search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்ட பணிகள்"

    • ரூ.35 ஆயிரம் மதிப்பில் சமையல் அறை கூடம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி,   

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.

    மல்லப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் (2022-23) கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 3 வகுப்பறை கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது. அதை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும் மரிமானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நிடுநிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் புதிய சமையல் அறை கட்டிட கட்டுமான பணி மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதே போல சிகரலப்பள்ளி ஊராட்சி சக்கில்நத்தம் கிராமத்தில் சமத்துவபுரம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.26 ஆயிரம் மதிப்பில் தந்தை பெரியார் சிலை வர்ணம் பூசும் பணி, ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சமத்துவபுரத்தில் உள்ள 89 வீடுகளுக்கு வர்ணம் பூசும் பணி, ரூ.35 ஆயிரம் மதிப்பில் புதியதாக தந்தை பெரியார் நினைவு சமத்துவபுர நுழைவு வாயில் வளைவு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இதே போல் ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் வெண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ரூ.35 ஆயிரம் மதிப்பில் சமையல் அறை கூடம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, முட்டை ஆகியவற்றின் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பொறியாளர்கள் செல்வம், பூங்கோதை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் ரூ.50.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

    பவானி

    பவானி தொட்டி–பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ராஜீவ் காந்தி நகரில் 6.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி, ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிட கட்டிடம் பராமரிப்பு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி கோட்டை ஜீவா செட் அருகில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நீர் உந்து நிலையம் அமைத்து பைப்லைன் போடும் பணி, ஐஸ்வர்யா நகரில் ரூ.9.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாக்கடை கட்டுமான பணி, முனியப்பன் நகரில் ரூ.2.86 லட்சம் மதிப்பீட்டில் 5000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் தொட்டி அமைத்து கூடுதல் பைப்லைன் அமைக்கும் பணி, ஓப்லி மில் பழைய காலணி பகுதியில் ரூ.2.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் போட்டு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்தல் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், பவானி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பவானி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தங்கவேலு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், தொட்டிபாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சொசைட்டி தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பாகலூரில் ரூ.13.56 கோடி மதிப்பில் 19 தார்சாலைகள் போடும் பணிகள் என மொத்தம் ரூ.37.56 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • கொக்கரசனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், காடுகெம்பத்பள்ளியில் ரூ.11.50 கோடி மதிப்பில் 5 உயர் மட்ட பாலங்களின் கட்டுமான பணிகளையும், ரூ.12.50 கோடி மதிப்பில் 15 தார்சாலைகள் வலுப்படுத்தும் பணிகளையும், பாகூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.23.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், பாகலூரில் ரூ.13.56 கோடி மதிப்பில் 19 தார்சாலைகள் போடும் பணிகள் என மொத்தம் ரூ.37.56 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். ஓசூர் பிரகாஷ் எம்.எல்.ஏ, பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சேவகானப்பள்ளி ஊராட்சி, கொக்கரசனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் சீனிவாசரெட்டி, வெங்கடசாமி, உதவி செயற்பொறியாளர்கள் சிவசங்கரன், மாது, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சுபாராணி, தாசில்தார்கள் சுப்பிரமணி, சரவணமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.4.50 கோடி மதிப்பில் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டுமான கட்டடப் பணிகள் நடக்கிறது.
    • பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் திட்ட பணிகளை தரமானதாகவும், ஒப்பந்த காலத்திற்குள்ளாக கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்று வரும் ரூ.10.45 கோடி மதிப்பிலான

    வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் 2018 - 19 ஆம் நிதி ஆண்டில் ரூ. 2.66 கோடி மதிப்பில் கசடு கழிவு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 2021- 22 ஆம் நிதியாண்டில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, 2021 - 22 ஆம் நிதியாண்டின் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பில் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டுமான கட்டடப் பணிகள்,

    2022-23 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.79 கோடி மதிப்பீட்டில் பென்னாகரம் தேசிய நாயகன் ஏரி புனரமைத்து தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ரூ.10.45 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமானதாகவும், ஒப்பந்த காலத்திற்குள்ளாக கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி செய்பொறியாளர் சுப்பிரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி, பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், இளநிலை உதவியாளர் சின்னசாமி, வார்டு உறுப்பினர்கள் ராதிகாபாய் மாதவசிங், ஷானு, வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
    • ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் வாயி லாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ், ஆய்வு செய்தார். நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேவூர்- அகரம் சாலை ரூ.93.75 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கி.மீ. சாலை பணிகள் நடைபெறுவதையும், பூலாம்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.21 லட்சம் மதிப்பீட்டில் ஊர்குளம் புனரமைப்பு பணிகள் நடைபெறு வதையும், பூலாம்பாடி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.151.93 லட்சம் மதிப்பீட்டில் 3.17 கி.மீ. நீளத்திற்கு கலியமேடு - வரம்பனூர் சாலை பணிகள் நடை பெறுவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் அவ்ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.35 லட்சம் மதிப்பீட்டில் காளிமாமேடு நடுஏரி ஒடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வேப்பூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பழைய காலணி - ஒட்டஞ்சாலை வாய்க்காலில் நீர்உறிஞ்சி குழி வெட்டும் பணிகள் நடை பெறுவதை யும், சிறுநெசலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.84 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கப்பட்டு ள்ளதையும் பார்வையி ட்டார்.

    அவ்ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.48 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.5 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.98 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கிலோ மீட்டர் நீளத்திற்கு கீழக்குறிச்சி - ஜாயேந்தல் சாலை பணிகள் நடை பெறுவதையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஐவதுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தையே பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், நகர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிகாமணி, ஜெயகுமாரி , உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம் பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றித்திற்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.106.36 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி பின்புறம் தேசிய நெடுஞ் சாலையிலிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரையிலான சாலை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக் டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை பார் வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயிற்சி பெறுவர் களின் எண்ணிக்கை, அவர் களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, பட்டம் புதூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் உறிஞ்சிக்குழியுடன் வடி கால் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

    மேலும், கோட்டநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ. 27.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடங் களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு பயி லும் மாணவர்களுடன் கலந் துரையாடினார்.

    பின்னர், ராமக்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளாச்சி முகமை) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1.60 கோடி மதிப்பில் பணிகளை கோட்டை வாசல், பழைய பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் பூமி பூஜை நடந்தது.
    • மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் 1-வது, 2-வது வார்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் அமைத்தல் பழைய பஸ் நிலையத்தில் தார் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையத்தை பழுது பார்த்தல், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் பைப்லைன் மற்றும் வார்டுகளில் பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட 1.60 கோடி மதிப்பில் பணிகளை கோட்டை வாசல், பழைய பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்கலாம், அவைத்தலைவர் சீனிவாசன். துணை செயலாளர்கள் இனாயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரிதிநிதி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் அவைத்தலைவர் வெங்கடசாமி, வார்டு கவுன்சிலர்கள் நாகரத்தினா. சுமதி சார்லஸ், மணி வண்ணன், லிங்கோஜிராவ் ஸ்ரீதர் கட்சி நிர்வாகிகள் முஜாமில்பாஷா, சென்னீரா, சேகர், சல்மான், மஞ்சு, பார்திபன், நாகராஜ். ஜேசப், ரமேஷ்,கோபல், ராமன், அசேன், சித்திக், சந்தோஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மின் நகர் மற்றும் ஆஞ்சிநேயா நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்களிடம் பூங்காவை நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மொடச்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.173 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணி மற்றும் சக்தி மெயின் ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.699.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய ஆஸ்பத்திரி சாலை பகுதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.194.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையப் பணியினையும்,

    தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நகர் பகுதியில் ரூ.30.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை மேம்பாட்டுப் பணியையும், கம்பர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணி மற்றும் சாலையின் தரத்தினையும் என மொத்தம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி நல்லகவுண்டன்பாளையம் இந்திரா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளு க்குளி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பணியினையும், அளுக்குளி கிராம சேவை மையத்தையும்,

    பார்வையிட்டு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பா டுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மகளிர் சுய உதவிக் குழு மூலம், சுழல் நிதி கடன் ரூ.50 ஆயிரம் பெற்று பாக்கு மட்டை தயாரிக்கும் குழுக்க ளின் பணியினையும் என பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலிங்கியம் ஊராட்சி மல்லிகை நகரில், கோபிசெட்டிபாளையம் வட்டார அளவிலான நர்சரியில் புங்கமரம், பூவரசு, வேப்பமரம், முருங்கை, பப்பாளி, பாதானி, சீதாமரம், மாதுளை, எலுமிச்சை, நாவல், கொய்யா உள்ளிட்ட செடிகள் பதியம் செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆய்வு
    • ஊரக வளர்ச்சி துறை‌ அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள முகுந்தராயபுரம் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், லாலாப்பேட்டை ஊராட்சியில் புதிய கட்டிடம், மருதம்பாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட பணி ஆகியவற்றையும், பள்ளேரி, கொண்டகுப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிலுவையில் இருந்து வருவதையும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரடியாக பார்வையிட்டு பணிகள் தொடங்காமல் உள்ளது குறித்து கேட்டறிந்து வருகிற மே 10-ந் தேதிக்குள் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கல்புதூர் ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    கல்மேல்குப்பம் ஊராட்சியில் ரூ.30.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டடப் பணிகள் அடுத்து இரண்டு வாரத்திற்குள் முடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாணாபாடி ஊராட்சியில் ரூ.11.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் செட்டித்தாங்கல் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிட பணிகளையும், வன்னிவேடு ஊராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

    இப்பணிகள் அனைத்தையும் கண்காணித்து விரைவாகவும் தரமாகவும் நடைபெறுவது உறுதி செய்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய பொறியாளர் முனுசாமி உள்பட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நடப்பாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், எம்.பி. நிதி, எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அந்தந்த ஆண்டிற்குரிய ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் அந்த நிதியாண்டிலேயே முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் பயனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதில் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை யூனியனில் ரூ.16.99 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    • இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றி யங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் வகையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக் கப்பட்டு வரும் கோப்புகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவல கங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டி டங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை யூனியன் சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.16.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்தம் 496 வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • விக்கிரவாண்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • புதிதாக கட்டப்படும் பொது கழிவறை கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பேரூராட்சியில் கலெக்டர் மோகன் வருகை தந்து ரூ.4 கோடியே 10லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியையும், 15 வது மான்ய நிதிக்குழு திட்டத்தில் ரூ. 20லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வரும் புதுக்குளம் சீரமைப்பு பணி, கால்நடை மருத்துவ மனை வளாகம் மற்றும் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பில் கக்கன் நகரில் புதிதாக கட்டப்டும் பொது கழிவறை கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    வேளாண்மை இணை இயக்குனர் ரமணன்,உதவி செயற்பொறியாள ர்ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் , தாசில்தார் இளவரசன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலைஉதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×