search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம்
    X

    வீட்டின் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம்

    • தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    வந்தவாசியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை போளூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.

    சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு அரசு பள்ளி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

    திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது. மேலும் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது.

    அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் முனியப்பன், மனைவி ஜெயலட்சுமி, மகன் ஏழுமலை இவரது மனைவி சுகன்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×