சக்கரணை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த தனியார் மருத்துவ கல்லூரி உள் நோயாளி படுக்கை வசதியுடன் 2 வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்றும் விஜயபாஸ்கர் அனுமதி வழங்கி உள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டு பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் தலா 1 இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும். ஆனால் இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள் என மொத்தம் 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முற்றுகையிட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த 39 இடங்களிலும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைக்குமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.
- மதுரையில் கே.பி.பி. பாஸ்கரின் நெருங்கிய நண்பரின் ஆர்.ஆர். இன்போ கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு கே.கே.நகர் முதல் தெருவில் உள்ளது.
- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று அதிகாலை சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை:
நாமக்கல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கர் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் குவித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் கே.பி.பி.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா மற்றும் நண்பர்களது பெயர்களிலும் சுமார் 315 சதவீதம் சொத்துக்களை குவித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில் கே.பி.பி. பாஸ்கரின் நெருங்கிய நண்பரின் ஆர்.ஆர். இன்போ கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு கே.கே.நகர் முதல் தெருவில் உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 6 பேர் இன்று அதிகாலை சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சோதனையின் போது வெளிநபர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் செல்போன் பயன்படுத்தவும், போலீசார் அனுமதி மறுத்தனர். வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் போது இந்த கட்டுமான நிறுவனம் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கருக்கு எந்த வகையில் தொடர்புடையது என்பது குறித்தும், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிதி நிறுவனத்தின் வரவு, செலவு மற்றும் சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.
நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. நண்பரின் வீட்டில் நடந்து வரும் இந்த சோதனையால் மதுரை அ.தி.மு.க.வினர் மத்தியில் திடீர் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கே.பி.பி.பாஸ்கர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவி வகித்து வந்தார்.
- 2 முறை வெற்றி பெற்ற கே.பி.பி.பாஸ்கர் 3-வது முறையாக கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
நாமக்கல்:
தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடந்தாக பட்டியல் தயாரித்து கவர்னரிடம் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்தவர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதை தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை வலுப்படுத்தினார். இப்பிரிவு போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், வீரமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் இவர்களின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சோதனை நடவடிக்கையில் அடுத்த கட்டமாக இன்று காலை முதல் நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.பி.பி.பாஸ்கர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவி வகித்து வந்தார். 2 முறை வெற்றி பெற்ற அவருக்கு 3-வது முறையாக கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தோல்வியை தழுவினார்.
கே.பி.பி.பாஸ்கர் தனது மனைவி உமா மற்றும் குடும்பத்தினருடன் நாமக்கல் சந்தைபேட்டை புதூர் கொண்டிச்செட்டிபேட்டை ரோடு சப்-லேன் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது இவர் அ.தி.மு.க. நகர செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் 2011 மற்றும் 2016-ம் ஆண்டு பதவி காலத்தில் பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.
விசாரணையில், பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் கே.பி.பி. பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான வீடு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என அவருக்கு தொடர்புடைய 24 இடங்களில் இன்று காலை ஒரே நேரத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
கொண்டிச்செட்டி பேட்டை ரோட்டில் கே.பி.பி. பாஸ்கர் வசித்து வரும் பங்களா வீட்டிற்கு நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 5.45 மணி அளவில் சென்றனர். அப்போது வீட்டின் வெளிப்பக்க பிரதான நுழைவு கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் வீட்டை சுற்றிலும் கண்காணிப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
அப்போது வீட்டில் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். இதனால் மெயின் கேட்டை திறக்குமாறு போலீசார் கூறினர். சத்தம் கேட்டு பாஸ்கர் எழுந்து வந்து கதவை திறந்தார். அவரிடம், நாங்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து வந்து இருக்கிறோம். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, பாஸ்கர் தனது வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
தொடர்ந்து, போலீசார் வீட்டின் முன்பக்கம் உள்ள மெயின் கேட்டை பூட்டினர். பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இந்த சோதனை முடியும் வரை நீங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
பின்னர் தனித்தனி குழுவாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், வீட்டிற்குள் சோதனை நடத்தி வருகிறார்கள். பூஜை அறை, ஹால், சமையல் அறை, வி.ஐ.பி.களுடன் ஆலோசனை நடத்தும் அறை, வீட்டின் மேல்தளம், படுக்கை அறை போன்றவற்றில் பணம், நகை, மற்றும் சொத்து ஆவணங்கள் உள்பட இதர ஆவணங்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தினார்கள். இதில் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களுடைய மதிப்பு ஆவணங்கள் கேட்டனர்.
தொடர்ந்து குடிநீர் தொட்டி, மொட்டைமாடி, புத்தகம் வைத்திருக்கும் அலமாரி, பீரோ, மெத்தை, கட்டிலில் உள்ள அறை, பாத்திரங்கள், சமையல் பொருட்கள் ஆகியவற்றையும் திறந்து பார்த்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இந்த சோதனையின்போது பாதுகாப்புகாக வீட்டின் முன்பு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இது பற்றி தகவல் கிடைத்த அ.தி.மு.கவினர். அங்கு கூடினர். பாஸ்கர் வீட்டின் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
ஏற்கனவே நாமக்கல்லில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சென்னை அருகே பனையூரில் உள்ள பங்களா, பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தபாளையத்தில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்கள், அவரது ஆடிட்டர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்தொடர்ச்சியாக முதன் முறையாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் அசோக் நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 900 கைப்பற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 250 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெய்சங்கர் என்பவர் உர மானியம் பெற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராமச்சந்திரனை அணுகினார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு அவரிடம் லஞ்சப்பணம் கொடுத்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.
ஈரோடு மாவட்டம் சிக்கரசன் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் நிலம் தொடர்பான விவகாரத்திற்கு கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ரங்கசாமி ரூ.65 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்ச பணத்தை கொடுத்த போது ரங்கசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருலோகசுந்தர், புதிதாக கட்டிய திருமண மண்டபத்திற்கு சுகாதார சான்றிதழ் கேட்டு சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜை அணுகியபோது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச பணமாக ரூ.6 ஆயிரத்தை பெற்றபோது லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. #VigilanceRaid
திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அலுவலகத்தின் கதவை வெளிப்புறமாக பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அப்போது பத்திர பதிவிற்காக சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். அவர்களிடம் உண்மையில் பத்திரபதிவிற்காக வந்தார்களா? என போலீசார் விசாரணை செய்து அவர்களுடைய பெயர், முகவரிகளை எழுதி வாங்கிக் கொண்டு வெளியில் அனுப்பினர்.
பின்னர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். நள்ளிரவு 12 மணிவரை இந்த சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது. ஆலந்தூர் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறியதாவது:-
பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து பணம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்வோர் ஏற்கனவே உள்ள ஆன்லைனில் செலுத்தும் வசதியுடன் ஆயிரத்திற்குள் உள்ள தொகையும் இன்று முதல் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் பத்திரபதிவு செய்வோர் எந்த ஒரு தொகையும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொண்டு வர தேவையில்லை. அப்படி பணம் வைத்துஇருந்தால் முறையான கணக்கு காட்டலாம். இந்த சோதனையில் அலுவலகத்திற்குள் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவு உயர்அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும். பின்னர் கணக்கில் வராத பணத்திற்கான விளக்கம் சார் பதிவாளரிடம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 60 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சார்பதிவாளராக பணியாற்றி வரும் ராங்கியம் கிராமத்தை சேர்ந்த சுமதி என்பவரிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை மின் வாரிய அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
முக்கிய அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. தங்கம், வெள்ளி, நாணயங்களும் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின் வாரிய தலைமை பொறியாளர் முத்துவின் அலுவலகத்தில் ரூ.1½ லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இந்த பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். நேற்று இரவு 9 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நீடித்தது. புத்தாண்டையொட்டி, மின் வாரிய ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மின் வாரிய உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரும் லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Vigilancepoliceraid #ElectricityBoardoffice
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் விசாரணை நடத்திய போலீசார் லஞ்சப் புகார் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவாக விசாரித்தனர்.
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் ஆண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.1000-மும், பெண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.500-ம் கேட்பதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சோதனையின்போது பல்வேறு பகுதிகளில் லஞ்சப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்தவமனையில் உள்ள பணியாளர்களிடம் 4000 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் பெண் பணியாளர் ஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #TNGovtHospitals #VigilanceRaid
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
அரசு ஆஸ்பத்திரிகளில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டே ஆஸ்பத்திரிகளில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் குறைந்த கட்டணத்தையே அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் குறிப்பிட்ட தொகையை கேட்டு வாங்குவதாக புகார் இருந்து வந்தது.
இதேபோல மகப்பேறு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பெறும் பெண்களை பார்க்க வரும் நோயாளிகளிடமும் லஞ்சம் கேட்பதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒரு பெண்ணை பிரசவத்துக்காக அனுப்பிவிட்டு வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்களிடம் பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிவிப்பதற்கு கூட லஞ்சம் கேட்கும் அவலம் அரசு ஆஸ்பத்திரிகளில் நீடித்து வருகிறது.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும் பெரிய குறையாகவே உள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் புரையோடி கிடப்பதால் அது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் ஆஸ்பத்திரிகளில் இடம் பெற்றுள்ளது. அதில் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு யாரும் லஞ்சமாக பணமோ, பொருளோ கொடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால் இதையெல்லாம் ஆஸ்பத்திரி பணியாளர்கள் யாரும் கண்டு கொள்வதே இல்லை. இஷ்டத்துக்கு நோயாளிகளிடம் கை நீட்டும் பழக்கம் தொடர் கதையாகி வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகள