search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி பறிமுதல்"

    • பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை
    • ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் கடந்த ஒரு வாரமாக சங்கமித்ரா, லால் பாக், சேஷாத்ரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பாதுகாப்பு படை போலீஸ்சார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் ரெயில்களில் மர்ம நபர்கள் சிக்னலுக்காக மெதுவாக செல்லும் ரெயில்களில் முட்புதரின் மறைவில் சிறு சிறு மூட்டைகளாக பதுக்கி வைத்து ரெயில்கள் மூலம் கடத்துவதை கண்காணித்த பாதுகாப்பு படை போலீசார் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே 1.5 டன் ரேஷன் அரிசியும், ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி என மொத்தம் 2.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் எடுத்து வந்து நேற்று வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் என்பவரிடம் ஒப்படைத்தனர்.

    • காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. .
    • ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள சன்னியாசிகுண்டு மாரியம்மன் கோவில் அருகில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த காரில் 4 சாக்கு மூட்டையில், சுமார் 200 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பம், போடி, உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது ெதாடர் கதையாகி வருகிறது.
    • சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம், போடி, உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது ெதாடர் கதையாகி வருகிறது. அதிகாரிகள் இவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

    மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்பாதுகாப்பு துறையின் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் குழுவினர் தீவிர கண்காணப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை தியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் டிரைவர் சுல்தான், உரிமையாளர் ராஜாராம் ஆகியோர் சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் உத்தமபாளையம் கிட்ட ங்கியில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.

    • பெண்ணாடம் அருகே வீட்டில் பதுக்கிய ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.

    கடலூர்.

    பெண்ணாடம் அருகே, எடையூர் புதுகாலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவருக்கு அதே பகுதியில் காமராஜர் தெரு வில் பழைய ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.

    அப்போது, ராமச்சந்திரன்வீட்டில் 30 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 2,500 கிலோ எடையிலான ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆய்வாளர் கவியரசுவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திரனிடம விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தனியாக டிராக்டர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் டேங்கரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • நூதன முறையில் தண்ணீருக்கு பதிலாக டேங்கர் முழுவதும் ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி-வத்தலக்குண்டு ரோட்டில் தனியார் மாவுமில் உள்ளது. இங்கு ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் உத்தரவின்படி, வட்டாட்சியர் அறிவுறுத்தலின் கீழ் வட்ட வழங்கல் அலுவலர் பாலகுமாரன், போலீஸ் டி.எஸ்.பி. நல்லு மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது இந்த ரைஸ்மில்லுக்குள் மாவாக அரைக்க 15-க்கும் மேற்பட்ட மூடைகளில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அருகில் தனியாக டிராக்டர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் டேங்கரில் சோதனை நடத்தினர். அதில் நூதன முறையில் தண்ணீருக்கு பதிலாக டேங்கர் முழுவதும் ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

    சோதனை நடத்த அதிகாரிகள் வந்ததைத் தொடர்ந்து ரைஸ்மில் உரிமையாளர் கலா (வயது 60), அவரது மகன் பிரசாத் (25) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து 5 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி பதுக்கல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 3 டன் சிக்கியது
    • ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) இவரது வீட்டில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் எஸ்.ஐ.முத்தீஸ்வரன் ஆகியோர் சந்திரசேகர் வீட்டில் சோதனை செய்த போது வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 75 மூட்டையில் சுமார் 3 டன் கொண்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    இந்த ரேஷன் அரிசிகள் திருமால்பூர் அன்வர்திகான்பேட்டை பள்ளூர் பளப்பாக்கம் ரெட்டிவலம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு சேமிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் இதில் ரேஷன் கடையில் வேலை செய்யும் விற்பனையாளர்களும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இந்த பகுதியில் லாரி மூலம் ரேசன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், காரும் சிக்கியது.
    • அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆங்காடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள குடோனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி பாலிஷ் செய்து வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து லாரியுடன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 100 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், காரும் சிக்கியது. இது தொடர்பாக அரிசி ஆலையில் வேலை பார்த்து வரும் வட மாநில தொழிலாளர்கள் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆலையில் பதுக்கிய அரிசி மூட்டைகள் அனைத்தும் எடுத்த பின்னர் அரிசி ஆலைக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது வட்ட வழங்கல் அதிகாரி சண்முகசுந்தரம், தனிப்படை பிரிவு அதிகாரி குமார் உடன் இருந்தனர்

    • சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
    • டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தக்கலை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்தது.இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் வருவாய் ஆய்வாளர் சாமினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு தக்கலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.

    ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து துரத்தினார்கள்.சினிமா படப்பாடியில் சேசிங் சம்பவம் நடந்தது.சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று விளவங்கோடு ஞாரான்விளை பகுதியில் வைத்து காரை மடக்கினார்.அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குளச்சல் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சினிமா படம் பாணியில் நடந்த இந்த சேசிங் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகரில் பாலத்தின்கீழ் பதுக்கி வைத்திருந்த 1,880 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அண்மை காலமாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக விரோதிகள் ரேசன் அரிசியை வாங்கி அதனை ஆலைகளில் பாலீஷ் செய்து மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். மேலும் வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

    இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரம் பாலத்தின் கீழ் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீ சார் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது பாலத்தின் கீழ் கிட்டங்கி அமைத்து ரேசன் அரிசி பதுக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த 1,880 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் 

    • மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் பறக்கும்படை அலுவலர் தலைமையில் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர். அந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டது தெரியவந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி, கம்பம், உத்தமபாளையம், கூடலூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    அதிகாரிகள் ரோந்து சென்று மடக்கி பிடித்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    போடி அருகே முந்தல் சோதனைச்சாவடியில் தணிக்கையில் ஈடுபட்டபோது ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் அந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டது தெரியவந்தது.

    பிடிபட்ட அரிசியை உத்தமபாளையம் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்க உணவு கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.

    போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பே ட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கபுரம் ெரயில்வே நிலையத்தில் ரேசன் அரிசி கடத்த ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் ெரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு படை உதவி ஆய்வாளர் கேமன் குமா ர தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பிளாட்பாரம் அருகே முட்புதரில் 22 அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

    பின்னர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக பறக்கும் படைகுழு தேனி மாவட்டத்திலுள்ள எல்லை கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகியபகுதிகளில் திவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 1750 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கம்பம்:

    ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட வருவாய அலுவலர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேனி மாவட்டத்திலுள்ள எல்லை கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகியபகுதிகளில் திவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்பாதுகாப்புத்துறையின் பறக்கும் படை அலுவலர் (துணை வட்டாட்சியர்) முத்துக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் தாமைரைச்செல்வன் ஆகியோர் தலைமையிலான குழு உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட கம்பம் மெட்டு பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

    அப்பொபோது கேரள பதிவு எண் கொண்ட ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் சுமார் 1750 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி மூடைகள் கேரளாவிற்கு கொண்டு செல்லும் போது கம்பம் மெட்டு அடிவாரத்தில் கைப்பற்றப்பட்டது.

    ரேசன் அரிசியை உத்தம்பாளையம் தமிழ்நாடு வாணிபக் கழக கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் வாகனத்தை உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு குற்றவியல் புலனாய்வு மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×