search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் மீது லாரி மோதி டிரைவர் பலி
    X

    மொபட் மீது லாரி மோதி டிரைவர் பலி

    • பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்
    • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

    வேலூர்:

    வேலூர், கஸ்பா ஆர்.என். பாளையத்தை சேர்ந்தவர் சதாம்பாஷா ( வயது 32), டிரைவர். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக சதாம்பாஷா ஓட்டிச் சென்ற மொபட் மீது திடீரென மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சதாம்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சதாம்பாஷா பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×