search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி நாடக நடிகர் பலி
    X

    விபத்தில் நொறுங்கிய பஸ், கன்டெய்னர் லாரியை படத்தில் காணலாம்.

    பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி நாடக நடிகர் பலி

    • 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது.

    பஸ்சில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அரசம்பட்டு கூட்ரோடு அருகே வரும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி திடீரென பஸ் மீது மோதியது. இதில் பஸ்சும், கடெய்னர் லாரியும் சேதமானது. பஸ்சில் பயணம் செய்த தேப்பரம்பட்டு கிராமத்தை சேர்ந்த துளசி நாதன் (வயது 64). நாடக நடிகர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சில் படுகாயம் அடைந்து சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழை க்கப்பட்டு படுகாயம் அடைந்த வர்களை சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக துளசி நாதனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துளசி நாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சேத்து ப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துளசி நாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×