search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் கடை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    சென்னை:

    அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகள் என மொத்தம் 82 கடைகளிலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 கடைகள் என மொத்தம் 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    67 பண்ணை பசுமைக்கடைகள், 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ஆக உயர்ந்துள்ளது. நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மலிவு விலையில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.

    • வனத்துறை ஊழியர்கள் பிடித்து சென்றனர்
    • ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே முளகு மூடு பகுதியில் காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் முளகுமூடு ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் ரேஷன் பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். இந்நிலை யில் திடீரென 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ரேஷன் கடைக்குள் புகுந்தது. இதனை கண்ட ஊழியர் உள்பட பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.

    இதுதொடர்பாக கவுன்சி லர் பிரேமசுதா தீய ணைப்புதுறைக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். குலசேகரம் வன அலுவலர் ராஜா மற்றும் வன துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    தக்காளி விலை ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தக்காளி கிலோ இன்னும் ரூ.120 முதல் ரூ.130 வரை சில்லறை காய்கறி கடைகளில் விற்கப்படுவதால் குறைந்த அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது. கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறைந்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது.

    கர்நாடகாவில் தக்காளியை அதிக விலைக்கு வாங்கி வந்து நஷ்டத்திற்கு தான் கூட்டுறவு சங்கங்கள் தற்போது தக்காளியை விற்கின்றன. இதனால் குறைந்த அளவில் தான் ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு விற்பனைக்கு வரும் தக்காளி 11.30 மணிக்குள் விற்று விடுகின்றன.

    இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி கிடைப்பது இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    அடையார், மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, 60 டி.யு.சி.எஸ். நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடைக்கு 42 கிலோ தக்காளி வினியோகம் செய்கிறோம். அவை 11 மணிக்குள் விற்று விடும். தக்காளி அதிக விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு கிலோ ரூ.60-க்கு விற்பதால் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அரசின் முடிவை ஏற்று விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பபடிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வந்தி ருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள 215 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.

    ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் தினமும் காலை 40 பேருக்கும், மாலை 40 பேருக்கும் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.

    இதேபோல் தோவாளை தாலுகாவில் 59 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கல்குளம் தாலுகாவில் 126 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் இன்று 400 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்ட பொது மக்கள் அந்த விண்ணப்ப படிவங்களை முகாம் நடை பெறும் அன்று வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முகாம் நடைபெறும் பகுதியில் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கும் தன்னார் வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவார்கள்.

    எனவே பொதுமக்கள் முகாம் நடைபெறும் அன்று விண்ணப்ப படிவங்களை அதற்கான ஆவணங்களுடன் அந்த இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் 400 ரேஷன் கடைகளில் மகளிர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் கள் வழங்கப்பட்டது.

    2-வது கட்டமாக முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு அடுத்த கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
    • இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

    ராணிப்பேட்டை :

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பருப்பு மக்கி கட்டியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எங்களுக்கு இந்த பருப்பு வேண்டாம், அடுத்த மாதம் சேர்த்து வழங்குங்கள் என கேட்டனர்.

    இதனால் ரேஷன் கடை விற்பனையாளருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேஷன் கடை விற்பனையாளர், எங்களுக்கு இந்த பருப்புதான் வந்துள்ளது. அதைத்தான் கொடுக்க முடியும் என்று கூறினார்.

    ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான பருப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

    வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் அளவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

    • பெரம்பலூரில் 2 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
    • விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட விளாமுத்தூர் சாலையில் உள்ள இளங்கோநகர் மற்றும் வடக்குமாதவி சாலையில் உள்ள கிரசண்ட் நகர் ஆகிய பகுதிகளில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் இயங்கும் வகையில், 1,728 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் புதிதாக முழு நேரமும் இயங்கும் வகையில் 2 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். புதிய ரேஷன் கடைகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூருக்கு ரூ.108 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் வழங்கும் பிரத்யேக திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளிலும் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, சாலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.2 கோடி கூடுதலாக நிதி கேட்கப்பட்டுள்ளது, என்றார். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகாராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர் சஹர்பானு, கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) அரப்பலி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
    • ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம்.எல்.ஏ.,திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம்,மற்றும் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ. சேகர், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் உதயகுமார், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரேஷன் கடை திறப்பு விழா முடிந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ.,விடம் ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்றுகோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

    • புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
    • அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சியின் ஓ.எம்.ஆர் எல்கையான 12வது வார்டு, பவளக்கா சத்திரம் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள பூஞ்சேரிக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கவுன்சிலர்கள் மோகன்குமார், சரிதா கோவிந்தராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் கோடாலி கிராம மக்கள் தனி ரேஷன் கடை கேட்டு குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்
    • இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை பழுதடைந்தது. அதனை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஏற்கனவே இருக்கும் ரேஷன் கடை ஒரு தரப்பினருக்கு உரிய இடத்தில் இருப்பதாகவும் எனவே ஊருக்கு பொதுவான இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனை வலியுறுத்தும் வகையில் நேற்று திடீரென புதிய ரேஷன் கடை அமைத்து தரக்கோரி ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்த மக்களுக்கு அரிசி பைகளை வழங்கி பா.ம.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு மாநில பா.ம.க. துணைத் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர் குமணன், உதயநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜ்மோகன், உதயநத்தம் மற்றும் கோடாலி பகுதிகளை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது சுமார் 270 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கப்பட்டது. இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் திருமாவளவன் பேசியது: மிக எளிமையாக தீர்க்கப்பட்டு இருக்க வேண்டிய மக்கள் பிரச்சனை தற்போது போராடி பெற வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்களிடம் இதுவரை அதிகாரிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தவோ, தீர்வு காணவோ முயற்சி செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மின்னணு பரிமாற்றம் மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளது.

    இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் ( 'கியூ ஆர் கோடு') மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.

    இதனால் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்தநிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×