search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து- மது பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்
    X

    மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து- மது பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்

    • எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
    • மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூரில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மதுரவாடா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்த போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல டிரைவர் முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறின. இதனைக் கண்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையில் சிதறி கிடந்த மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மதுரவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மது பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்களை விரட்டி அடித்தனர். பின்னர் லாரியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பாக நின்றனர். இதையடுத்து மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.

    சாலையில் மது பாட்டில்களை அள்ளிசென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் குடித்து கும்மாளமிட்டனர்.

    Next Story
    ×