search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.

    போடி அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • கம்பம், போடி, உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது ெதாடர் கதையாகி வருகிறது.
    • சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம், போடி, உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது ெதாடர் கதையாகி வருகிறது. அதிகாரிகள் இவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

    மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்பாதுகாப்பு துறையின் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் குழுவினர் தீவிர கண்காணப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை தியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் டிரைவர் சுல்தான், உரிமையாளர் ராஜாராம் ஆகியோர் சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்துடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் உத்தமபாளையம் கிட்ட ங்கியில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×