search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    வாலாஜா ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆய்வு
    • ஊரக வளர்ச்சி துறை‌ அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள முகுந்தராயபுரம் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், லாலாப்பேட்டை ஊராட்சியில் புதிய கட்டிடம், மருதம்பாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட பணி ஆகியவற்றையும், பள்ளேரி, கொண்டகுப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிலுவையில் இருந்து வருவதையும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரடியாக பார்வையிட்டு பணிகள் தொடங்காமல் உள்ளது குறித்து கேட்டறிந்து வருகிற மே 10-ந் தேதிக்குள் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கல்புதூர் ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    கல்மேல்குப்பம் ஊராட்சியில் ரூ.30.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டடப் பணிகள் அடுத்து இரண்டு வாரத்திற்குள் முடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாணாபாடி ஊராட்சியில் ரூ.11.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் செட்டித்தாங்கல் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிட பணிகளையும், வன்னிவேடு ஊராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

    இப்பணிகள் அனைத்தையும் கண்காணித்து விரைவாகவும் தரமாகவும் நடைபெறுவது உறுதி செய்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய பொறியாளர் முனுசாமி உள்பட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×