search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி விபத்து"

    • வேலை முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா அன்னை வாசுகி தெருவை சேர்ந்தவர் ஜெகஜீவன் ராம் (வயது 65). இவர் சேலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வேலு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஜெகஜீவன் ராம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெக ஜீவன் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிப்காட்டுக்கு செல்லக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மறுகரையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு 3, 4-வது அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணு உலைக்கு தேவையான தளவாட பொருட்கள் ரஷியாவில் இருந்து அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் ரஷியாவில் இருந்து தளவாட பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அதனை லாரிகளில் ஏற்றி கூடங்குளத்திற்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை 2 லாரிகளில் ஒரு லாரிக்கு 8 வால்வுகள் வீதம் ஏற்றப்பட்டு திருச்செந்தூர் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    இதில் வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவர் ஒட்டி வந்த லாரி அதிகாலை 4.45 மணிக்கு முள்ளக்காடு அடுத்த ஓட்டல்காடு விலக்கு பகுதியில் வரும்போது, அங்கு இருந்து சிப்காட்டுக்கு செல்லக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுச் சுவர் மற்றும் காம்பவுண்டு கேட் ஆகியவை உடைந்து நொறுங்கியது. சம்பவ நேரத்தில் பணியில் இருந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மறுகரையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில் லாரி டிரைவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    • எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
    • மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூரில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மதுரவாடா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்த போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல டிரைவர் முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறின. இதனைக் கண்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையில் சிதறி கிடந்த மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மதுரவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மது பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்களை விரட்டி அடித்தனர். பின்னர் லாரியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பாக நின்றனர். இதையடுத்து மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.

    சாலையில் மது பாட்டில்களை அள்ளிசென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் குடித்து கும்மாளமிட்டனர்.

    • உறவினர் வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கண்ணக்கந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது 19). கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு கண்ணக்கந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். இன்று காலை அரட்டவாடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பாலாஜி பைக்கில் சென்றார்.

    கொட்டகுளம் அருகே வரும்போது எதிரே கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், பாலாஜி ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பாலாஜி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்
    • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

    வேலூர்:

    வேலூர், கஸ்பா ஆர்.என். பாளையத்தை சேர்ந்தவர் சதாம்பாஷா ( வயது 32), டிரைவர். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக சதாம்பாஷா ஓட்டிச் சென்ற மொபட் மீது திடீரென மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சதாம்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சதாம்பாஷா பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்பூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து நடந்தது
    • டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்

    ஆம்பூர்:

    சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பீர் கம்பெனியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மதுபான கடைக்கு பீர் பாட்டிகள் ஏற்றிச் சென்றத.

    லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் அருகே சோலூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் லாரியை 20 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை கிரேன் மூலமாக பள்ளத்தில் இருந்து லாரியை மீட்டு மாற்று லாரியின் மூலம் ரூ.46 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமானது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி லாரி டிரைவர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    வந்தவாசியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை போளூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.

    சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு அரசு பள்ளி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

    திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது. மேலும் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது.

    அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் முனியப்பன், மனைவி ஜெயலட்சுமி, மகன் ஏழுமலை இவரது மனைவி சுகன்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது.

    பஸ்சில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அரசம்பட்டு கூட்ரோடு அருகே வரும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி திடீரென பஸ் மீது மோதியது. இதில் பஸ்சும், கடெய்னர் லாரியும் சேதமானது. பஸ்சில் பயணம் செய்த தேப்பரம்பட்டு கிராமத்தை சேர்ந்த துளசி நாதன் (வயது 64). நாடக நடிகர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சில் படுகாயம் அடைந்து சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழை க்கப்பட்டு படுகாயம் அடைந்த வர்களை சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக துளசி நாதனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துளசி நாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சேத்து ப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துளசி நாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மற்றும் தாமரைக்கரை மலைப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு தினமும் கார், வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் அதிகளவில் இந்த வழியாக மைசூருக்கு சென்று வருகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து அட்டை லோடுகள் ஏற்றிக்கொண்டு அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி வழியாக ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை டிரைவர் நடராஜ் (வயது 52) என்பவர் ஓட்டி சென்றார்.

    இதையடுத்து அந்த லாரி பர்கூர்-மைசூரு நெடுஞ்சாலையில் சென்றது. தொடர்ந்து அந்த லாரி பர்கூர் அடுத்த வேலாம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த அட்டைகள் கீழே விழுந்து கிடந்தது.

    இதில் டிரைவர் நடராஜூக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை பெற்று பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அந்த பகுதியில சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பர்கூர் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. இந்த வேலாம்பட்டி பிரிவு பகுதியில் வரும்போது அடிக்கடி லாரிகள் கவிழ்வது நடந்து வருகிறது. ரோடு வளைவு பகுதியாக இருப்பதால் புதிதாக வரும் டிரைவர்கள் வளைவு பகுதியை கவனிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றனர்.

    • தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

    தொப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ராட்சத இரும்பு உருளையை ஏற்றி சென்று லாரி தருமபுரி மாவட்டம், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் ராட்சத உருளையும் சாலை ஓரம் கவிழ்ந்தது.

    இதை தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

    வாகன இடிபாடுகளில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தவிபத்தால் பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பின்னால் சென்ற லாரியின் டிரைவர் ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த முனிசாமி (வயது 55) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் லாரியில் சிக்கியிருந்து டிரைவரின் உடலை போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சாலை விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கன்னிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (வயது 60), மதியழகன் (55 ), சுப்பிரமணி (54). அனைவரும் கூலித் தொழிலாளிகள்.

    இவர்கள் 3 பேரும் வடுவூர் அருகே உள்ள புள்ளவராயன் குடிகாட்டில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை மூன்று பேரும் வீட்டில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது புலவர் நத்தம் பகுதியில் சென்றபோது அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்தனர்.

    இதற்காக மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் வளைவில் திருப்பினர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த மினி லாரி சாலையில் கிடந்த மூன்று பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் முனியாண்டி, மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×