search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.46 லட்சம் பீர் பாட்டில்கள் மாற்று லாரி மூலம் அனுப்பி வைப்பு
    X

    ரூ.46 லட்சம் பீர் பாட்டில்கள் மாற்று லாரி மூலம் அனுப்பி வைப்பு

    • ஆம்பூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து நடந்தது
    • டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்

    ஆம்பூர்:

    சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பீர் கம்பெனியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மதுபான கடைக்கு பீர் பாட்டிகள் ஏற்றிச் சென்றத.

    லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் அருகே சோலூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் லாரியை 20 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை கிரேன் மூலமாக பள்ளத்தில் இருந்து லாரியை மீட்டு மாற்று லாரியின் மூலம் ரூ.46 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமானது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி லாரி டிரைவர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×