search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியூ ஆர் கோடு"

    • மின்னணு பரிமாற்றம் மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளது.

    இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் ( 'கியூ ஆர் கோடு') மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.

    இதனால் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்தநிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் ெரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு
    • 9 இடங்களில் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது

    அரக்கோணம்:

    அரக்கோணம் ெரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் ெரயிலில் பயணிகள் செல்கின்றனர்.

    இவர்கள் டிக்கெட் எடுப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால் ெரயில் டிக்கெட் எடுக்கும் செயலி 'கியூஆர் கோடு' வசதி ஏற்படுத்த ப்பட்டுள்ளது.

    இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட் தவிர்த்து சாதாரண ெரயில், விரைவு ெரயில், அதிவிரைவு ெரயில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அரக்கோணம் ெரயில் நிலையத்திலிருந்து 50 மீட்டர் தொலைவு வரை இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

    ெரயில் நிலைய வளாகத்திற்குள் 9 இடங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.

    செங்குட்டுவன் மற்றும் அப்துல் கலாம் சாரணர், மணிமேகலை மதர் தெரசா சாரணியர் இயக்கம் தென்னக ெரயில்வே மத்திய மாவட்டம் இணைந்து பயண சீட்டு செயலி வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.

    செங்குட்டுவன் சாரணர் இயக்க குழு தலைவர் குமாரசாமி தலைமையில் அப்துல் கலாம், சாரணர் இயக்க குழு தலைவர் திலீப் குமார் முன்னிலையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    பயண சீட்டு முதன்மை அலுவலர் காதர் ஷெரிப், ஸ்டேஷன் மாஸ்டர் சுபாஷ் குமார், ெரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    கியூ ஆர் கோடு குறித்து சாரண சாரணியர் இயக்க மாணவ- மாணவிகள் ெரயில் பயணிகளிடம் விளக்கிக் கூறினர்.

    இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர், பிந்து புவனேஸ்வரி, ரம்யா, ஷர்வன் குமார், கஸ்தூரிபாய், ராம் தயால் போலி, கீர்த்தி வாசன், சுகன்யா, பிரியங்கா, சங்கீதா, மற்றும் சாரணர் சாரணியர் இயக்க மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழிப்பறை சுத்தமாக உள்ளதா, போதுமான தண்ணீர், காற்றோட்டம், வெளிச்சம், கதவுகளின் தாழ்பாள் உள்ளதா, துர்நாற்றம் வீசுகிறதா உள்ளிட்ட 7 கேள்விகள் உள்ளன.
    • கழிப்பறைக்கு ரேட்டிங் வழங்க 5 ஸ்டார் மதிப்பீடு வரை வசதி செய்துள்ளனர்.

    தேனி:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறைகளில் தூய்மை, பராமரிப்பு மற்றும் குறைகள் குறித்து கருத்து தெரிவிக்க கியூ ஆர் கோடு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுகழிப்பிடங்கள், கட்டண கழிப்பிடங்களை சில ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சீரமைத்து சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி நகராட்சியில் உள்ள பொதுகழிப்பிடங்கள், சமூக சுகாதார வளாகங்கள் ஆகியவற்றின் நுழைவுவாயிலில், கியூஆர் கோடு கொண்ட போர்டு பொருத்துகின்றனர். கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் செல்போன் மூலம் கியூஆர்கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக இணையதளத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது.

    அதில் கழிப்பறை சுத்தமாக உள்ளதா, போதுமான தண்ணீர், காற்றோட்டம், வெளிச்சம், கதவுகளின் தாழ்பாள் உள்ளதா, துர்நாற்றம் வீசுகிறதா உள்ளிட்ட 7 கேள்விகள் உள்ளன. அந்த கழிப்பறைக்கு ரேட்டிங் வழங்க 5 ஸ்டார் மதிப்பீடு வரை வசதி செய்துள்ளனர். பேரூராட்சி சுகாதார வளாகங்களிலும் இந்த வசதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 35 கழிப்பிடங்களில் கியூஆர் கோடு பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் வரும் புகார்கள் டெல்லி தூய்மை இந்தியா திட்ட செயலில் பார்க்க முடியும். அவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சிக்கு தகவல் தெரிவித்து கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

    இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் சுகாதாரமான கழிப்பறை கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×