search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X

    சேலத்தில் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    • தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி சான்று வழங்கிய ஆய்வு குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள் வீட்டிலும் அது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றும் வகையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    சேலம்:

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி சான்று வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையொட்டி இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்பட இதில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி சான்று வழங்கிய ஆய்வு குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள் வீட்டிலும் அது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றும் வகையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

    இதை தொடர்ந்து சேலம் சுப்ரமணிய நகர் பகுதியில் வசித்து வரும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் வசந்தகுமார் வீடு, சேலம் ஸ்ரீரங்கபாளையத்தில் வசித்து வரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் மனோகர், சேலம் அஸ்தம்பட்டி பழனியப்பா நகரில் வசித்து வரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் சுஜாதா ஆகியோர் வீட்டிற்குள் இன்று காலை சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

    தொடர்ந்து வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை, கதவுகளை உள்புறமாக பூட்டிய லஞ்ச போலீசார் அங்கிருந்தவர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பல மணி நேரமாக நீடித்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூ றப்படுகிறது. அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×