என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை அருகே ரேஷன் கடையில் மக்கிப்போன பருப்பு வினியோகம்
- பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
- இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பருப்பு மக்கி கட்டியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எங்களுக்கு இந்த பருப்பு வேண்டாம், அடுத்த மாதம் சேர்த்து வழங்குங்கள் என கேட்டனர்.
இதனால் ரேஷன் கடை விற்பனையாளருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேஷன் கடை விற்பனையாளர், எங்களுக்கு இந்த பருப்புதான் வந்துள்ளது. அதைத்தான் கொடுக்க முடியும் என்று கூறினார்.
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான பருப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்