என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "free goats"
- சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது.
- முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன.
ஓமலூர்:
ஆதரவற்றோர், விதவை பெண்கள், ஏழைப் பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் யாரையும் நம்பி வாழாமல் தன் சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது. ஓமலூர் ஒன்றியத்தில் இந்த ஆண்டு 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து 2-ம் கட்டமாக இலவச ஆடுகள் வழங்கும் விழா ஓமலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் ஓமலூர் அட்மா குழு தலைவர் செல்வ குமரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு இலவச ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
விழாவில் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவர்கள் ஆய்வு செய்து ஆரோக்கியமான ஆடுகளை வழங்கினர். தொடர்ந்து மீதமுள்ள பயனாளிகளுக்கும் ஆடுகளை வழங்க உள்ளதாக கூறினர்.
நிகழ்ச்சியில் ஓமலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் புஷ்பா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, தனசேகரன், கோபால்சாமி, வடக்கு ஒன்றிய அவை தலைவர் ஜெயவேல், தங்கராஜ், அருமை சுந்தரம், கருணாகரன், மோலாண்டிப்பட்டி மணி, கால்நடை மருத்துவர் மதிசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் நவநீதன், கோபி, கவிதா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 5 ஆடுகள் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து ஆடுகளும் இறந்துள்ளன.
- ஆடுகள் வாங்கும்போது விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
திருப்பூர்:
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.
இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்கு சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.
இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-
அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்கு சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கி கொள்ளலாம். அதற்கான தொகையை கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.
அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது.விவசாயிகளே நேரடியாக சந்தைக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறினாலும் அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-
அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட வாளியூர் பகுதியில் வசிக்கும் பயனாளிக்கு வழங்கப்பட்ட 5 ஆடுகளில் 2 ஆடுகள் இறந்தன. மற்ற 3 ஆடுகள் உணவு உட்கொள்ளாமல் ஆபத்தான நிலையில் உள்ளதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
ஈசக்கண்ணன்புதூர் பகுதியில் ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து ஆடுகளும் இறந்துள்ளன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே ஆடுகள் வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர்விவசாயிகள்.ஆடு நோஞ்சானாக காணப்பட்டால் விலை குறைவாக போகும். இதனை தவிர்க்க சில வியாபாரிகள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு முன் லிட்டர் கணக்கில் வாயில் தண்ணீரை ஊற்றுகின்றனர். இதனால் ஆடுகள் வயிறு பெருத்து எடை அதிகமாக காணப்படும்.
ஆடு வாங்குபவர் ஆடுகள் நல்ல எடையுடன் திடகாத்திரமாக இருப்பதாக நம்பி அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று விடுவர். கசாப்பு கடைக்காரர்கள் வாங்கியவுடன் ஆடுகளை உடனடியாக அறுத்து விடுகின்றனர்.தற்போது, அரசின் இலவச திட்டத்தில் ஆடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வாங்குவதற்கு, அலுவலர்கள் சந்தைக்கு சென்று ஆடுகளை வாங்கி அவற்றை பயனாளிகளுக்கு வழங்குகின்றனர்.
இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது:சில வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வரும் முன் பல லிட்டர் தண்ணீரை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றுகின்றனர். அவை குடிக்க முடியாமல் முரண்டு பிடிக்கும். இருந்தாலும் நாக்கை இழுத்து பிடித்து தண்ணீரை ஊற்றுவர். தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.
வரும் வழியில் ரோட்டோரங்களில் சாக்கடையில் கிடைக்கும் நீரைக்கூட சிலர் ஊற்றி விடுவதுண்டு. இந்த ஆடுகளுக்கு சில நாட்கள் வயிற்றில் போகும். சரியாக தீவனம் எடுக்க முடியாது.உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் ஆடுகள் இறந்து விட நேரிடுகிறது. ஆடுகள் இறக்க இதுவும் முக்கிய காரணம். ஆடுகள் வாங்கும்போது விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றனர்.
திருப்பூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பரிமள ராஜ்குமார் கூறுகையில், ஆடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இறக்கும் ஆடுகளுக்குரிய இழப்பீடு தொகை பயனாளிகளுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- தியாகதுருகம் அருகே 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
- தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் துணை தலைவர் நெடுஞ்செழியன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் வரவேற்றார்.யூனியன் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி தலா 5 ஆடுகள் வீதம் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். அப்போது மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய அவைத் தலைவர் சாமிதுரை, துணைத்தலைவர் ராமலிங்கம், துணை செயலாளர் கணேசன், கால்நடை உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் கூத்தக்குடி கிராமத்தில் 25 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்