search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்கல்"

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் கிழக்கு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை கடந்த 2001-ம் ஆண்டு 25 இளைஞர்களால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை செய்து வருகிறது. மேலும் நோன்பு காலங்களில் வறுமையில் உள்ளவர்களுக்கு "ஜகாத் உதவி",கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளையும் இந்த அமைப்பு செய்தது.

    இந்த நிலையில் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான கல்வித்தொகை மற்றும் மருத்துவ நிதி உதவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது.
    • தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் வழங்கல்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் ஜெராக்ஸ் ,ரேசன் ஜெராக்ஸ்,சிட்டா நகல்,அடங்கல்நகல், வங்கிகணக்குபுத்தகம்நகல்,போட்டோ2, ஆகியவற்றை கொண்டு வந்து கபிலர்மலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து விதைகளை பெற்றுக் கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • இளையான்குடி அருகே ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 194 பயனாளிகளுக்கு வழங்கி னார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்க மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத்துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்‘ திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.
    • ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் உழவர் நலத்துறை மூலம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்ப டுத்த, வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலா கவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இந்த ஆண்டில் 22,500 செம்மரம், மகோகனி, சந்தனம், சிசு மரம் ஆகிய மரங்கள் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • கபிலர்மலை வட்டார விவசாயிகள் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் தேவைக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
    • 4903 தேக்குமரக் கன்றுகள் நாமக்கல் மாவட்ட வனத்துறையால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தூயமல்லி 50 கிலோ மற்றும் கருப்பு கவுனி 30 கிலோ ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் இருப்பு உள்ளது. எனவே, கபிலர்மலை வட்டார விவசாயிகள் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் தேவைக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.

    மேலும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறையின் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின் கீழ் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு ரூ.15 மதிப்புடைய தரமான 4903 தேக்குமரக் கன்றுகள் நாமக்கல் மாவட்ட வனத்துறையால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    இந்த மரக்கன்றுகள் வரப்பில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு, ஒரு விவசாயிக்கு 50 கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு, ஒரு விவசாயிக்கு 160 கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். கூடுதலாக, நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் தேக்கு கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ 7 வீதம், 3 ஆண்டுகளுக்கு ரூ 21 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    அறுவடைக்கு வரும் வளர்ந்த மரக்கன்றுகளை வெட்ட வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திட உரிய உதவி செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியோ அல்லது கைப்பேசியில் உழவன் செயலியில் தங்கள் பெயரை முன்பதிவு செய்தோ, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரின் பரிந்துரையின்படி தேவை யான மரக்கன்றுகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக வரும் வாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். இந்த தகவல்களை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • இதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சித்ரா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டது.

    இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? யார் சைக்கிள் வழங்குவது? என வாக்குவாதம் ஏற்பட் டது. மேலும் மேடையில் தி.மு.க. மாவட்ட கவுன் சிலர் புஷ்பராணிக்கு பொன் னாடை அணிவித்தனர்.

    மேலும் ஏற்காடு டவுன் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்திக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அ.தி.மு.க.வினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தி.மு.க. வினரும் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே இருதரப்புக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக சைக்கிள் பெற மாணவ-மாணவிகள் வெயிலிலேயே காத்திருந்து அவதிப்பட்டனர். ‌ இதை தொடர்ந்து சித்ரா எம்.எல்.ஏ. எங்களை ஒரு மணிநேரம் காக்கவைத்து அவமானப்படுத்தும் வகையில் நடப்பதா என பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் உடனடியாக அங்கிருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்க லாம் எனவும், தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமான ப்படுத்தி யதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர்.

    இதனால் பள்ளி வளாகத் தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக் குள்ளாகினர்.

    • 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டி.பி.சி. திறப்பதற்கு ஆலோசனை.
    • விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை ஆகியவற்றில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பின்பு அவர் நிருபவரிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது இதற்காக தேவைப்படும் இடங்களில் ஒரே இடத்தில் இரண்டு கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

    மேலும் 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டிபிசி திறப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளபடும் அதிகாரிகள் கனிவுடன் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு 120 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கிகளில் கடன் கொடுக்கும் சங்கமாக இல்லாமல் வங்கி சேவை போன்று பல்வேறு சேவைகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    ரேஷன் அரிசி தேவை இல்லை என்றால் அதனை வாங்க வேண்டாம் அதனால் ரேஷன் கார்டு இல்லாமல் போகாதுதமிழகத்தில் 109 நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன மேலும் 20 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாக திறந்த வெளி நெல் குடோன் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்

    எருக்கூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் (சைலோ) விஞ்ஞான சேமிப்பு களன் செயல்பட வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 40 வசூல் செய்வதாக எழுப்பிய கேள்விக்கு ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூல் செய்யக்கூடாது இது தொடர்பாக கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்

    அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, செயற்பொறியாளர் குணசீலன், கண்காணிப்பு பொறியாளர் ராஜா மோகன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜகுமார், தாசில்தார் செந்தில்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், கூட்டுறவு கடன் சங்க தலைவர் போகர்.ரவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.
    • அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா புதுக்குடி கிராமத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆணைப்படியும், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தல்படியும் 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.

    இதையடுத்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இதனை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் முதன்மை செயலருமான விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மாங்கன்று வழங்கினார்.

    தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் இந்த குழுவுக்கு அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, தோட்டக்கலை அலுவலர் சோபியா, உதவி ேதாட்டக்கலை அலுவலர் ரகுபதி, கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் கவுன்சிலர் நாச்சிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா ஆல் பென்டசோல் மாத்திரை எப்படி சாப்பிடுவது, குடல் புழுக்களின் தன்மை, குடற்புழு நீக்க நாள் மற்றும் மாணவர்களுக்கு தன் சுத்தம் போன்றது பற்றி விளக்கமாக கூறினார்.

    பரமத்தி வட்டாரத்துக் குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 14 ஆயிரத்து 112 மாணவ, மாணவியருக்கும், அங்கன்வாடியில் 3561 குழந்தைகளுக்கும் என 17,673 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி கைகளை கழுவும் முறைகளை பற்றி கூற கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி செய்து காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், ராஜ்குமார், பெரியசாமி, அருண் ,தனபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது.
    • முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன.

    ஓமலூர்:

    ஆதரவற்றோர், விதவை பெண்கள், ஏழைப் பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் யாரையும் நம்பி வாழாமல் தன் சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது. ஓமலூர் ஒன்றியத்தில் இந்த ஆண்டு 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்படுகிறது.

    முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து 2-ம் கட்டமாக இலவச ஆடுகள் வழங்கும் விழா ஓமலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் ஓமலூர் அட்மா குழு தலைவர் செல்வ குமரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு இலவச ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    விழாவில் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவர்கள் ஆய்வு செய்து ஆரோக்கியமான ஆடுகளை வழங்கினர். தொடர்ந்து மீதமுள்ள பயனாளிகளுக்கும் ஆடுகளை வழங்க உள்ளதாக கூறினர்.

    நிகழ்ச்சியில் ஓமலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் புஷ்பா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, தனசேகரன், கோபால்சாமி, வடக்கு ஒன்றிய அவை தலைவர் ஜெயவேல், தங்கராஜ், அருமை சுந்தரம், கருணாகரன், மோலாண்டிப்பட்டி மணி, கால்நடை மருத்துவர் மதிசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் நவநீதன், கோபி, கவிதா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் மாணவர்களுக்கு என்.சி.சி.சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 2 முதல் 5 சதவீதம் அரசு பணி நியமனத்தில் இட உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் ஈரோடு 15-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப், லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி ஆணையின் படி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி ஆண்டுக்கு 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கி வருகிறார்.

    இவர்களுக்கு என்.சி.சி.ஏ.சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாக போலீஸ், ராணுவம், ரயில்வே துறையில் 2 முதல் 5 சதவீதம் அரசு பணி நியமனத்தில் இட உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தலைமை ஆசிரியர் ஆடலரசு, பட்டாலியன் ஹவில்தார் தேவராஜ், கார்த்தி, விடியல் ஆரம்பம் பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இதே பள்ளியில் உலக பிசியோ தெரபி தினம் என்.சி.சி.சார்பில் கொண்டாடப்பட்டது. பிசியோதெரபி டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று முதலுதவி செய்யும் முறை, மருந்துகள் இல்லா மருத்துவம் குறித்து செயல்விளக்கம் கொடுத்ததுடன் 50 என்.சி.சி. மாணவர்களுக்கு நோட்டுகள், பேனாக்கள், மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். பள்ளி மேலாண்மை உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழக செயலாளருமான கருணாநிதி, பேரூராட்சித் துணைத் தலைவர் அன்பரசன், வழக்கறிஞர் இளங்கோ தி.மு.கவைச் சேர்ந்த சாமிநாதன்,தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×