search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டக்கலை"

    • தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சி

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக ஊராட்சி தலைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சியை மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் இளவரசன் திட்டத்தை பற்றி விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, பாசன கமிட்டி செயலாளர் காளிதாஸ், ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், வட்டார தோட்டக்கலை அலுவலர் சூர்யா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரடியாக விவசாயிகளின் வயலில் தோட்டக்கலை துணை இயக்குனர் சு.சசிகலா ஆய்வு செய்து தோட்டக்கலை புதிய தொழில்நுட்பம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாசர், மரூர், முட்டியம் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பணிகள் முடிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு, சீர்பாத நல்லூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானியம் வழங்கப்பட்டு தற்போது உற்பத்தி செய்து வரும் காளான் வளர்ப்பு குடில், கடுவனூர் கிராமத்தில் புதிய பரப்பு விரிவாக்கம், பழப்பயிர் இனத்தின் கீழ் பாக்கு நடவு செடிகளுக்கு இடையில் ஊடுபயிராக பப்பாளி, வாழை நடவு தோட்டத்தினையும், உயர்ரக தோட்டக்கலை தொழில்நுட்ப சாகுபடி இனத்தின் கீழ் துறையின் மூலம் பிளாஸ்டிக் நிலப் போர்வை மற்றும் சொட்டுநீர் பாசன முறையில் தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கூடலூர், மருர், சீர்பாதநல்லூர் ஆகிய கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் தமிழக அரசின் மூலம் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் திட்ட இனத்தின் வாரியாக பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்து தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகள் மற்றும் அக்கிராம பொறுப்பு அலுவலரிடம் அடுத்த கட்ட பணிகளான தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு செம்மைப்படுத்தும் நோக்கில் விருப்பமுள்ள தகுதியான விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் விரும்பும் சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உரிய ஆவணங்கள் இணையத்தில் பதிவு மற்றும் பணி ஆணை வழங்கி சொட்டுநீர் பாசன வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து விவசாயிகளுக்கு நீண்ட காலம் வருமானம் தரக்கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, பாலா, தேக்கு உள்ளிட்ட ஏனைய பல்லாண்டு பழ பயிர்கள் மற்றும் மர பயிர்களை நடவுப் பணிகள் , பயிர் பராமரிப்பு பாதுகாப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளுமாறு மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட மானியங்கள் பயன்பெறுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது ரிஷிவந்தியம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை துணை அலுவலர் சிவனேசன் தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜேஷ், சீனிவாசன், வேலன் வேளாண்மை உதவி அலுவலர் நசுருல்லா, அப்பாஸ் கிராம பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
    • விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    • 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, திருமணம் தொகைக்கான ஆணை வழங்கினர்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய்துறை அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், சமூகநலத்துறை தாசில்தார் சுந்தரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் காந்திமதி வரவேற்றார்.

    முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி எடுத்து கூறினர்.

    தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 52 பயனாளிகளுக்கு இறப்பு, முதியோர் உதவி தொகை, திருமணம் தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி, 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உபகரணங்கள் உள்பட 124 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் கால்நடை மருத்துவர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ. கனேசன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    • வேளாண் அடுக்ககம் திட்டமானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இந்தக் கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் அடுக்ககம் திட்டமானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களைக் கொண்டு கிரெயின்ஸ்
    (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது.

    மேலும் இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்று அடைவதை உறுதிப்படுத்த முடியும்.

    ஒற்றைசாரா வலை தளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.

    விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.

    வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

    இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல், ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கொண்ட ஆவணங்களை சம்பந்த ப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாடித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கும் திட்டம், வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
    • அரசு மானியத்தில் இந்த திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை அழைப்பு விடுத்துள்ளது.

    வாழப்பாடி:

    தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அரசு மானியத்தில் மாடித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கும் திட்டம், வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப் பட்டு உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ், காய் கறிகள் மற்றும் கீரைகளை இயற்கை முறையில் வீட்டு மாடியில் எளிதாக பயிரிடுவதற்கான நெகிழிப் பைகள்– 6, 2 கிலோ தென்னை நார்க் கழிவு கட்டிகள் –6, காய்கறி விதை பாக்கெட்டுகள் –6, அசோஸ்பைரில்லம், பாஸ்மோபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி உயிர் உரங்கள் தலா 200 கிராம் மற்றும் வேப்ப எண்ணைய் 100 மிலி மற்றும் மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு குறித்த விளக்கக் கையேடு ஆகியவை கொண்ட ரூ.900 மதிப்புள்ள தொகுப்புப் பெட்டகம், தற்போது அரசு மானியத்தில் பொதுமக்களுக்கு ரூ.450க்கு வழங்கப்படுகிறது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப் பட்டணம் மற்றும் பெத்த நாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை கொண்டு வந்து பெயரை பதிவு செய்து விண்ணப்பித்து, ரூ.450 பணம் செலுத்தி, மாடித்தோட்ட பெட்டகத்தை பெற்று, வீட்டு மாடியில் காய்கறி தோட்டத்தை அமைத்து பயன் பெறலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் பெத்தநாயக்கன்பாளையம் கோதைநாயகி, அயோத்தியாப் பட்டணம் கலைவாணி, வாழப்பாடி பிரியதர்ஷினி ஆகியோர் தெரிவித்து உள்ளனர். 

    • 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.
    • அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா புதுக்குடி கிராமத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆணைப்படியும், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தல்படியும் 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.

    இதையடுத்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இதனை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் முதன்மை செயலருமான விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மாங்கன்று வழங்கினார்.

    தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் இந்த குழுவுக்கு அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, தோட்டக்கலை அலுவலர் சோபியா, உதவி ேதாட்டக்கலை அலுவலர் ரகுபதி, கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
    • திருச்சுழி விவசாயிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அருப்புக்கோட்டை

    உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்தினை அதிகரிக்க சுற்று வட்டார கிராமங்களான கட்டங்குடி, சின்ன கட்டங்குடி, குறிஞ்சங்குளம், புலியூரான், செம்பட்டி, ஆலடிபட்டி மற்றும் இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் மாரீஸ்வரி, தோட்டக்கலை அலுவலர் கண்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அகல்யா, முத்து மங்காள், விமல் ராஜ், கலைவாணி, சிவபிரியா, வேளாண் விற்பனை மற்றும் வணிக வரி துறை அலுவலர்கள் ரியாஸ், கோகிலா கலந்து கொண்டனர்.

    • 1 தீவு சுமார் 5000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்த தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஏரியானது தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரம் ஏரியில் இன்று வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலர்கள், கவின்மிகு இயக்கம் தஞ்சை சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தஞ்சை சமுத்திரம் ஏரி பொதுப்பணித்துறை, கல்லணை கோட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து சமுத்திரம் ஏரியில் 3 தீவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மரங்கள் நடப்பட்டு அது பறவைகள் வாழ்விடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 1 தீவு சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்தத் தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன. மேலும் இரண்டு தீவுகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக தீவுகளின் பரப்பளவு 1 ஏக்கர் அளவில் இருக்கும். இந்த தீவுகள் அனைத்திலும் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் இதற்காக உழைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும், கவின்மிகு தஞ்சை நிர்வாகிகளுக்கும் குறிப்பாக டாக்டர் ராதிகா மைக்கேல், பாண்டியன் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமுத்திரம் ஏரி ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது. இதன் மதிப்பு ரூ.8.8 கோடி ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணையில் நடப்பட்ட 20 வாழை மரங்களை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்சரண்யா, ஆறுமுகம், அலுவலர்கள் சக்திவேல், மாஞ்சனா, உதவி அலுவலர் நிஷாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :,

    கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்கீழ் கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட சுற்றுசூழல் பூங்கா வளாகத்தில் 20 அரிய வகையான வாழைக்கன்று களை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நட்டு வைத்தார்.

    இந்த வாழை மரங்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் உடனடியாக தோட்டக்கலை துறையினருக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அழியும் தருவாயிலுள்ள சுமார் 31 ரக வாழை ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணையில் நடப்பட்டன. 20 வாழை ரக கன்றுகள் நடும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கி வைத்தேன்.

    நடவு செய்யப்பட்ட வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பல இனங்கள் நன்றாக வளர்ந்திருப்பதோடு பல வாழை மரங்களில் வாழைக்காய்கள் காய்த்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

    இந்த 31 வகை வாழை ரகங்களின் கன்றுகளை விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்ற, மா மற்றும் பலா வகைகளில் பல்வேறு வகைகளை கண்டறிந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்சரண்யா, ஆறுமுகம், அலுவலர்கள்

    சக்திவேல், மாஞ்சனா, உதவி அலுவலர் நிஷாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×