search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை விபத்து"

    • விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கன்னிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (வயது 60), மதியழகன் (55 ), சுப்பிரமணி (54). அனைவரும் கூலித் தொழிலாளிகள்.

    இவர்கள் 3 பேரும் வடுவூர் அருகே உள்ள புள்ளவராயன் குடிகாட்டில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை மூன்று பேரும் வீட்டில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது புலவர் நத்தம் பகுதியில் சென்றபோது அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்தனர்.

    இதற்காக மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் வளைவில் திருப்பினர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த மினி லாரி சாலையில் கிடந்த மூன்று பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் முனியாண்டி, மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேர் சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×