search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of ration rice"

    • பெண்ணாடம் அருகே வீட்டில் பதுக்கிய ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.

    கடலூர்.

    பெண்ணாடம் அருகே, எடையூர் புதுகாலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவருக்கு அதே பகுதியில் காமராஜர் தெரு வில் பழைய ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.

    அப்போது, ராமச்சந்திரன்வீட்டில் 30 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 2,500 கிலோ எடையிலான ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆய்வாளர் கவியரசுவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திரனிடம விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • டிரைவர் கைது
    • 45 கிலோ எடை கொண்ட 60 வெள்ளைநிற சாக்குமூட்டையில் இருந்தது

     கோவை,

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் கோபிநாத், சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீசார் கோவை குனியமுத்தூர் - பாலக்காடு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அவ்வப்போது சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை நிறுத்தி வாகன சோதனையும் செய்துவந்தனர். அப்போது குனியமுத்தூர் - பாலக்காடு ரோட்டில் ஒரு மினி லாரி விபத்து ஏற்பட்ட நிற்பதாக இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மினி லாரியில் சுமார் 45 கிலோ எடை கொண்ட 60 வெள்ளைநிற சாக்குமூட்டையில் 2700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டதும் டிரைவர் தப்பிச்செல்ல முயற்சி செய்தார். இதனை பார்த்த அதிகாரிகள் டிரைவரை மடக்கிப்பிடித்தனர்.

    விசாரணையில் டிரைவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜிஜோ ஜெபஸ்டின் என்பதும் முருகேச பாண்டியன் என்பவர் டிரைவர் வேலைக்கு தன்னை அழைத்து சென்று மினி லாரியில் அரிசியை ஏற்றி கேரளா சென்று நிறுத்தி வைக்கவும் கூறியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜிஜோ ஜெபஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் மினி வேன் மற்றும் அரிசி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

    ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 25.4.2014 அன்று அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாழவந்தான் கோவில் அருகே இருசக்கரவாகனத்தில் வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் இருந்து 100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள தொட்டியங்குளம் ெரயில்வே பாலத்தின் கீழ் பதுக்கிய 9 மூடைகளில் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் விசாரணை செய்ததில் அருப்புக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகியோரிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து சந்திரன், ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ரேஷன் கடை விற்பனையாளர் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய இருவருக்கும் தலா 3 வருட ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    ×