வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம் பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றித்திற்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.106.36 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி பின்புறம் தேசிய நெடுஞ் சாலையிலிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரையிலான சாலை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக் டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை பார் வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயிற்சி பெறுவர் களின் எண்ணிக்கை, அவர் களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பட்டம் புதூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் உறிஞ்சிக்குழியுடன் வடி கால் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

மேலும், கோட்டநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ. 27.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடங் களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு பயி லும் மாணவர்களுடன் கலந் துரையாடினார்.

பின்னர், ராமக்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளாச்சி முகமை) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com