search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்ட பணிகள்"

    • பிரகாஷ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    • மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கலு கொண்டப்பள்ளி ஊராட்சியில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கலு கொண்டப்பள்ளி முதல் டால் தொழிற் சாலை வரை ரூ.35.6 லட்சம் மதிப்பில் சாலை பணி, ரூ.17.65 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், உளிவீரனப் பள்ளியில் ரூ.10.56 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால் வாய் அமைத்தல், வெங்கடாபுரத்தில் ரூ.9.51 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, உளிவீரனப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்பு சி.எஸ்.ஆர் திட்டத்தில் ரூ.20.08 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கப்பக்கல் கிராமத்தில் ரூ.13.10 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.

    இப்பணிகளை கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலா ளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ். கலு கொண்டப் பள்ளி ஊராட்சி தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் சைத்திரா சுரேஷ் ஒன்றிய கவுன்சிலர் நாகவேணி பிரபாகர். சீனிவாசன், சுந்தர், சசிகலா சோமசேகர், ரத்னா நாகராஜ். கீதா நாகராஜ் அனிதா நாகராஜ்ரெட்டி லட்சுமி முனிராஜ், ரவி தாமோதர் ரெட்டி, சீனி வாசன், கெஞ்சப்பா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார்
    • உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செங்கோடம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, நகப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி ஆகியவற்றில் ஊராட்சி ஒன்றிய சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 86 ஆயிரத்தில் இருப்பு அறையுடன் கூடிய புதிய சமையலறை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

    மேலும் மோளக்கவுண்டன்புதூரில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சத்திலும், ஊடையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்திலும், தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் குழாய்கள் விஸ்தரிப்பு செய்யப்பட உள்ளது.

    இதன்படி இப்பகுதிகளில் மொத்தம் ரூ.46 லட்சத்து 86 ஆயிரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார். முத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத் தலைவர் மு.க.அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய சமையலறை கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கான பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.

    விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூர் செயலாளர் செண்பகம்பாலு, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜ், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன், ராகவேந்திரன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், செப்.28-

    நாகர்கோவில் மாநகராட்சியில் 1-வது வார்டுக்குட்பட்ட புன்னவிளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 16-வது வார்டுக்குட்பட்ட ஹனீபா நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி. 31-வது வார்டுக்குட்பட்ட கார்மல் நகர், திருக்குடும்ப ஆலயம் டிரஸ்ட் எதிரே உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 2-வது வார்டுக்குட்பட்ட களியங்காடு, பாறையடி சாலையில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்,

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட களியங்காடு, பாறையடி சாலையில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்,

    10-வது வார்டுக்குட்பட்ட பயோனியர் தெருவில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 15-வது வார்டுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சாலையில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம்,

    23-வது வார்டுக்குட்பட்ட எஸ்.எல்.பி. தெற்கு தெருவில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 4-வது வார்டு பெருவிளை சானல்கரை சாலையில் ரு.25 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைத்தல் போன்ற பணிகள் இன்று நடைபெற்றன. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் வளர்மதி, கலாராணி, லீலாபாய், மாநகர பகுதி செயலாளர் சேக் மீரான், தி.மு.க இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், சி.டி.சுரேஷ், தொண்டர் அணி ராஜன், வட்ட செயலாளர் ராஜேஷ்குமார், ரஞ்சித், சுரேஷ், வேல்முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.02 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 2 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் குறித்தும், ரூ.30.14 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த்திட்ட பணிகள் குறித்தும், ரூ.177.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நொய்யல் ஆறு மேம்பாடு மற்றும் பொழுது போக்கு வசதிகள் செய்யும் பணிகள் குறித்தும், 54.36 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கப்பணிகள் குறித்தும், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை மேம்படுத்துதல் பணிகள் குறித்து என மொத்தம் ரூ.299.49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
    • பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் சீ.காந்திமதி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார், கே.சுரேஷ்குமார், யமுனா ரமேஷ், உமாமகேஸ்வரி சங்கர், பிரியா செல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சத்ய பிரியா முரளி கிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், கே.ஜி.டி.கௌதமன், எம்.கண்ணன் மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட நசரத்பேட்டை, அகரமேல், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் அமைப்பது. பழுதடைந்த அரசு கட்டடங்களை சீரமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • நாகர்கோவில் கோணத்தில் ரூ.2.50 கோடியில் அறிவுசார்மையம் கட்டப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு எம்.பி.என்.நகர் மற்றும் சி.எம்.சி. நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 42- வது வார்டுக்குட்பட்ட பாரதி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 27-வது வார்டு ஆசாரிமார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 14 மற்றும் 15-வது வார்டு சாஸ்தான் கோவில் தெருவில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதனை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, சுகாதார ஆய்வாளர்கள் ஜான், மாதவன் பிள்ளை, மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் கோணத்தில் ரூ.2.50 கோடியில் அறிவுசார்மையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியை மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அறிவுசர்மையம் மாணவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி மையமாக அமையும். தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மையம் திறக்கப்படும். இதில் நூலகங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மத்திய மந்திரி புருஷோத்தம்ரூபாலா தகவல்
    • பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த பணிகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகி யோர் நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வ ரம் விவேகா னந்தா கல்லூரி யில் நடந்த மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா பேசியதாவது:-

    நமது நாட்டில் முதன் முதலாக சாகர் பரிக்கிரமா திட்டத்தின் மூலம் குஜராத் முதல் கன்னியாகுமரி வரை யில் உள்ள கடலோர மீனவ கிராம மக்களை சந்தித்து வருகிறேன். பல இடங்களில் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு இங்கு வந்துள்ளேன். பொதுவாக இந்தியா என்று கூறினால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள். இப்படி பாரத தாயின் கால் பாதம் எனப்படும் கன்னியாகுமரி யில் நான் பேசுவதை பெருமைப்படுகிறேன். நம் நாட்டில் 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிக நீளத்தில் கடற்கரை அமைந்துள்ளது.

    மீனவர்களின் வாழ்க்கை கடலை நம்பித்தான் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைச்சரகத்தை பிரதமர் ஏற்படுத்தி உள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப் பட்டுள்ளது. அதில் 200 பேர் கடன் பெற்று பயன டைந்துள்ளனர். கடன் அட்டை மூலம் பெரும்பா லும் பெண்கள் பலன் பெற் றுள்ளனர். பிரதமர் மோடி மீனவ மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது ரூ.3ஆயிரத்து 680 கோடி தான். தற்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டப்பணி களுக்கு மீன்வளத்துறையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை மூலம் நான் தமிழக மக்களின் கருத்துக் களை கேட்ட பிறகு ஒரு விஷயம் தெரியவந்தது.

    கடலில் 1000 கிலோ மீட்டர் தாண்டி சென்று மீன வர்கள் மீன் பிடித்துவருவது எனக்கு ஆச்சர்யமாக உள் ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மீன்வ ளத்துறை அதிகாரிகள், மத்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகள், மீனவர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 33-வது வார்டு சாய்நகர்தெருவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டு வீராணி பூங்கா அருகில் உள்ள தெருவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 30-வது வார்டு வரது தெருவில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 33-வது வார்டு சாய்நகர்தெருவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 44-வது வார்டு செயின்ட் ஆன்றனி தெருவில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும், 26-வது வார்டு ஊட்டுவாழ் மடம், சானல் கரை பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, உதவி பொறியாளர்கள் சந்தோஷ், ராஜசீலி, மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சந்தியா, கவுசிகி, நவீன்குமார், சொர்ணத்தாய், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், மாணவர் அணி அருண்காந்த், பகுதி செயலாளர்கள் சேக் மீரான்,

    ஜீவா, வட்ட செயலாளர் சாகுல் ஹமீது உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
    • கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    சின்னமனூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.114.29 லட்சம் மதிப்பீட்டில் சங்கிலி தேவன் குளம் புனரமைக்க ப்பட்டதையும், ரூ.65.97 லட்சம் மதிப்பீட்டில் 3.681 கி.மீ தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகளையும், சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.28.58 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட நீர்தேக்க த்தொட்டி, பொன் நகர் பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க த்தொட்டி கட்டுமானப் பணிகளையும், கண்ண ம்மாள் கார்டன் பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகளையும், குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நகராட்சி திட்டப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வருவத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் கைதி பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, சமுதாயப் பணி பதிவேடு, நடப்புத்தாள் பதிவேடு, சுற்றுக்காவல் பதிவேடு, மாதிரி பணி பதிவேடு, சீதன பதிவேடு, பொது நாட்குறிப்பு பதிவேடு மற்றும் நடப்பு தாள் பதி வேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார்.

    மேலும், கண்காணிப்பு கேமரா சரியாக இயங்கு கிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்ட றிந்தார்.

    ஆய்வின்போது சின்ன மனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் பன்னீர், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 46-வது வார்டுக்குட்பட்ட ஈத்தாமொழி குறுக்கு தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில், 

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் மகேஷ் மேயர் தொடங்கி வைத்தார். 41-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் பி.யூ கார்டன் பகுதியில்ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 40-வது வார்டுக்குட்பட்ட புங்கையடி விநாயகர் தெருவில் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    46-வது வார்டுக்குட்பட்ட ஈத்தாமொழி குறுக்கு தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 35-வது வார்டுக்குட்பட்ட கணபதி நகர் மேல தெருவில் ரூ11.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 27-வது வார்டுக்கு உட்பட்ட ஆசாரிமார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 25-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் அனிலா, வீரசூர பெருமாள், ராணி, கோபால சுப்பிரமணியன், அக்சயா கண்ணன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், ராஜேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை மற்றும் உணவை ஆய்வு செய்து போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா மாணவ ர்களிடம் கேட்டறிந்தார்.
    • குடிநீர் பணிகள், சாலை பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணன் டஹள்ளி, கெரிக்கே ப்பள்ளி, சாலமரத்துப்பட்டி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளா ட்சித்துறை சார்பில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும், கண்ணன்டஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி கண்ணன் டஹள்ளி ஊராட்சி, அத்திகா னூர் கிராமத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் (2023-2024) நிதியாண்டு கீழ் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு சம உயர வரப்பு அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    அங்கு பணியாளர்களின் வருகை பதிவேடு, வேலை வழங்கப்பட்ட நாட்கள், ஊதியம் வழங்கப்பட்ட விவரங்களை பார்வை யிட்டார். மேலும் பதிவேடுகளை சரியாக பராமரிக்க பணிதள பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அத்திகானுர் கிராமத்தில் 15 வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் செங்குத்து உறிஞ்சிக் குழியுடன் புதியதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு கால்வாயின் நீளம் அகலம் மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கூச்சூர் தோழனூர் கிராமத்தில் உள்ள 60 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு பைப்லைன் அமைக்கும் பணிகள், மின் இணைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கூச்சூர் கிராமம் ராஜீவ் நகர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை கூடுதல் தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை மற்றும் உணவை ஆய்வு செய்து போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா மாணவ ர்களிடம் கேட்டறிந்தார்.

    இதே போல கெரிகேப்ப ள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களில் வர்ணம் பூசும் பணிகள், சமையல் அறை கட்டுமான பணிகள், சாலை பணிகள், என மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த குடிநீர், சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக கண்ணன்டஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொ றியாளர் பசுபதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமார், துரைசாமி, உதவி பொறியாளர்கள் சாஸ்தா, ஜமுனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×