search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.37.56 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    தளி பகுதியில் திட்ட பணிகளை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்த காட்சி

    ரூ.37.56 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • பாகலூரில் ரூ.13.56 கோடி மதிப்பில் 19 தார்சாலைகள் போடும் பணிகள் என மொத்தம் ரூ.37.56 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • கொக்கரசனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், காடுகெம்பத்பள்ளியில் ரூ.11.50 கோடி மதிப்பில் 5 உயர் மட்ட பாலங்களின் கட்டுமான பணிகளையும், ரூ.12.50 கோடி மதிப்பில் 15 தார்சாலைகள் வலுப்படுத்தும் பணிகளையும், பாகூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.23.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், பாகலூரில் ரூ.13.56 கோடி மதிப்பில் 19 தார்சாலைகள் போடும் பணிகள் என மொத்தம் ரூ.37.56 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். ஓசூர் பிரகாஷ் எம்.எல்.ஏ, பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சேவகானப்பள்ளி ஊராட்சி, கொக்கரசனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் சீனிவாசரெட்டி, வெங்கடசாமி, உதவி செயற்பொறியாளர்கள் சிவசங்கரன், மாது, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சுபாராணி, தாசில்தார்கள் சுப்பிரமணி, சரவணமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×