search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் ஒன்றியத்தில் ரூ.1.40 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    பர்கூர் ஒன்றியத்தில் ரூ.1.40 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • ரூ.35 ஆயிரம் மதிப்பில் சமையல் அறை கூடம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.

    மல்லப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் (2022-23) கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 3 வகுப்பறை கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது. அதை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும் மரிமானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நிடுநிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் புதிய சமையல் அறை கட்டிட கட்டுமான பணி மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதே போல சிகரலப்பள்ளி ஊராட்சி சக்கில்நத்தம் கிராமத்தில் சமத்துவபுரம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.26 ஆயிரம் மதிப்பில் தந்தை பெரியார் சிலை வர்ணம் பூசும் பணி, ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சமத்துவபுரத்தில் உள்ள 89 வீடுகளுக்கு வர்ணம் பூசும் பணி, ரூ.35 ஆயிரம் மதிப்பில் புதியதாக தந்தை பெரியார் நினைவு சமத்துவபுர நுழைவு வாயில் வளைவு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இதே போல் ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் வெண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ரூ.35 ஆயிரம் மதிப்பில் சமையல் அறை கூடம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, முட்டை ஆகியவற்றின் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பொறியாளர்கள் செல்வம், பூங்கோதை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×