search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி காவலாளி பலி
    X

    லாரி மோதி காவலாளி பலி

    • வேலை முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா அன்னை வாசுகி தெருவை சேர்ந்தவர் ஜெகஜீவன் ராம் (வயது 65). இவர் சேலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வேலு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஜெகஜீவன் ராம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெக ஜீவன் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×