என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10.45 கோடி மதிப்பிலான  வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    ரூ.10.45 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்

    • ரூ.4.50 கோடி மதிப்பில் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டுமான கட்டடப் பணிகள் நடக்கிறது.
    • பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் திட்ட பணிகளை தரமானதாகவும், ஒப்பந்த காலத்திற்குள்ளாக கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்று வரும் ரூ.10.45 கோடி மதிப்பிலான

    வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் 2018 - 19 ஆம் நிதி ஆண்டில் ரூ. 2.66 கோடி மதிப்பில் கசடு கழிவு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 2021- 22 ஆம் நிதியாண்டில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, 2021 - 22 ஆம் நிதியாண்டின் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பில் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டுமான கட்டடப் பணிகள்,

    2022-23 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.79 கோடி மதிப்பீட்டில் பென்னாகரம் தேசிய நாயகன் ஏரி புனரமைத்து தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ரூ.10.45 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமானதாகவும், ஒப்பந்த காலத்திற்குள்ளாக கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி செய்பொறியாளர் சுப்பிரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி, பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், இளநிலை உதவியாளர் சின்னசாமி, வார்டு உறுப்பினர்கள் ராதிகாபாய் மாதவசிங், ஷானு, வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×