search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flat House"

    • பிளாட்டில் சில வாஸ்து குறைகள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு.
    • பிளாட்களில் கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே அமைத்திருக்கும்.

    உயர்ந்து வரும் விலைவாசிகள் காரணமாக நகர்ப்புற வாழ்க்கையில் சொந்த தனி வீடு என்பது காஸ்ட்லியான ஒன்றாக மாறியிருக்கிறது. அதற்கு மாற்றாக அமைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தனி வீடு லட்சியத்தை பலருக்கும் சாத்தியமானதாக ஆக்கியிருக்கிறது.

    பல சிரமங்களுக்கு இடையில் அடித்து பிடித்து, கையில் உள்ள தொகையை முன்பணமாக போட்டு, மீதித்தொகைக்கு லோன் போட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்கியிருப்பது பலருக்கும் அனுபவமாக இருக்கும். பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களின் கனவுகளை பிளாட் வீடுகள் நனவாக மாற்றி இருக்கின்றன.

    அவ்வாறு வாங்கிய பிளாட்டில் சில வாஸ்து குறைகள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு. வீட்டின் நுழை வாசலுக்கு எதிராக வேறொரு வீட்டின் நுழைவாசல் இருப்பது, லிப்ட் அல்லது மாடிப்படிக்கட்டுகள் அமைந்திருப்பது போன்ற வாஸ்து குறைகள் பல இடங்களில் இருக்கும்.

     அடுக்குமாடி குடியிருப்புகளில் தலைவாசல்கள், வெவ்வேறு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். நான்கு திசைகள் மற்றும் மற்ற கோண திசைகள் ஆகியவற்றிலும் தலைவாசல்கள் அமைவது உண்டு. மேற்கண்ட சிக்கல்களில் தலைவாயிலுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள குறைகளை சரி செய்வதற்கு வாஸ்து வல்லுனர்கள் தரும் டிப்ஸ் பற்றி காணலாம்.

    அடுக்குமாடி வீடுகளின் தலைவாசலுக்கு எதிராக உள்ள லிப்ட் முன்னேற்றத்தை தடுப்பதாகவும், லிப்டின் கதவுகள் அடிக்கடி திறந்து மூடுவதன் காரணமாக, எதிர்மறை சக்திகள் எதிரில் உள்ள வீட்டை பாதிப்பதாக கருதப்படுகிறது.

    மேற்கண்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்காக, தலைவாசல் கதவின் மேல்பகுதியில் குவியாடி ஒன்றை பொருத்த வேண்டும். கதவு நிலைக்கு வெளிப்புறமாக இரண்டு அங்குல அளவில் வாயில்படி போன்ற அமைப்பையும் பொருத்தலாம். அதன் காரணமாக, வீட்டுக்குள் நுழைபவர்கள் படியின்மீது ஏறி உள்ளே செல்வது போல இருக்கும்.

    பல பிளாட்களில் கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே அமைத்திருக்கும். அப்போது இரண்டு கதவுகளும் ஒரே அளவில் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

    வீட்டுக்குள் உள்ள அறைக்கதவுகள் நேர் எதிராக இல்லாமல், சற்று விலகி இருக்கும் பட்சத்தில், கதவுகளுக்கு எதிரே உள்ள சுவரில் ஒரு நிலைக்கண்ணாடியை பொருத்துவது அவசியம்.

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×